சிந்திக்க கவிகள்

  • உலக சமாதானம் விரைவில் மலரட்டும் அதன்பொருட்டு அருள் உள்ளங்கள் பெருகட்டும்!

    வாழ்க திருவேதாத்திரியம்!                          வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச்செல்வம்!                                   வளர்க அறிவுச்செல்வம்!!

    குருசீடர் உரையாடல்- 7

        (1002 வது பதிவு)

    நாள்:02-01-2024

                                                                                              உ.ச.ஆண்டு:02-01-39

    உலக சமாதானம் விரைவில் மலரட்டும்

    அதன்பொருட்டு அருள் உள்ளங்கள் பெருகட்டும்!

     

     

     

     

     

     


     

     

     

     

     

     

    வாழ்க வையகம்!                                                            வாழ்க வளமுடன்!!

  • உலக சமாதானம் விரைவில் மலரட்டும் அதன்பொருட்டு அருள் உள்ளங்கள் பெருகட்டும்!

    வாழ்க திருவேதாத்திரியம்!                           வளர்க திருவேதாத்திரியம்!!

                    வாழ்க அறிவுச்செல்வம்!                                        வளர்க அறிவுச்செல்வம்!!

    குருசீடர் உரையாடல்- 6

        (1001 வது பதிவு)

    நாள்:01-01-2024

                                                                                              உ.ச.ஆண்டு:01-01-39

    உலக சமாதானம் விரைவில் மலரட்டும்

    அதன்பொருட்டு அருள் உள்ளங்கள் பெருகட்டும்!

     

     

     

    குரு-சீடர் உரையாடல் ஆரம்பம்…

     

    வாழ்க வையகம்!                                                            வாழ்க வளமுடன்!!

  • சிந்திக்க கவிகள்-14 (999th Posting)

    வாழ்கமனிதஅறிவு!                                   வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க கவிகள்-14 (999th Posting)

                                                                                                                24-06-2022—வெள்ளி

    பிறவித் தொடர் (19-12-1960)

     வித்துவின் மூலம்தான் பிறவித் தொடர்.  இந்தத்  

    தத்துவத்தை உணர்ந்தவரே தனையறிய வல்லவர்கள்”

                                         (ஞா.க.1301)

    . . .  வேதாத்திரி மகரிஷி.

    பயிற்சி:-

    1. என்ன கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
    2. பிறவித் தொடர் என்பது என்ன?
    3. பிறவித் தொடர் தத்துவம் என்பது என்ன?
    4. தன்னையறிதல் என்பது என்ன?
    5. தன்னையறிவதற்கு தனித் தகுதி ஏதேனும் உள்ளதா? மனிதனாக இருந்தால் போதாவா? வல்லவர்கள் என்கிறாரே மகரிஷி அவர்கள்!!
    6. வல்லவர்கள் என்றால் என்ன பொருள்?
    7. தனையறிதலையும் பிறவித்தொடர் தத்துவம் அறிதலையும் ஏன் தொடர்புபடுத்துகிறார்? எவ்வாறு  தொடர்பு படுத்துகிறார்?
    8. பிறவித் தொடர் பற்றிய உண்மையை(தத்துவம்) அறிந்திருத்தல் எவ்வாறு தன்னிலை அறிதலில் வல்லவராக்க முடியும்/முடிகின்றது?
    9. பிறவித் தொடர்பு அறிதலையும் நான் யார் அறிதலையும் தொடர்பு படுத்திக்  கூறுவதில் உள்ள சூட்சுமம் என்ன? In other words what is the logic in that?(இவ்வினா  மேலே உள்ள   வினா எண் 7  ஐ பிரதிபலிப்பதாக உள்ளதா?)

    வாழ்க அறிவுச் செல்வம்!             வளர்க அறிவுச் செல்வம்!!


  • சிந்திக்க கவிகள்-13

          வாழ்க மனித அறிவு!                                  வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க கவிகள்-13

    05-05-2022-வியாழன்

    குறிப்பு: முதல் முறையாக சத்சங்கத்தின் இப்பகுதியில்  கலந்துகொள்பவர்கள் கவியினால் பயன் பெற மேற்கண்ட புதுயுக்தியை படித்துவிட்டு வரவும். ‘கவியினால் பயன் பெற’  என்பது  கவியினால் சிந்தித்தல் என்பதாகும்.    வாழ்க வளமுடன் அன்பர்களே! பயிற்சிக்கு முன்னர் கவியினால் பயன் பெற புதுயுக்தியை படித்துவிட்டீர்களா அன்பர்களே!

    இயல்பும் உயர்வும்

    அறிவை உணர்ச்சி வெல்லுவது இயல்பு

    அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு”

    . . .  வேதாத்திரி மகரிஷி

    . . .  (மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்து-22-12-1953)

    பயிற்சி:

    1. என்ன கூற வருகிறார் அறிவிற்கு அறிவியல் தந்த அருட்தந்தை அவர்கள்?
    2. இயல்பு என்றால் என்ன?
    3. உயர்வு என்றால் என்ன?
    4. அறிவு என்பது என்ன?
    5. உணர்ச்சி/உணர்வு என்பது என்ன?
    6. இயல்பு இயல்பாகவே இருந்துவிட்டால் என்ன நேரிடும்?
    7. அறிவு உயர்ந்ததா, உணர்வு உயர்ந்ததா?
    8. ஏன் அறிவு உணர்ச்சியை வெல்ல வேண்டும்?
    9. அறிவு உணர்ச்சியை வெல்வதற்காகத்தான் அகத்தாய்வு பயிற்சியா?
    10. அகத்தாய்வு பயிற்சி எவ்வாறு அறிவு, உணர்ச்சியை வெல்ல வைக்கின்றது?
    11. “மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்“ என உலகநாதா் உலகநீதியில் கூறுவது அறிவு உணர்ச்சியை வெல்வதற்காகவா?
    12. அறிவு உணர்ச்சியை வெல்வதற்கும், அளவும்-முறையும் (Limit and Method) காப்பதற்கும் தொடர்பு உள்ளதா?
    13. பொறிவாயில் ஐந்தவித்தான் என்பதற்கும் அறிவு உணர்ச்சியை வெல்வதற்கும் தொடர்பு உள்ளதா?
    14. புலன்களின் வலையில் சிக்காமல் (பொறிtrap) இருப்பதற்கும் அறிவு உணர்ச்சியை வெல்வதற்கும் தொடர்பு உள்ளதா?  வாழ்க வளமுடன்!

    வாழ்க திருவேதாத்திரியம்!  திருவேதாத்திரியம்! 

    வளர்க வளர்கவே திருவேதாத்திரியம்!!


