சிந்திக்க அமுதமொழிகள்

  • உலக சமாதானம் விரைவில் மலரட்டும் அதன்பொருட்டு அருள் உள்ளங்கள் பெருகட்டும்!

    வாழ்க திருவேதாத்திரியம்!                          வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச்செல்வம்!                                   வளர்க அறிவுச்செல்வம்!!

    குருசீடர் உரையாடல்- 7

        (1002 வது பதிவு)

    நாள்:02-01-2024

                                                                                              உ.ச.ஆண்டு:02-01-39

    உலக சமாதானம் விரைவில் மலரட்டும்

    அதன்பொருட்டு அருள் உள்ளங்கள் பெருகட்டும்!

     

     

     

     

     

     


     

     

     

     

     

     

    வாழ்க வையகம்!                                                            வாழ்க வளமுடன்!!

  • உலக சமாதானம் விரைவில் மலரட்டும் அதன்பொருட்டு அருள் உள்ளங்கள் பெருகட்டும்!

    வாழ்க திருவேதாத்திரியம்!                           வளர்க திருவேதாத்திரியம்!!

                    வாழ்க அறிவுச்செல்வம்!                                        வளர்க அறிவுச்செல்வம்!!

    குருசீடர் உரையாடல்- 6

        (1001 வது பதிவு)

    நாள்:01-01-2024

                                                                                              உ.ச.ஆண்டு:01-01-39

    உலக சமாதானம் விரைவில் மலரட்டும்

    அதன்பொருட்டு அருள் உள்ளங்கள் பெருகட்டும்!

     

     

     

    குரு-சீடர் உரையாடல் ஆரம்பம்…

     

    வாழ்க வையகம்!                                                            வாழ்க வளமுடன்!!

  • சிந்திக்க அமுத மொழிகள்-337 பகுதி – II  (998th Posting)

    வாழ்க மனித அறிவு!                               வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்-337 பகுதி – II  (998th Posting)

                

        13-06-2022 — திங்கள்

     

    அறிவிற்கு அமைதி எப்போது?

    அறிவை அறிய ஆர்வம் எழுந்துவிட்டால் அது   தன்னையறிந்து முடிக்கும் வரை அமைதி பெறாது.”

                                                           . . .   வேதாத்திரி மகரிஷி 

    பயிற்சி-பகுதி-II

    30-05-2022  அன்றைய சிந்திக்க அமுதமொழி பகுதியின் தொடர்ச்சி (முந்தைய பதினாறு வினாக்களையும் அறிய Please click here)

    17) கருத்தியல் விளக்கம்/விளக்க அறிவில்(theoretical understanding)  அழுத்தம் பெறுவது எவ்வாறு?

    18) கருத்தியல் விளக்கம்/விளக்க அறிவில்(theoretical understanding) விரைவில் அழுத்தம் பெறுவதற்கு அறிவிற்கு அயரா விழிப்புடன்,  அறிவுக்கூர்மையும் அவசியமன்றோ?

    19)அறிவின் விழிப்பு, அறிவுக் கூர்மை என்பன யாவை?

    20)  அயராவிழிப்பு நிலை என்பது நாம் அறிந்ததே.  அறிவுக்கூர்மை என்பது சிந்தனையேதான்! என்ன அன்பர்களே?

    21) அச்சிந்தனை தொடர் சிந்தனையாக இருக்க வேண்டாமா?

    22) தொடர் சிந்தனை என்பது சுவாசம் போல் இருக்க வேண்டும் என்பதுதானே  வலியுறுத்தப்படுகின்றது?  சுவாசத்தை  யாரும் மறப்பதில்லை.  அது அனிச்சை செயலாக நடப்பதுபோல் சிந்தனையும் மறவாமல் நடக்க வேண்டும் என்கிறாரா? அதாவது அனிச்சையாக நடக்க  வேண்டும் என்கிறாரா?

    23) ‘சிந்திக்கும்  அறிவு தன்னை அறியும் வரை அமைதி பெறாது’ என்கிறாரே! அதன் பொருள் என்ன?

    24) “அறிவை தன்னை அறிய நினைத்தால் அறிவிற்கு ஓய்வேது?” என்று வேறோர் இடத்தில் கூறியுள்ளார் மகரிஷி அவர்கள். அதே பொருளில் தானே   ‘அறிவு தன்னை அறிந்து முடிக்கும்  வரை  அமைதி பெறாது’ என்கின்ற பொன்மொழியிலும் கூறுகின்றார் மகரிஷி அவர்கள்? 

    25) ‘அறிவு தன்னை அறிந்து முடிந்துவிட்டால் அமைதி பெறும்’ என்பது என்ன?

    26)  அமைதி பெற்றுவிட்டால் அடுத்த நிலை பேரின்பம் (ecstasy)* தானே?  அதுதானே தன்னிலையில் நிலை பெறும் நிலை?  அனுபவ ஞானத்திலும்  முழுமை அடையவேண்டுமல்லவா? அதனைத்தானே அறிவின் முழுமைப்பேறு என்கிறார் மகரிஷி அவர்கள்? கருத்தியல் ஞானம்   அனுபவ ஞானத்தை எளிதிலும், விரைவிலும்  உறுதிபடுத்துமன்றோ?  இவ்விரண்டும் இணைதலைத்தானே   அறிவின் முழுமைப்பேறு என்கிறார் மகரிஷி அவர்கள்?  இதுதான்   ஆங்கிலத்தில் கூறப்படும் ‘Enlightenment’ எனப்படுவதா?

    (* ‘ Ecstasy’ க்கான மகரிஷி அவர்களின் வரையறையை அறிய ‘Logical Solutions For the Problems of Humanity’ என்கின்ற ஆங்கில நூலில் பக்கம் 30 ல் காணவும்.  தமிழ் பதிப்பான  ‘சமூக சிக்கல்களுக்கான ஆய்வுத் தீர்வுகள்’ – பக்கம் 23ல் பேரின்பத்திற்கான மகரிஷி அவர்களின் வரையறையைக் காண்க.)

     

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

       உலகெங்கிலும் பரவட்டும் திருவேதாத்திரியம்!!!

     

    வாழ்க சிந்தனைச் செல்வம்!           வளர்க சிந்தனைச்   செல்வம்!!


     

  • சிந்திக்க அமுத மொழிகள்-336  (997th Posting)-அறிவிற்கு அமைதி எப்போது?

    வாழ்க மனித அறிவு!                               வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்-336 பகுதி – I  (997th Posting)

                

        30-05-2022 — திங்கள்

     

    அறிவிற்கு அமைதி எப்போது?

    அறிவை அறிய ஆர்வம் எழுந்துவிட்டால் அது   தன்னையறிந்து முடிக்கும் வரை அமைதி பெறாது.”