  • சிந்திக்க கவிகள் -12

       வாழ்க மனித அறிவு!                                  வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க கவிகள்-12

    26-04-2022-செவ்வாய்

    ஒழுக்கவியல் கல்வி

    சாதனையே அறநெறி(21-12-1961)

    அறநெறியை போதிக்கப் புதிய நூல்கள்

    அவசியமே இல்லைஇனி: மேலும் மேலும்

    அறநூல்கள் எத்தனையோ இந்நாள் மட்டும்

    அறிஞர்பலர் அளித்துள்ளார்; அவையே போதும்

    அறம்பிறழா நெறிநின்று,  மக்கள் வாழ

    அவசியமாம் பொருட்களொடு கல்வி கிட்ட,

    அறவோரே திட்டமிட்டு அமுல் செய்வீரே!

    அதன் மூலம் அறம் வளரும்; உலகம் உய்யும்.  .. ஞா.க.க.எண். 533

                                                                . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  

                

    குறிப்பு: ‘கவியினால் பயன் பெற’  என்பது  கவியினால் சிந்தித்தல் என்பதாகும்.    வாழ்க வளமுடன் அன்பர்களே! பயிற்சிக்கு முன்னர் கவியினால் பயன் பெற புதுயுக்தியை படித்துவிட்டீர்களா அன்பர்களே!

     

    பயிற்சி:

     

    1. என்ன கூறுகின்றார் மகரிஷி அவர்கள்??

    2. அறநெறியை போதிக்கப் புதிய நூல்கள் இனி  அவசியம் இல்லை என எப்படி உறுதியாகக்  கூறமுடிகின்றது இருபதாம் நூற்றாண்டில்?

    3. சாதனையே அறநெறி என்றால் என்ன?

    4. இதுவரை அறநெறி சாதனையாக்கப்படவில்லையா?  ஏன்?  அறநெறி கருத்தியலாகக் கூறப்பட்டும் அதனை செயலுக்கு கொண்டுவர செய்முறை பயிற்சி இதுவரை ஏன் கொண்டுவரப்படவில்லை?  சாதனைக்கான  அவசியம் இதுவரை அறியப்படவில்லையா?

    5.  சாதனைக்கான வழிகள் தெரியவில்லையா? 

    6. அறம் பிறழாமல் மக்கள் வாழ்வதற்கு இப்போது எப்படி  மகரிஷி அவர்களால் தீர்வுகள் கூறமுடிகின்றது?

    7. அவசியமாம் பொருட்கள் கிட்டுவது ஒரு தீர்வாகக் கூறுகிறார்.  அதன் பொருள் என்ன?

    8. கல்வி வேண்டும் என்கிறார். அந்த கல்வி என்ன? அக்கல்விக்கான பெயர் என்ன? அக்கல்வி எப்போது ஆரம்பிக்கப்பட வேண்டும்?

    9. கல்வியால் மட்டுமேவா அறத்தை சாதனைக்கு கொண்டுவர முடியும்?  அறத்தை சாதனைக்கு கொண்டுவருவதற்கு  வேறு வழியில்லையா?

    10.  அறம் என்பது என்ன?  அதில் உள்ள அங்கங்கள் என்ன? அதில்  எது முதன்மையானது?

    11. நம் குருநாதர் வழியில் சிந்திப்போமே!  அவரது  சிந்தனைக்கும், எண்ணத்திற்கும் வலு சேர்ப்போமே! எப்படி? வாழ்க வளமுடன்!  

                                            வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!


     

  • FFC-301 துறவறம்

     வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

    lotus

    FFC-301

    29.07.2020-புதன்

    துறவறம்

    Analysis_of_Thought

    -வேதாத்திரி மகரிஷி அவர்கள்

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளிய பாடலுக்கு அவரே அருளிய விளக்கம்


    (உலக சமாதானம் – மூன்றாம் பாகம்: தத்துவ விளக்கம், 1957ம் ஆண்டு பதிப்பு)

     

    வாழ்க திருவேதாத்திரியம்!                  வளர்க திருவேதாத்திரியம்!!


  • குருபூர்ணிமா-அறிவிற்கு விருந்து-FFC – C295

    வாழ்க வையகம்!                                        வாழ்க வளமுடன்!!

    அறிவிற்கு விருந்து
    FFC – C295

    05.07.2020 – ஞாயிறு

    குருபூர்ணிமா

    vysa_maharishi_and_vethathiri_maharishi

    வாழ்கவளமுடன்

    அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டியவர்கள் அனைவரையும் குருபூர்ணிமா கொண்டாடும் இந்த தினத்தில் நினைவு கூர்வோம்.

    வருடத்தில் ஒரு நாள் குருபூர்ணிமா விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழா வியாசமுனிவரை நினைவுகூர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட விழாவாகும். வியாச முனிவர் நான்கு வேதங்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். பதினெட்டு புராணங்களை வழங்கியுள்ளார். மகாபாரதம் மற்றும் ஸ்ரீமத்பாகவதம் அருளியுள்ளார். வியாசமுனிவரை நினைவு கூறும் இவ்வேளையில் ஆன்மீக சாதகர்கள் அவரவர்களுடைய நேரிடை குருவினையும் நினைவு கூர்தல் நலம் பயக்கும்.


    எனவே இத்தருணத்தில் நமது குருவாகிய அருட்தந்தை அவர்களை நினைவு கூர்வோம். அப்படியென்றால் மற்ற நாட்களில் நமது குருவை மறந்து விட்டிருக்கிறோம் என்று பொருளல்ல. என்றைக்கு அவருடைய உயிராற்றல் நம்முடன் கலப்புற்றதோ அன்றைய தினத்திலிருந்து அவருடன் நாம் இணைந்தேதான் உள்ளோம்.

    எப்படியெனில் அருட்தந்தை அவர்கள் நமக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுத்து, அதற்கான பொருளையும், நமக்கு அறிமுகப்படுத்தி விட்டார். மூச்சு விடுவதுபோல் சிந்திப்பதும் நமக்கு சகஜமாகிவிட்டதால் சிந்திக்கும் போதெல்லாம் நம்முடைய குருவின் அறிவாற்றலுடன் தொடர்பு கொள்வதோடு மட்டுமல்லாது, சிந்திப்பதற்கு அவர் அறிமுகப்படுத்திக் கொடுத்த பொருளுடனும்(மெய்ப்பொருளுடனும்) தொடர்பு கொண்டு இணைந்து கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால் மூச்சு விடுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பது போல், சகஜ நிஷ்டை போல் எப்போதுமே சிந்தனையோடு இருப்பதால் எப்போதுமே குருவின் நினைவோடும் அதே நேரத்தில் அவர் அறிமுகப்படுத்திக் கொடுத்த சிந்தனைக்குரிய பொருளுடனே(மெய்ப்பொருள்) இணைந்தேதான் வாழ்கிறோம்.

    குருவோடு தொடர்பு கொள்வதோடு மட்டுமல்லாது அவரையும்(எப்பொருளை), அவரது செயலையும்(எச்செயலை), அவரது குணத்தையும்(எக்குணத்தை) அவரது உயிரையும்(எவ்வுயிரை) எப்போதும் (அடிக்கடி) நினைந்து கொண்டேதான் இருக்கிறோம். விளைவு இயல்பூக்க நியதிப்படி நம்முடைய அறிவினிலும் உடலினும் மாற்றங்கள் ஏற்பட்டு நம்முடைய மனிதப் பண்பேற்றம் நடை பெற்றுக் கொண்டு வருவதை நாம் உணர்ந்து கொண்டு வருவதில் ஆனந்தம் அடைகிறோம்.பிறவிப்பயனாகிய லட்சியம் நிறை வேற அந்த லட்சிய நாளுக்கு ஏங்கிக் காத்துக் கொண்டிருக்கிறோம்.
    அவரது செயலாலும் குணத்தாலும் அடைந்த உயர் புகழையும் நாம் மேலும் மேலும் நினைக்கிறோம். அறிந்து மகிழ்கிறோம். அவருடைய சூக்கும உடலுக்கு உளம் கனிந்த நன்றியினையும் அவரது அறிவாற்றலை சிரம் தாழ்த்தி வணங்கி போற்றுகிறோம். பாராட்டுகிறோம்.

    அருட்தந்தை அவர்கள் அருளுவதாவது:

    வினைப்பயனைப் போக்காமல் வீட்டையடைய விரும்புவதோ பொருந்திடாது
    தட்டுங்கள் திறக்குமென்றார் தனக்குள்ளேயே பேராற்றல் புதையல் கண்டோர்
    தக்கவழி அருட்குருவின் தாள் பணிந்து தவம் பயின்று தனை உணர்தல்”

    என்றும்

    எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
    தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்
    தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்”

    என்றும் அருள்கூர்ந்து தெரிவிக்கிறார் நமக்கு.

    அருள் துறையில் நுழைவதற்கே ஆர்வமில்லாமலும் வாய்ப்பில்லாமலும் இருக்கும் இச்சமுதாயத்தில், நாம் விரும்பி வாய்ப்புக் கிடைத்து, அருட்தந்தையின் சீடர்களாக வந்துள்ள நமக்கு, பயிற்சியின் வெற்றி தள்ளிப்போகும் போது நம்பிக்கை இழந்து பயிற்சியில் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நம்பிக்கை ஊட்டும் வகையில் அருட்தந்தை அவர்கள் மேலும் அருளுவதாவது

    “பலஆயிரம் பிறவி எடுத்து ஏற்ற பழிச்சுமைப் பதிவுகளை ஒரு பிறவி காலத்திலே மாற்றலாம்”என்கிறார்.

    இந்த தெய்வீக வரிகள் வாயிலாக நமக்கு உற்சாகத்தையும் உறுதியையும் அளிக்கின்றார். அதற்கு வழி கருமையத்தூய்மையாகும் என்கிறார். அதற்கு தவமும் அறமும் தேவை என்கிறார். மேலும் இறையுணர் பாதையிலே என்றும் விழிப்புடனே வாழ்வதுதான் அவ்வழி என்கிறார்.

    மேலும் “உத்தம நண்பர்காள் உங்களுக்கும் உரியது”என்கின்ற அவரது கருணை மொழி ‘பயணம் முடியாமல் தள்ளிப்போய்க் கொண்டிருக்கின்றதே, எப்போது வரும் அந்தநாள்’ என்கின்ற தீரா ஆன்மீக தாகத்திற்கு தெய்வீக நீரை அளிப்பது போல் உள்ளது.மேலும் நமக்கு நம்பிக்கை அளிக்கின்றது.

    மேலும் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது. தரம் உயர்த்துவது என்பது:– விலங்கினத்திலிருந்து சடுதிமாற்றமாக வந்த ஆதிமனிதனின் கருத்தொடர்தான் இன்றுள்ள நாமும்.

          எனவே

        நம்மிடம் உள்ள விலங்கினப் பதிவுகளைச் செயலிழக்கச் செய்து,

      பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் ஆகிய நான்கிலும் புகுந்து அழுந்தி மனதை புண்ணாக்கிக் கொள்ளாமல்  .

     எப்போதும் அயராவிழிப்பிலே(Awareness is God) இருந்து கொண்டு,

     மனிதப் பண்பான  அன்பிற்கும், கருணைக்கும் பாத்திரமாக திகழ்ந்து அறிவுத் தொண்டினை  செய்து வருதலே, கோடான கோடி மக்கள் வாழ்கின்ற இச்சமுதாயத்தில் நமக்கு மட்டும் குரு-சீடர் உறவு கிடைத்திருப்பதை நாள்தே்ாறும் நினைவு கொண்டு சுயதிருத்தம் பெற்று வருவதே நாம் நம் குருவிற்கும், அவர் வழியாக இறைக்கும் செலுத்தும் நன்றியாகும்.

    “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை”என்று அருளிய தெய்வத்தாய் அவ்வையை மதித்து தந்தைகளுக்கெல்லாம் தந்தையாக விளங்கும் நம்முடைய அறிவுக் கண்களையெல்லாம், திறந்து அறிவொளி வீசச் செய்துள்ள அருட்தந்தை அவர்களின் சொற்களையெல்லாம் மந்திரங்களாகக் கொண்டு எப்போதும் நினைந்து மதித்து நடந்து இப்பிறவியிலேயே பிறவிப்பயனை எய்துவோம். நம்முடன் வாழும் சக மனிதர்களையும் உய்விக்க அறிவுத் தொண்டாற்றி மகிழ்ந்து குருவின் சூக்கும சரீரத்திற்கு நன்றியினை செலுத்திப் பூரிப்படைவோம். அவரது கனவான ஓர் உலக ஆட்சியும், உலக அமைதியும் விரைவில் நிஜமாக, உறுதியான  எண்ண அலைகளை அழுத்தமாக பரப்புவோம். இதுவல்லவோ பிறவிப்பயன். மனிதப்பிறவியின் பயனில் இரண்டு அங்கங்கள் உள்ளன.

         ஒன்று, மனிதப் பிறவி எடுத்த நோக்கத்தையும் நிறை வேற்றிக் கொள்ள வேண்டும்.

        மற்றொன்று மனிதப் பிறவியின் நோக்கம் நிறைவேறிய பிறகு,

      நோக்கம் நிறைவேறிய பிறவி சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் அறிவுத்தொண்டாற்றுவது.

    இங்குதான் பிறவியின் நோக்கமும் நிறைவேறுகின்றது.

    நோக்கம் அறிந்த பிறவியும் சமுதாயத்திற்கும் பயனாகின்றது.

    வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

    guru_paadham

    வாழ்க திருவேதாத்திரியம்!                              வளர்க திருவேதாத்திரியம்!!