    . . .   வேதாத்திரி மகரிஷி 

    பயிற்சி- பகுதி – I

    1) என்ன கூற வருகிறார் மகரிஷி அவர்கள்?
    2) ‘அமைதி பெறாது’ என்பது  எதிர்மறை(negative) போல்  அல்லவா தோன்றுகின்றது? அப்படி இருக்க முடியுமா? என்ன சூட்சுமம் உள்ளது இக்கூற்றில்?
    3) அமைதி என்பது மனம் இயங்கும் இன்பம், துன்பம் என்கின்ற இரண்டு படிகளைக் கடந்து  மூன்றாவது படியான அமைதியைக் கடந்துதானே  இறுதிப் படியான  பேரின்ப  நிலைக்குச் செல்ல முடியும் என்றல்லவா  பேரின்பவியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்?
    4) ‘அமைதி பெறாது’ என்றால் அமைதியின் கீழ்படிகளான இன்பம் மற்றும்  துன்பம் படிகளுக்கு அல்லவா மனம் சென்றுவிடும்!?  அப்படி இருக்க முடியுமா? மனவளக்கலையின் நோக்கம் அதுவல்லவே!?
    5) பேரின்பத்திற்கு இயல் ஏற்படுத்தியுள்ள(ஞா.க. கவி எண். 1849), எப்போதும் பேரின்ப நிலையிலேயே இருக்கும்  நம் குருநாதா்  தன் அனுபவத்தை  இந்த அமுதமொழியின் வாயிலாக வெளிப்படுத்தியதோடு, “உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது” (ஞா.க. எண். 1650) என்று மகரிஷி அவர்கள் வாழ்த்தியுள்ளதாலும்  நாமும் அவர்  அனுபவத்தைப் பெறவேண்டித்தானே கூறுகிறார் அன்றோ? ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்து இந்த பொன்மொழியின் அமுதத்தை பருக வேண்டுமல்லவா அன்பர்களே!? வாழ்க வளமுடன்!
    6)  எது வரை  அமைதி பெறாது என்று கூறுகிறார்?  அமுத மொழியின் முற்பகுதியைக் கவனிப்போம் இப்போது?  என்ன கூறுகின்றது?  ‘அறிவை அறிய ஆர்வம் எழுந்துவிட்டால்’  என்கிறார் மகரிஷி அவர்கள்.  ‘வரை’ என்றுதானே கூறுகிறார்? அப்படியானால் என்ன பொருள்படுகின்றது(implied meaning)? எதற்குப்பிறகு அறிவு அமைதி பெறும் என்பதைத்தானே கூற வருகிறாரல்லவா?

    7) ஆர்வம் எழுந்துவிட்டால் என்றால் என்ன பொருள்?  பொதுவாக ஏதேனும் ஒரு பயிற்சியை மேற்கொள்பவர் யாராயினும்  அதனை விருப்பத்துடன்  பயிற்சியைத் தொடர்வதுதானே இயல்பு?

    8) ‘ஆர்வம் எழுந்துவிட்டால்’ என்று மகரிஷி அவர்கள் கூறுவதில் ஆர்வம் என்பது புறத்தே(புறமனதிலிருந்து) எழாமல்,   ஆத்மாவிலிருந்து(அடிமனம்) ஆர்வம் எழவேண்டும் என்பதனைத்தானேக் குறிப்பிடுகிறார்? இதேபோன்றுதானே வாழ்வின் நோக்கம் கண்டறிதலிலும் ஆர்வம் ஆத்மாவிலிருந்துதானே எழவேண்டும்?

    9) ‘தன்னை அறிவதில்’,  ‘அறிவை அறிவதில்’ அதாவது ‘நான் யார்?-தன்னைப்பற்றி அறிதலில்’  ஒருவருக்கு  ஆர்வம் இல்லாமலா இருக்கும்!?

    10)  அதற்கானத் தவப்பயிற்சியினை செய்து வரும் நிலையில் தன்னை அறிந்து முடிப்பதற்கு எவ்வளவு காலம் ஆகும்?

    11) ஆக்கினையில் தவம் ஆரம்பித்து. சாந்தி நிலை தவமும் செய்து, துரியநிலை, சக்திகள தவம் செய்து கடைசியில் அறிவை அறிந்து இன்புற அறிவின் இருப்பிடமான வெட்டவெளிக்குச் செல்கின்ற  துரியாதீத தவம் செய்து வந்தாலே போதுமன்றோ- அறிவுக்கு அமைதி கிடைக்குமன்றோ?

    12)  அறிவை அறிந்து பேரின்பமுற மேற்கொள்ளும் மனவளக்கலை பயிற்சியில் தவப்பயிற்சி மட்டுமே போதுமா?

    13)  பிறகு என்ன செய்ய வேண்டும்?

    14) ஒரு பாடத்தில் அல்லது கலையில் (உதாரணத்திற்கு   தொழிற் கல்வி-மருத்துவம், பொறியில், மற்றும் பள்ளியில் இயற்பியல்மற்றும் வேதியல் பாடங்கள்)  வெற்றி பெற கருத்தியல்(theory) மட்டுமல்லாமல் செய்முறை(practical) பாடமும் உண்டு என்பதனை யாவரும் அறிந்தது தானே?  அதுபோன்றுதானே வாழ்வியல் கலையான மனவளக்கலையிலும் வெற்றி பெறுவதற்கு கருத்தியல் பாடமும்(விளக்கமும்), செய்முறை பாடமும் உள்ளன அல்லவா?