  • சிந்திக்க கவிகள்-11

       வாழ்க மனித அறிவு!                                  வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க கவிகள்11

    01-07-2020புதன்

    பயிற்சி:

    1. என்ன கூறுகிறார் உலக நல தொண்டரான நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?
    2. வாழ்வு என்பது என்ன?
    3. வாழ்வில் வளம் என்பது என்ன?
    4. வினை, உயிர், மெய், அறிவதால் வளம் கிடைக்கின்றதா? இவற்றை அறிவதால் எவ்வாறு வளம் கிடைக்கும்?
    5. பஞ்சதன்மாற்றங்களின் வகை தெரிவான் கட்டே உலகு என்று 20 நூற்றாண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் உரைத்தது போல அவரது 20 ஆம் நூற்றாண்டின் சீடரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் வினை, உயிர், மெய் ஆகியவற்றின் வகை அறிய என்ன செய்தார்?
    6. பகலிரவாய் எண்ணி எண்ணி என்றால் என்ன?

    7. ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்தேன் என்பதற்கு என்ன பொருள்? உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது என்கின்ற உறுதியை நினைவில் கொண்டு  மற்ற பணிகளுக்கும்-கடமைகளுக்கும் குந்தகம் ஏற்படாமல்  சிந்தித்து ஆன்மபலன் பெறலாமே?

    8. விடாமல் தொடர்ந்து ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்ததால் அவர் அடைந்த பலன்கள் என்ன? நாமும் அவ்வாறே பலன்களை அடையலாமே!
    9. வினாக்கள் எல்லாம் விடையாயிற்று என்றால் என்ன பொருள்?
    10. ஊழ் உணர்ந்தேன் என்றால் என்ன பொருள்?
    11. ஊழ், உயிர், வினை உணர்ந்தால்  வாழ்வில் வளம் பெருகும் என்கிறாரே! இது எளிமையாக உள்ளது அல்லவா?
    12. உயர் தொண்டு என்றால் என்ன? என்ன வகையான தொண்டு மகரிஷி அவர்களுடையது?
    13. தொண்டால் எப்படி மனநிறைவு உண்டாகும்? அந்த மனநிறைவை வரையறுக்க முடியுமா?

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!


     

  • சிந்திக்க வினாக்கள் – 306

    வாழ்க மனித அறிவு!                                                               வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள் – 306

                                                                                                                                                                            21.06.2020 –  ஞாயிறு.

    6 ஆவது சர்வதேச யோகா தினம்:  21.06.2020.

     

    வாழ்க சர்வதேச யோகா தினம்!    வளர்க சர்வதேச யோகா தினம்!
    வாழ்க சர்வதேச யோகா தினம்!     வளர்க சர்வதேச யோகா தினம்!
    வாழ்க சர்வதேச யோகா தினம்!     வளர்க சர்வதேச யோகா தினம்!

     

    வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன்!!

     

    வினா: திருவேதாத்திரியம் உலக மக்களுக்கு என்னென்ன அளித்துக்கொண்டிருக்கிறது? 

    விடை:

    1)    உடல் நலத்திற்கு,  மனவளத்திற்கு,  மனிதனுக்கும் இறைக்கும் புனித இணைப்பினை(Yoga is bridging Jeevathma and Paramathma) ஏற்படுத்துவதற்கு மனவளக்கலை யோகாவை அளிக்கின்றது. 

    2)    உடல் நலத்திற்கு எளியமுறை உடற்பயிற்சி அளிக்கின்றது.

    3)    முதுமையைத் தள்ளிப்போடுவதற்கு காயகல்ப பயிற்சியிளை அளிக்கி்ன்றது.

    4)    மனவளத்திற்கு தவப்பயிற்சியினை அளிக்கி்ன்றது.

    5)    மனிதனின் தரத்தை உயர்த்தும் தெய்வீகப் பயிற்சியான தற்சோதனை அளிக்கின்றது.

    6)   அறிவின் இருப்பிடத்தை தெரிவிக்கின்றது.

    7)   அறிவின் பயணத்தை, தன்மாற்றத்தைத் தெரிவிக்கின்றது.

    8)   அறிவின் இயக்கத்தைத் தெரிவிக்கின்றது.

    9)    துணிந்து தெய்வம் அரூபமான வெட்டவெளி என்கின்றது.

    10)   வெட்டவெளி சக்தியில்லையானால் வேறு எந்தப்பொருள் வலிது என வினா எழுப்பியுள்ளது.

    11)   வெட்ட வெளி ஒன்றுமில்லாதது என நினைக்கப்படும் நிலையில் வெட்டவெளிக்கு தரங்களையும், திறன்களையும் கூறுகின்றது.

    12)   ‘துணிந்துரைப்போம் அறிவே தெய்வம்’ என்கின்றது.

    13)   ஆன்மீகத்தையும் அன்றாட வாழ்க்கையையும் இணைத்துள்ளது.

    14)   வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றது.

    15)  ஒழுக்கம் உயிரைவிட மேலானது என்பதனை வலியுறுத்தி செயல்படுத்துவதற்கு இரண்டொழுக்கப் பண்பாட்டினைத் தந்துள்ளது.

    16)  ஒழுக்கம் பழக்கமாகிட, கல்வியில் ஒரு அங்கமாக ஒழுக்கப்பழக்கறிவை சேர்த்துள்ளது.

    17)  உயர் புகழ் அளிக்கக் கூடிய தொண்டிற்கு நல்வாய்ப்பினை அளித்துள்ளது.

    18)  அறிவு தனது பூர்வீகச் சொத்தான அமைதியினை அனுபவிக்க மனவளக்கலைலைய வடிவமைத்துள்ளது.

    19)  உலக சமாதானத்திட்டங்களை அளித்துள்ளது.

    20)  சமுதாயச் சிக்கல்களை எடுத்துரைத்து, அதற்கான தீர்வுகளைக் கூறுகின்றது.

    21)  தனிமனிதன், சமுதாயம், இயற்கை ஆகிய மூன்றிணைப்பைக் கருத்தில் கொண்டு ஆலோசனைகளைக் கூறுகின்றது.

    22)  போரில்லா நல்லுலகத்திற்கு வழிகாட்டுகின்றது.

    23)  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கின்ற உண்மையை எடுத்துரைக்கின்றது.

    24)  ஒன்றே பலவாகியது என்கின்ற ஒருமை இயலைத் தந்துள்ளது.

    25)  தனிமனிதனையும் உலகையும் உய்வித்து வாழவைக்கும் ‘வாழ்க வையகம். வாழ்க வளமுடன்’ என்கின்ற தாரக மந்திரத்தை அருளியுள்ளது.

    26)  மனிதன் சிந்தனையை வளர்த்துக் கொண்டிருக்கின்றது

    27)  மனிதனின் அறிவாட்சித்தரத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றது.

       இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். திருவேதாத்திரியம், Infiniteஎல்லையற்றதைப் பற்றிய விஞ்ஞானத்தைத் தருவதால்,      திருவேதாத்திரியத்தில் என்னென்ன கூறப்பட்டிருக்கின்றன எனக் கேட்டால் பட்டியல் எல்லையற்று நீண்டு கொண்டே போகும் என்பதால்,    அதற்கு பதிலாக, ஒன்றைக் குறிப்பிட்டு ‘இது பற்றி ஏதாவது கூறப்பட்டிருக்கின்றதா’ எனக் கேட்டால்,    ‘இருக்கின்றது’ என்கின்ற பதிலைத்தரும் எடுக்க, எடுக்க, அள்ள, அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக திகழ்கின்றது திருவேதாத்திரியம். ஏனெனில் பிரபஞ்ச களத்தில் பிறந்தது திருவேதாத்திரியம். தாய்த்திரு நாட்டின் புகழைக்கூறும் ‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்’ என்கின்ற திரைப்பாடல் வரியைப் போன்று என்ன வளம் இல்லை, இந்த மனவளத்தைப் பெருக்கும் மனவளக்கலை அருளியுள்ள இந்த திருவேதாத்திரியத்தில்’ என மகிழ்ச்சி பொங்கவே கூறுவர், ஐயமின்றி, இறையும்-மனமும் ஒன்றுபட்ட லட்சோப லட்ச பயனாளிகளான மனவளக்கலைஞர்கள்.

     வாழ்க திருவேதாத்திரியம்!   வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க வையகம்!              வாழ்க வளமுடன்!!


  • மனிதத் தேர்வு – PERSONALITY TEST-292(96) (மீள்பதிவு)

    வாழ்க மனித அறிவு!                                                        வளர்க மனித அறிவு!!

    மனிதத் தேர்வு – PERSONALITY TEST

    (மீள்பதிவு) FFC – 292(96)

                                                          17-06-2020-புதன்

    (01-07-2015)

     Personality_test-Q

        ‘மனிதத் தேர்வு’ என்கின்ற தலைப்பில் ஏற்கனவே நம் சத்சங்கத்தில் 30-10-2014 அன்று சிந்தித்து இருக்கிறோம்.  இருப்பினும் மீண்டும் அதே தலைப்பை எடுத்துக் கொண்டு ஆழ்ந்து/விரிவாக இன்று சிந்திக்க இருக்கிறோம்.  எட்டு மாதங்களுக்கு முன்னர், அதாவது இந்த இணைய தள www.prosperspiritually.com சத்சங்க ஆரம்பித்த இரண்டாம் நாள் இந்த தலைப்பில் சிந்தித்து இருக்கிறோம். அப்போது இணையதளம் ஆரம்பித்து ஒரிரு நாட்களே ஆனதால்  இணையதள சத்சங்கத்தில் கலந்து கொண்ட அன்பர்கள் மிகமிகக் குறைவு.  மீண்டும் அதே தலைப்பில் இன்று சிந்திக்க இருக்கிறோம்.  இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனிக்கவும்.

       முன்பு சிந்தித்ததைவிட இப்போது ஆழ்ந்து கூடுதலாக சிந்திக்க இருக்கிறோம்.   இது எதனால் சாத்தியமாகியது? இணையதள சத்சங்க அன்பர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், அவர்களின் எண்ணஅழுத்தத்தாலும், இன்னும் என்ன தெரிந்து கொள்ளப் போகிறோம் என்கின்ற அவர்களின் ஆர்வமிகு எதிர்ப்பார்ப்பாகிய அறிவுப்பசியைத் தீர்த்துவைக்கும் முகமாக இயற்கை/இறை  நடத்தி வைக்கும் நிகழ்வுதான் இந்த தலைப்பை மீண்டும் விரிவாக சிந்திக்க எடுத்துக் கொண்டது,  இதனை மேலும் உறுதிபடுத்துகின்ற நிகழ்வை இச்சிந்தனையின் இறுதியில் அறிவோம்.

        தலைப்பு  ‘மனிதத் தேர்வு’ என இருக்கின்றது.  தேர்வு என்றால் என்ன  என்பது யாவருக்கும் தெரியும்.    தேர்வு என்றால் கல்வி நிறுவனங்களில் அல்லது அலுவலகங்களில் ஒருவருடைய  படிப்பு, திறமை முதலியவற்றை சோதித்துப்பார்த்து  மதிப்பெண்கள் வழங்கப்படும். உதாரணத்திற்கு கணிதத் தேர்வை எடுத்துக் கொள்வோம். தேர்வு என்பது, குறிப்பிட்ட பாடதிட்டத்திற்குள் (syllabus) மாணவனிடம் வினாக்கள் கேட்டு, மாணவன் விடைகள் அளித்து, அது சரிபார்க்கப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும்.  மதிப்பெண்களைப் பொருத்து மாணவன் தேர்வில் தேர்ச்சி பெற்றாரா, இல்லையா என்று அறிவிக்கப்படும்.

    ஆனால் மனிதத் தோ்வு என்றால் என்ன?  யார், யாரை, எதில் தோ்வு செய்வது?  இது ஒரு புதுமாதிரியானத் தேர்வாக உள்ளதே!   மனிதத் தேர்வு என்பது மனிதத்தை தேர்வு செய்வது. மனிதத் தேர்வில், ‘எதில்’ என்பதற்கு விடைகிடைத்துவிட்டது, மனிதத்தை யார் தேர்வு செய்வது? தங்களுடைய மனிதத்தை தாங்களேதான் தேர்வு செய்து கொள்வது மனிதத் தேர்வு.  ஏன் மனிதத் தேர்வு என்கின்ற தலைப்பில் சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன?

       உயிரினப்பரிணாமத்தில் விலங்கினமாக வந்தஉயிர்தான், பின்னர், சடுதி மாற்றத்தால் (mutation)  மனித உயிராக வந்துள்ளது. ஆகவே விலங்கினத்தின்  பண்பாகிய பிறர்வளம் பறித்தல் என்கின்ற குணமும் மனித உயிரில் சேர்ந்து வந்துவிட்டது. மனிதன் என்றால் அவனிடம் அன்பும் கருணையும் இருக்க வேண்டும்.  இதுதான் மனிதம் எனப்படுகின்றது.  மனிதம் இருந்தால் தான்  அவன் மனிதன்.   மனம்+இதம்=மனிதன்.  இதம் என்றால் அன்பும் கருணையுமாக ஒத்தும் உதவியும் இருப்பது என்று பொருள் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    ஆகவே ஆன்மா தன்பரிணாமச்  சுழற்சியை முடித்துக்கொள்ள, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு பேரான்மாவாகிய இறைநிலையுடன் இணைந்து விடவேண்டும்.  இதற்காகவேதான் மனிதப்பிறவி.   ஆன்மா,  பிறவிஎடுத்தபிறகு,  மனிதனின் வாழ்க்கை தொடங்க ஆரம்பிக்கின்றது.   மனித வாழ்க்கை என்பது இயற்கை மனிதனைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி எனக்கொள்ளலாம்.