    15) மனவளக்கலையில் கருத்தியல் பாடத்தினால் விளக்க ஞானம் பெறமுடியுமல்லவா?

    16) விளக்க ஞானம் மட்டுமே போதுமானதா?  விளக்கத்தை பயிற்சி செய்து அதனை பழக்கத்திற்கு கொண்டு வரவேண்டுமல்லவா? விளக்கமும் பழக்கமும் கைகோர்த்துச் செல்ல வேண்டுமல்லவா?  பழக்கம்  தொய்வில்லாமல், விரைவில் இலக்கை அடைந்து வெற்றி பெற விளக்கஅறிவில் அழுத்தம் ஏற்படவேண்டுல்லவா? 

    வாழ்க வளமுடன்! 

    ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்து பயன் பெற வேண்டியிருப்பதால் மேலும் சிந்திக்க வேண்டியுள்ள வினாக்கள் உள்ளன.  அவற்றை அடுத்த சிந்திக்க அமுதமொழிகள் பயிற்சியில் ஆராய்வோம்.  வாழ்க வளமுடன்!

    . . .   தொடரும்

     

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!உலகெங்கிலும் வெகு விரைவில் பரவட்டும் திருவேதாத்திரியம்!!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளர்க அறிவுச்   செல்வம்!!


     

  • சிந்திக்க அமுத மொழிகள்-335 (994th Posting)

    வாழ்க மனித அறிவு!                               வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்-335  (994th Posting)

                

        22-05-2022 — ஞாயிறு

     அறிவு வளர்ச்சி

    மனிதனுடைய மகத்துவத்தை அவனே அறிந்துகொண்டு மனிதனாகவே வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் உலகமுழுதும் குறுகிய காலத்திலேயே உருவாகிவிடும் என்பது திண்ணம்.”

                                                          . . . வேதாத்திரி மகரிஷி.