    கல்வித்தேர்வில் மாணவர்கள் விடை அளித்ததன் அடிப்படையில் பூச்சியத்திலிருந்து நூறு மதிப்பெண்கள்வரை வழங்கப்படுகின்றன. எல்லோராலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்கமுடிவதில்லை. ஒரு சிலரால் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்க முடிகின்றது, ஆகவே தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தது நாற்பது மதிப்பெண்களாவது  எடுக்கவேண்டும்  என்கின்ற கட்டாயம்உள்ளது.

    தேர்வில் தேர்ச்சி பெறாதவர் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.  அந்தத் தேர்விலும் தேர்ச்சி பெறாதவர் மீண்டும் மறுமுறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.  இதனையாவரும் அறிவர்.  தேர்ச்சி பெற்றால்தான் அந்தகல்வித்தகுதியை வைத்து வேலை கிடைத்து, வாழ்க்கைக்கு வேண்டிய பொருளை  ஈட்டி நிறைவாக  வாழ முடியும்.

            அதே போன்று தான் இயற்கை நடத்துகின்ற வாழ்க்கை என்கின்ற மனிதத்தேர்வில், அதாவது மனிதம் வெளிப்படுவத்துவதில்,  தேர்ச்சிபெறவேண்டும்.  மனிதம் வெளிப்படாததன் காரணமாக, ஏற்பட்டுள்ள வினையின் பயனை அனுபவிக்கத்தான் ஆன்மா மீண்டும் பிறவி எடுத்துள்ளது.   மனிதம் வெளிப்படுத்துவதில் நூறு மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி பெறுவது விரும்பத்தக்கதுதான் (Desirable).  நடைமுறையில் அப்படி இல்லை.  ஒரு கோடியில் ஒருவர்தான் நூறு மதிப்பெண்கள் எடுத்து மனிதத்தேர்வில் தேர்ச்சி பெற முடிகின்றது. பெரும்பாலோர் குறைந்தது நாற்பது மதிப்பெண்கள் கூட எடுத்து தேர்ச்சி பெறுவதில்லை. தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களான நாற்பது விழுக்காட்டிற்கும்  கீழ்,  பூஜ்ஜியத்திலிருந்து முப்பத்தொன்பது வரை எடுக்கும் நிலைதான் உள்ளது.

            இந்த மனிதத் தேர்வில் நூறு மதிப்பெண்கள் எடுத்தவர்கள்தான் அறிவின் முழுமை அடைந்த அறிஞர் அல்லது ஞானி எனக் கருதப்படுகிறார்கள்.  எப்படி கல்வித் தேர்வில் நூறு மதிப்பெண்கள் எடுத்தவருக்கு, அவருக்கும் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்களை விட நல்ல வேலை கிடைத்து, பொருளை செழிப்பாக ஈட்டி வாழ முடிகின்றதோ, அதுபோல் வாழ்க்கையில் நூறு மதிப்பெண்கள் எடுத்து, முதன்மையான ஞானி, இன்பத்திற்கெல்லாம் பெரிதான பேரின்ப வாழ்வு வாழமுடிகின்றது.

            மனிதத் தேர்வில் தேர்ச்சி பெற்றமற்றவர்கள் அவரவர் மதிப்பெண்களுக்குத் தக்கவாறு இன்பத்தையும் துன்பத்தையும் கலந்துதான் நுகரலாம்.  நூறு மதிப்பெண்கள் எடுத்தவரைப் போன்று சலிப்பில்லா,  துன்பமில்லாப்  பேரின்ப வாழ்வு வாழ முடியாது.

            மனிதத் தேர்வில் தேர்ச்சியே பெறாதவர்கள் இன்னும் மனித உடலில் விலங்கினமாகவே வாழ்பவர்கள் ஆவர்.  இங்கே மகரிஷி அவர்கள் மனிதனைப்பற்றி கூறும் கவியினைக் கவனி்ப்போம்

    perfect_man

       மனிதன் என்கின்ற உருவினிலே மாக்களும், மக்களும் இருக்கிறார்கள் என்கின்றார்.  விலங்கினப் பண்பை போக்கிக்கொள்ளாத, பிறர்வளம் பறிக்கின்றவர்களை மாக்கள் என்கிறார். விலங்கினப்பண்பை போக்கிக் கொண்டு வாழ்பவர்களை மனிதா்கள் என்கிறார்.  அதிலும் மனதை அறிந்து மனதை இதமாக வைத்துக் கொண்டு மற்ற உயிரினங்களுக்கும், மக்களுக்கும்  மனமுவந்து தொண்டாற்றுபவர்களை முழுமனிதன் என்கிறார்.

        மனிதத் தோ்வில் தேர்ச்சி பெறாதவர்கள்  துன்பத்தையே அனுபவிக்க வேண்டியிருக்கும்.  கல்வித்  தேர்விலாவது மீண்டும் ஒருமுறையோ அல்லது  இரண்டு அல்லது மூன்றாவது முறையோ தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது சாத்தியமாகின்றது.  ஆனால் மனிதத் தேர்வில் மட்டும் மீண்டும் மீண்டும் பல்லாயிரம் முறை  பிறவிகள் எடுத்தாலும் தேர்ச்சி பெற முடிவதில்லை.  இந்த அவல நிலைதான் இன்று மனிகுலத்தின் அமைதியின்மைக்குக் காரணம்.

             இந்த நிலையை மாற்றியமைக்க, மனிதன் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் தேவையாக இருந்தது இயற்கைக்கு.

    இச்சூழ்நிலையில்,

    1)  மனிதத் தேர்வில் முதலில் மனிதனை மனிதனாக்கி,  அதாவது மனிதத்தேர்வில்  40-99 மதிப்பெண்கள் எடுக்கவைப்பது. (வள்ளலார் கூறும் பரிபாக நிலை)

    2)   பிறகு improvement exam எழுதி அதிக மதிப்பெண்கள் எடுப்பது போல் அந்த மனிதனை இந்தப் பிறவியிலேயே நூறு மதிப்பெண்கள் எடுக்கச் செய்து அறிவை அறிந்த அறிஞராக்குவது; அறிவியலாளராக்குவது.(வள்ளலார் கூறும் சாகாவரம்)

        ஆகிய இரண்டு பணிகளைச் செய்து மனித சமுதாய வாழ்க்கையில் புரையோடிக் கிடக்கின்ற மூடப்பழக்கங்களையும்,   தேவையற்றவைகளையும் அடியோடு நீக்கி, புதிதாக நலம் தரும் அறிவுப் பூர்வமான பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி எந்நிலையிலும் ஒழுக்கவாழ்வு மலர்வதற்கு(revamp) இயற்கை கொண்டு வந்த திட்டம் தான் திருவேதாத்திரியம் என்கின்ற பெயரால் சமுதாயத்திற்குக் கிடைத்துள்ளது.  திருவேதாத்திரியம் கூறும் மந்திரத்தை நினைவில் கொள்வோம்.  திருவேதாத்திரியம்,

           “உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது” என்கின்றது.

        மேலும் பல்லாயிரம் பிறவிகளாக ஆன்மா சோ்த்து வந்த பழிச்செயல் பதிவுகளை ஒரு பிறவியிலே நீக்கிக் கொண்டு தூய்மை அடையலாம் என்கின்றார் மகரிஷி அவர்கள்.

    this_birth_is_enough_for_liberation

    பழிச் சுமைப்பதிவுகளை தூய்மை செய்வதால், மீண்டும் அந்தப்பதிவின் விளைவுகளாக துன்பம் வராமல் இருக்குமாதலால்.  நன்மை கிடைக்கின்றது என்கிறார்.

       விலங்கினப் பதிவுகளால்தான் பழிச்செயல்கள் வந்து சேர்ந்துள்ளன ஆன்மாவிற்கு.  ஆகவே விலங்கினப்பதிவுகள் நீங்கினால்தான்  பழிச்சுமைப்பதிவுகள் நீங்கும்.  விலங்கினப்பண்புகள் நீங்கிய ஆன்மா  மனிதனாகலாம் என்கிறார்.

       அதற்கு மேலும் திருவள்ளுவர் கூறுவது போல் ஐயப்படாது அகத்தை உணர்ந்தவர் தெய்வமாகலாம் என்றும் மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்.

      இதுதான் இயற்கை மனிதனுக்கு வைத்துள்ள தேர்வு எனக்கொள்கிறோம்.  யாரும் விரும்பிப் பிறப்பதில்லை.  வினைப்பயனை அனுபவிக்கவே மனிதன் பிறக்கிறான். வினைப்பயனை தீர்த்துக் கொண்டு பிறவிக் கடலை நீந்தி மீண்டும் பிறவாது இருக்க வேண்டும் என்பதனை இயற்கை மனிதப்பிறவிக்கு வைத்துள்ள நோக்கம் அல்லது தோ்வாகும்.

      எனவே தான் சங்கல்பத்தில் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம் என்கின்ற உலகியல்  வாழ்க்கைக்கு வேண்டியத் தேவைகளை மட்டும் வைக்காமல்,  சாதாரண மனிதன் உலகியல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டே மாண்புடையவனாக, மற்ற  சங்கல்பங்களாகிய, ‘சிவம் அறியப்படுவதால் மலர்கின்ற அன்பால்’ செய்கின்ற தன்னலமற்றத் தொண்டால் வரும் உயர்புகழ் மற்றும் மெய்ஞ்ஞானம் ஆகிய இரண்டையும் இணைத்துள்ளார்.  மகரிஷி அவர்கள்.  மனவளக்கலைஞர்களை இறைத்தூதுவர்கள் என்று கூறி, அருளை நிதியாகக் கொண்டவர்களாக்கி அருள்நிதி என்கின்ற பட்டத்தையும் சூட்டுகிறார் மகரிஷி அவர்கள்.

       மேலும் “யோகமும் மனித மாண்பும் -– Yoga for Human Excellence” என்கின்ற படிப்பை பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது இயற்கை/இறை. ஆகவே ஒவ்வொருவரும் மனித மாண்புத்தேர்வில் EXCELLENT GRADE ஐ பெறுகிறோம் என உறுதி கொள்வோம்.

    Personality_test-Answer

    எனவே இப்போதைய காலத்தின் கட்டாயத்தால்,இயற்கைகருணையோடுஅளித்துள்ள இந்த திருவேதாத்திரியத்தை  வாழ்த்துவோம். வணங்குவோம்.

                       வாழ்க திருவேதாத்திரியம்.  வளர்க திருவேதாத்திரியம்.

                                     வாழ்கவையகம்.வாழ்கவளமுடன்.

        ‘மனிதத் தேர்வு’ என்கின்ற இச்சிந்தனையை பதிவேற்றத்திற்கு (upload) தயார் செய்து  வைத்திருந்த வேளையில், 30-06-2015—செவ்வாய், ‘The Hindu’ ஆங்கில நாளிதழில் வந்துள்ள A personality test on Gita values’ என்கின்ற தலைப்பின் கீழ் வந்துள்ள செய்தியினை  நம் சிந்தனையுடன் இணைத்துக் கொள்வோம். அதனுடன் நகலைக் கீழே காண்கிறீர்கள்.  இந்து நாளிதழுக்கு நன்றி.   நாம் எடுத்துக் கொண்டுள்ள ‘மனிதத் தேர்வு’ என்கின்ற தலைப்பிற்கும், A personality test’ என்கின்ற இந்து நாளிதழில் வந்துள்ள தலைப்பிற்கும் உள்ள பொருத்தத்தைக் காணுங்கள்.  மனிதனுடைய personality ஐ, பகவத்கீதை போதிக்கின்ற விழுமியங்கள் அடிப்படையில் அளவிடுவதற்கு ஒரு இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என செய்தியிலிருந்து தெரிய வருகின்றது.

     Personality_Test_The_ Hindu_30th_Jun_2015

    முக்குணங்களால் மனித  உண்மை நிலையை புரிந்து கொள்ள முடிகின்றது எனப்படுகின்றது. இதுவரை அந்த இணையதளத்தின் வழியாக மாணவர்கள் உள்பட 10000 க்கும் மேல் தங்களை சோதித்துக் கொண்டதாக செய்தி கூறுகின்றது.  சத்வ, ரஜ, தமோ ஆகிய மூன்றையும், சோதிக்கின்றது என்கிறார் இணையதளத்தை உருவாக்கிய அன்பர், திரு. சதீஷ் மோத் அவர்கள்.  அவர் ஒரு பகவத்கீதை ஆராய்ச்சியாளர். அந்த இணையதளம் டாக்டர். மோத் அவா்களின் 20 வருட ஆராய்ச்சியினைக் கொண்டது என்கிறது செய்தி.  மீண்டும் ‘The Hindu’ நாளிதழுக்கு நன்றியினை இணையதள சத்சங்க அன்பர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.

        இந்த நிகழ்வு தற்செயலானதா அல்லது திட்டமிட்ட தெய்வீக நிகழ்ச்சியா (divine coincidence)? நாம் இந்த தலைப்பின் கீழ்  ஏற்கனவே சிந்தித்திருக்கிறோம்.  மீண்டும் இச்சிந்தனையை  ஆழ்ந்து சென்று கருத்துக்களை இன்று பதிவேற்றம் செய்ய விருந்தோம்.    இதனை, ‘The Hindu’ நாளிதழோ, திரு. சதீஷ் மோத் அவர்களோ அறிய வாய்ப்பில்லை. அதுபோல் நேற்று, ‘தி இந்து’ நாளிதழில் ‘A personality test on Gita values’ என்கின்ற செய்தி வரப்போகின்றது என்று நமக்கும் தெரியாது. இந்நிலையில் நேற்று அந்த நாளிதழில் வந்துள்ள  செய்தியும் நாம் எடுத்துக் கொண்ட தலைப்பும் ஒன்றாக இருக்கின்றது.  இந்த இருநிகழ்வையும் இணைத்து வைத்தது இயற்கை/இறை/அருட்பேராற்றலேதான்.  ஆகவே இயற்கைக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  இயற்கை நமக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கவும் வேண்டுகிறோம்.