    பயிற்சி—

    1. மனிதகுலம் தன்னுடைய மகத்துவத்தை தற்போது அறிந்துகொள்ளவில்லை என்கிறாரா மகரிஷி அவர்கள்?
    2. ந்த அடிப்படையில் அவ்வாறு கூறுகிறார்?
    3. மனிதகுலம் தன்னுடைய மகத்துவத்தை அறியாததுதான் இன்று மனிதகுலம் படும் எல்லாத்துன்பங்களுக்கும் காரணமா?
    4. மனிதனின் மகத்துவம் பற்றி மகரிஷி அவர்கள் ஏதேனும் கவிகளின் வாயிலாகத் தெரிவித்துள்ளாரா? ஞா.க. கவிகள் [எண் 290(1955) மற்றும் 297(03-01-1959)] என்ன கூறுகின்றன?
    5. முன்னாள் ஜனாதிபதியும் தத்துவஞானியுமான டாக்டர். இராதாகிருஷ்ணன் பரிணாமம் இன்னும் பூர்த்தியாகவில்லை-Evolution is  still incomplete) என்று கூறியுள்ளதையே மகரிஷி அவர்கள் ’மனிதகுலம் தன்னுடைய மகத்துவத்தை தற்போது அறியவில்லை’ என்கிறாரா? 
    6. ஆதிமனிதனிலிருந்து கருத்தொடராக வந்துள்ள இன்றைய மனிதகுலம் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும் தன்னுடைய மகத்துவம் தெரியாமலா இருக்கின்றது?
    7. பல்லாயிரம் ஆண்டுகளாக தன் மகத்துவத்தை உணராத மனிதகுலம் தன் மகத்துவத்தை உணர்கின்ற காலம் அருகிலேயே உள்ளது என்பது ஆச்சரியத்தை அல்லவா தருகின்றது? எப்படி அவருக்கு அந்த வருங்கால உணர்தல் சாத்தியமாகின்றது? நமக்கு அதுபோன்ற வருங்கால உணர்தல் திறன் இல்லாமல்தானே உள்ளது! எப்போது வரும்?
    8. மனிதனாக வாழ்கின்ற சூழ்நிலைகள் விரைவிலேயே உருவாகிவிடும் என்றால், தற்போது மனிதன் எவ்வாறு வாழ்கின்றான் என்கிறார் மகரிஷி அவர்கள்?
    9. விரைவிலேயே உருவாகிவிடும் என்பது வருங்கால உணர்தல் என்பதுதானே? வருங்காலத்தைப்பற்றி அறிஞர்கள் கூறும் போது இரண்டுவிதமாகக்  கூறலாம்? ஒன்று  நல்ல காலம் விரைவில் வரவேண்டும் என்று தன்விருப்பத்தைக் கூறலாம்.  மற்றொன்று வரும் என்று உறுதியாகவும் கூறலாம். நல்ல காலம்  உருவாகிவிடும் என்பது திண்ணம் என்று கூறியுள்ளதால் அந்த நல்ல காலம் வந்துவிடும் என்று றுதியாகத்தான்(positively) கூறுகிறார் அல்லவா?
    10. இவ்வாறு எதன் அடிப்படையில் றுதியாகக் கூறமுடிகின்றது மகரிஷி அவர்களால்? 
    11. *ஒன்றுமிலா ஒன்றிலிருந்து ஆரம்பித்த இயற்கை/இறை தனது தன்மாற்றப் பயணத்தின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால்தான் மனிதகுலம் தோன்றியுள்ளது.  தன்மாற்றமாக இருப்பதால்(தானே மாறியுள்ளதால்) இயற்கைக்கு /இறைக்குள்ள மகத்துவம் மனிதனுக்கும் உண்டல்லவா?  அம்மனிதனுக்கும் தெரியுமல்லவா? ஆகவே அதனை வைத்து உறுதியாகக் கூறுகிறாரா?(* மனித புலனறிவிற்கு) 
    12. மனிதன் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்படியிருக்கும்போது இத்தனை நாட்களாக மனிதன் தன் மகத்துவத்தை அறியாத நிலை நிலவும்போது விரைவில் மகத்துவத்தை உணரும் நிலை உருவாகிவிடுமா என்கின்ற ஐயமல்லவா ஏற்படுகின்றது! பல்லாயிரம் ஆண்டுகளில் உருவாகாத அணுவியல் விஞ்ஞானம்(atomic theory) இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகி இயற்கை தன் ரகசியங்களை விஞ்ஞானத்தின் மூலம் அறிவித்துவருவதுபோல் மனிதனும் தன் மகத்துவத்தை அறிந்து கொள்ளும் நிலை வெகுவிரைவில் உருவாகும் என்கிறாரா?
    13. இயற்கையில் பல்லாயிரம் ரகசியங்கள் உள்ளன.   ஆனால் அவற்றையெல்லாம் மனிதன் குறுகிய ஆயுட்காலத்தில் தனது அறிவால் அறியமுடியாது என்றாலும்  மனிதகுல வாழ்வு சிறப்புற எதனை அறியவேண்டுமோ,  அதாவது இயற்கை/இறை தன்னுடை மாற்றத்தை ஆதிநிலையிலிருந்து தான் அசைந்ததிலிருந்து  ஆரம்பித்து படிப்படியாக விளக்கி ஆறாம் அறிவுடைய மனிதன் வரை வேதாத்திரி மகரிஷி அவர்களால் மூலம் விளக்கி,   மனிதன் தன் மகத்துவத்தை அறிந்துகொள்ளும் சூழ்நிலைகள் விரைவில் உருவாகிவிடும் என்பதனையும் வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாகவே தெரிவிக்கின்றதா?
    14. மேலும் புலி மானை அடித்துக் கொல்லும் உதாரணத்தை எடுத்துக்கொண்டு சிந்திப்போமா அன்பர்களே?! Discovery Channel-ல் புலி மானைத் துரத்திப் பிடிக்கும் காட்சிகளைக் கண்ணுறுபவர்களின் நெஞ்சங்கள் பதைபதைக்கும். அதற்காக புலிகளெல்லாம் இனி மான்களை வேட்டையாடக்கூடாது, வருங்காலங்களில் புல்லை மட்டுமே தின்னவேண்டும் என்று  எதிர்பார்ப்பது போலவா உள்ளது மகரிஷி அவர்கள் கூறுவது? அல்லவே! மனிதன் தன் மகத்துவத்தை உணர்ந்து மனிதனாக வாழ்வது நடைமுறையில் சாத்தியம் தானே!  என்ன அன்பர்களே?
    15.  மனிதன் தன்  மகத்துவத்தை அறிகின்ற சூழ்நிலை விரைவிலேயே உருவாகிவிடும் காலம் எந்த நியதியின் ஊக்கத்தால்  நடக்கும்?
    16.  இனி நம் பொறுப்புகளும் கடமைகளும்# என்னென்ன?   (# இயற்கை ஐந்தறிவு வரை அதுவே அயரா விடாமுயற்சி செய்து தனது தன்மாற்றத் தொழிற்சாலையில்(Transformation industry) தானே ஒரே முதலாளியாக (sole proprietor) இருந்து நடத்தி வந்தது. ஆதி மனிதனாக வந்த பிறகு, ஆறாம் அறிவு வளர்ந்த போது மனிதனும், இயற்கையின் தன்மாற்ற தொழிற்சாலையில் பங்குதாரராகிவிட்டான்(share holder). மனிதன் பங்குதாரராகிவிட்டாலும் இயற்கை/இறையேதான் செயல் இயக்குனா் (Ever Managing Director) என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். இயற்கையின் மனித –- தன்மாற்றத் தொழிற்சாலையில் பங்குதாரராகிவிட்ட பிறகு, அந்த தொழிற்சாலையின் இலாபத்திற்கும் (வாழ்க்கையில் மகிழ்ச்சி) நஷ்டத்திற்கும் (துன்பம்) பொறுப்பு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உண்டு.

        இயற்கையின் தன்மாற்ற தொழிற்சாலையில், கடைசியான மனித உற்பத்தியில், இன்னமும் ஒழுங்கு படுத்தப்பட்ட உற்பத்தி regular production ஆரம்பிக்கப் படவில்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டுதான் முன்னாள் ஜனாதிபதியும், தத்துவஞானியுமான டாக்டர். இராதாகிருஷ்ணன் “பரிணாமம் இன்னமும் பூர்த்தியாகவில்லை – Evolution is still incomplete” என்கிறார். ஆதிமனிதன் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகியும், இன்னமும், இயற்கையின் தன்மாற்ற மனித உற்பத்தியில் மாதிரி முறையில்தான் (prototype) உற்பத்தி (மகான்கள், அறிஞா்கள்) நடை பெற்று வருகின்றது. ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். எண்ணாமல் பரிணாம வளர்ச்சி இல்லை. ஆகவே மனவளக்கலைஞர்களின் ஆதங்க எண்ணங்கள் குருபிரானின் புனிதஎண்ணங்களோடு இணைந்து வலுப்பெற்றால்தான் மனிதனுடைய மகத்துவத்தை அவனே அறிந்துகொண்டு மனிதனாகவே வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் உலகம் முழுதும் குறுகிய காலத்திலேயே உருவாகிவிடும் என்கின்ற  மகரிஷி அவர்களின் புனித எண்ணங்கள் நிறைவேறி மனிதகுலம் தனது பூர்வீக சொத்தான (hereditary wealth) அமைதியை அனுபவித்து இன்புற்றிருக்கும்! வாழ்க வளமுடன்!)

    மகரிஷி அவர்களின் அழைப்பில் உறுதி இருப்பதைக் கவனிப்போம்.