         ஆகவே  அவரவர்களே தன்னை அறிவாட்சித்தரத்தில் சோதித்து பார்க்க வேண்டிய அவசியத்தை இயற்கை  அறிவுறுத்துகின்றது.  நாம் எடுத்துக் கொண்ட தலைப்பையும் ஆமோதிக்கின்றது. ஒருவருடைய குணத்தை சோதித்துப்பார்த்துக் கொள்ள ஒரு இணையதளமே உருவாக்கிக் கொடுத்துள்ளது இயற்கை.   ஆகவே ஒவ்வொருவரும் தன்னைத் திருத்திக் கொள்வதில் ஆர்வம் கொண்டு முயற்சி செய்து மனித மாண்பினை உயர்த்திக் கொள்ள வேண்டும். மனிதத் தேர்வில் மதிப்பெண்கள் அளிப்பது  என்பது இயலாது.  ஏனெனில் இது குணம் சார்ந்தது. மற்ற சோதனைகள் போன்று, எடைஅளவு, உயரம், மார்புச்சுற்றளவு,  ஆகியவைகளை எடுத்துக் கூறுவதற்கு அளவு கோல்கள் உள்ளது போல் மனிதத் தேர்வில் மனிதத்தை எடுத்துச் சொல்வதற்கு அளவுகோல்கள் இல்லை. என்றாலும் தனது இயல்பை அடிக்கடி அடிக்கடி சோதித்துக் கொள்ள வேண்டும் என்பதனை எடுத்துச் சொல்வதற்காகவே மனிதத் தேர்வு என்கின்ற தலைப்பு  சிந்தனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

        வேதாத்திரியம் அன்பும் கருணையும் மனிதனிடம் இயல்பாக மலர்வதற்கு இரண்டொழுக்க பண்பாட்டினை தவத்தின் முடிவில் ஓதச் சொல்கிறது.  இதனுடைய அடுத்த விரிவாக்கம், மனிதன் அன்றாடவாழ்வில் எந்தப்பணியைச் செய்து கொண்டிருந்தாலும் இடையிடையே இதனை ஓதி நினைவில் கொண்டிருக்க வேண்டும்.  அதாவது ஒருமணிநேரத்திற்கு ஒரு முறை 30 வினாடி நேரம் தேவையிருக்கும் இரண்டொழுக்கப் பண்பாட்டின் விரிவாக்கத்தைச் செயல்படுத்துவதற்கு.   அதாவது ஒரு மணிநேரத்தில் 30 வினாடி நேரம் செலவு செய்து ‘நான் இந்த ஒரு மணிநேரத்தில் இறையருளுக்கு பாத்திரமாக இருந்துள்ளேனா?’ என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். இது போன்ற பழக்கம் வந்துவிட்டால் நாளடைவில் ஒழுக்கத்தில் அயரா விழிப்புணர்வு நிலை வந்துவிடும்.  மனிதத் தோ்வில் மதிப்பெண்கள் கூடிக்கொண்டே வரும்நம்முடைய மனசாட்சிதான் நமக்கு மதி்ப்பெண்கள் அளிக்க வேண்டும்.  அதாவது நான் திருந்திக் கொண்டு வருகிறேன். விளக்க வழி வாழ்வதில் நாள்தோறும் முன்னேறி வருகிறேன் என்பதனை உறுதி செய்ய வேண்டும்.

    மகரிஷி அவர்கள் கூறுவதுபோல், மனதை அறிந்து,  மனதை இதமாக வைத்துக் கொண்டு, எந்த உயிர்களுக்கும் துன்பம் அளிக்காமல், மக்களுக்கு மனம் உவந்து தொண்டாற்றி மாமனிதாகி முழுமனிதனாவோம்.

    “குருவருள் இன்றேல் திருவருள் இல்லை”  என்கின்ற நிதர்சனத்தை மனதில் கொண்டு முதன் அறிவின் அறிவியலாளரும் நமது அருட்தந்தையுமான வேதாத்திரி மகரிஷி அவர்களின் பொற்பாதங்களை மானசீகமாக வணங்கி ஆசி பெற்று இன்புறுவோம்.  வாழ்க திரு வேதாத்திரியம்.  வளர்க திருவேதாத்திரியம்.

    வாழ்க திருவேதாத்திரியம்!                     வளர்க திருவேதாத்திரியம்!!


  • சிந்திக்க கவிகள்-10

       வாழ்க மனித அறிவு!                                  வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க கவிகள்10

    14-06-2020-ஞாயிறு

    “நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்

    உண்மை யறிவே மிகும்”.

    —குறள்        

     பயிற்சி:

    1. என்ன கூறுகிறார் பொய்யாமொழி தெய்வப்புலவர்?
    2. குறள் எந்த பாலில் எந்த அதிகாரத்தில் எந்த அதிகாரத்திற்கு பின் வருகின்றது? அதற்கான காரணங்கள் ஏதேனும் இருக்குமா?
    3.  ‘நுண்ணிய நூல்பல கற்பினும்’ என்றால் என்ன?
    4.  ‘மற்றும் தன் உண்மை அறிவே மிகும்’ என்பதில்   ’ மிகும்’  என்கின்ற சொல்லால் அறிந்துகொள்ள வேண்டியது என்ன ?
    5. பொதுவாக உரையாசிரியர்கள் கூறும் பதவுரை என்னென்ன?
    6. திருவள்ளுரை மானசீக குருவாகக் கொண்ட இருபதாம் நூற்றாண்டின் சீடரான பெருமைக்குரிய நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் இக்குறள் பற்றி கூறும் விளக்கம் என்ன?
    7. எந்த நூலில் மகரிஷி அவர்கள் இக்குறளுக்கு விளக்கமளிக்கிறார்?
    8. அதில் இந்த அதிகாரத்தில் மேலும் ஒரு குறளுக்கு விளக்கம் அளித்துள்ளதை நாம் மீண்டும் ஒருமுறை நினைவுகூர்வோம்.
    9. திருவள்ளுவரும் அவரது இருபதாம் நூற்றாண்டு சீடரும் சேர்ந்து ஒருமித்துக் கூறும் செய்தி என்ன?
    10.  இறையுணர்வு கருத்தியல் பாடத்தில் மிகுந்த தெளிவையும்(Theoretical understanding) செய்முறை பாடத்தில்(Practical realisation through Meditation-துரியாதீத தவத்தில்) தேர்ச்சியையும் வலியுறுத்துகிறார்களோ  இரு அறிஞர்களும்!?

    வாழ்க வள்ளுவம்! வளர்கவள்ளுவம்!!

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!