    வாழ்க அறிவுச் செல்வம்!                 வளர்க அறிவுச் செல்வம்!!


     

     

  • சிந்திக்க அமுத மொழிகள்-334

    வாழ்க மனித அறிவு!                               வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்-334

                                                                                                         03-05-2022-செவ்வாய்

     

     

    அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகிய மூன்று வகையிலும் அறிவு வறுமை நிலவுகிறது.                                        

                                                      . . . . .    வேதாத்திரி மகரிஷி

     பயிற்சி:

    1. என்ன கூற வருகின்றார் அறிவின் முதல் அறிவியளாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

    2. வறுமை என்பது என்ன?

    3. அடிப்படை பொருளாதார வசதி இல்லாத நிலைமையாகிய வறுமையையா இங்கே குறிப்பிடுகிறார் சிந்தனையாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

    4. வறுமைக்கு எதிர்ச்சொல் என்ன?

    5. அறிவின்வறுமைக்கு  எதிர்ச்சொல்லாக   அறிவுச்செல்வம் என்பதாக வைத்துக்கொள்ளலாமா?

    6. அப்படியானால் அறிவுச்செல்வம் என்பது என்ன?

    7. அறிவுச்செல்வமும் இறையருளும் ஒன்றா?

    8. இறையருளை வேண்டாதவர்தான் யார் இருப்பர்? அவ்வாறிருக்கும்போது அறிவே இறையாக உள்ளதால் இறையருளை விரும்புபவா் அறிவின் வறுமையிலிருந்து விடுபடவேண்டுமல்லவா?

    9. திருவள்ளுவர் கூறும் பத்து உடைமைகள் என்னென்ன?

    10.அறிவுச்செல்வமும், நாணமுடைமை உள்ளபட திருவள்ளுவர் கண்டுபிடித்த பத்து உடைமைகளும்(அதிகாரங்கள்)  ஒன்றா?

    11. இறையருளை வேண்டுபவர் அறியாமையிலும், அலட்சியத்திலும், உணர்ச்சிவயத்திலும் உழன்றுகொண்டிருந்தால் இறையருள் எப்போது கிட்டுவது?

    12. அறிவின் உயர்வு(அறிவின்மேன்மை) உள்பட மனிதனுக்கு அவசியமான ஏழுவித சம்பத்துக்களில் மனிதர்களி்டம் காணப்படும்  வேறுபாடுகளுக்கான காரணிகள்  பதினான்கு  இருக்கும்போது(உலக சமாதான நூல் கவி எண். 18) அறிவின் வறுமையான அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகியவற்றிலிருந்து மனிதகுலம் விடுபட என்ன செய்ய வேண்டும்? எல்லோருக்கும் அது சாத்தியமா?  ஐயமில்லை! எல்லோருக்கும் எல்லாம் வேண்டும். ஐயமா?  ஐயமில்லை! எல்லோருக்கும் எல்லாம் வேண்டும்.  ஜயமே!!! 

    13. அறிவிற்கான இயல் ஏற்படுத்தியுள்ள அறிவை அறிந்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் தீர்வு என்ன?

    14. அறியாமை நீங்க வழி சொல்லப்பட்டிருக்கின்றதா திருவேதாத்திரியத்தில்?

    15. அலட்சியம் நீங்க வழி சொல்லப்பட்டிருக்கின்றதா திருவேதாத்திரியத்தில்?

    16. உணர்ச்சிவயம் நீங்க வழி சொல்லப்பட்டிருக்கின்றதா திருவேதாத்திரியத்தில்?

    17. இச்சிந்தனைக்கு இவ்வளவு கேள்விகள் அவசியமா?

    18. அறிவை அறிய ஆர்வம் எழுந்துவிட்டால் அது தன்னை அறிந்து முடிக்கும் வரையில் அமைதி பெறாது என்று மகரிஷி அவர்கள் கூறுகின்றாரே,  அந்த வகையில் சேர்ந்ததா இவ்வளவு கேள்விகளும்?!

    19. அறிவு தன்னை அறிவது என்பது என்ன?

    20. அறிவின் மூலத்தை அறிவது தன்னை அறிவதாகுமா?

    21. அறிவின் மூலம் எது என்கிறார் திருவள்ளுவர்?

    22. மனவளக்கலைஞர்கள் ஆரம்பநிலையில் உள்ளவர்கள் தெளிவு பெற இவ்வளவு கேள்விகளுக்கும் விடைகாணலாமன்றோ?!

    23. இவைகள் மட்டும்தான் கேள்விகளா?

    இன்னும் ஏதேனும் கேள்விகள் இருப்பின் அவற்றையும்  எழுப்பி விடைகாண வேதாத்திரி மகரிஷி அவர்களின் காப்பு இருந்துகொண்டே இருக்கும். 

    அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற அன்பர்களை அழைக்கின்றாரே பேரின்பாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள். எது தெய்வம், யார் தெய்வம் என அறிந்துகொள்ள வேண்டாமா?! வாருங்கள் அன்பர்களே அறிவை அறிந்து இன்புறுவோம்.

    மகரிஷி அவர்களின் அழைப்பில் உறுதி இருப்பதைக் கவனிப்போம்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                 வளர்க அறிவுச் செல்வம்!!


     

     

  • சிந்திக்க அமுத மொழிகள் – 333-மதித்தொழுகல்!!!

    வாழ்க மனித அறிவு!                                                                                      வளர்க மனித அறிவு!!

     

    சிந்திக்க அமுத மொழிகள் – 333

     

        09-04-2022 — சனி

    மதித்தொழுகல்!!!

    எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும், தப்பாது, குருவின் உயர்வு, மதிப்போரை தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும் ”

    . . . வேதாத்திரி மகரிஷி.

    பயிற்சி—

    1. என்ன கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?
    2. குரு என்பவர் யார்?
    3. குருவை யார் மதிப்பர்?
    4. மதித்தல் என்றால் என்ன?
    5. ஒன்றின் மீதோ அல்லது ஒருவரின் மீதோ எப்போது மதிப்பு வரும்?
    6. ஒழுகுதல் என்றால் என்ன?
    7. மதித்தல் வேறு ஒழுகுதல் வேறா?
    8. ஒழுகுதலுக்கு மதிப்பு அவசியமா?
    9. “குருவை மதித்து ஒழுகினால் குருவின் உயர்வு மதிப்பவரின் தரம் உயரும்”  என்பது அறிவியலா?
    10. உயர்கின்ற பயன்  எந்த இறை நியதியின் கீழ் கிடைக்கின்றது?
    11. மதித்தொழுகலின் பயன் என்ன?
    12. குருவின் உயர்வு என்றால் என்ன?
    13. மதிப்போரின் தரம் என்றால் என்ன?
    14. மதிப்பவரின் தரம் உயரும் என்றால் அந்தத் தரம் என்ன?
    15. மதித்தொழுகலின் விளைவாக பிறவிப்பயன் கிடைக்கும் என்றால் பிறவிப்பயன் என்பது என்ன?
    16. பிறவிப்பயன் பெறுவது ஒவ்வோர் மனிதனுக்கும் அவசியம் தானே?
    17. எந்த கோணத்தில் பிறவிப்பயன் அவசியமாகின்றது மனிதனுக்கு?
    18. பிறவிப்பயன் தரும் நன்மைகள் என்ன? ஒன்றா? பலவா?
    19. ஏன் மனிதர்கள் பிறவிப்பயன் அடைவதற்கு முயற்சி செய்வதில்லை?
    20. குருவை மதிப்பதில் சீடருக்கு என்ன சிரமம் இருக்கப் போகின்றது?
    21.  ஏழு எழுத்துக்களைக் கொண்ட குருவை “ம தி த் தொ ழு க ல்“ என்கின்ற வார்த்தையில் என்னென்ன படிநிலைகள் உள்ளன என்பதனை  பட்டியலிட்டு செயல்படுத்தலாமன்றோ?
    22. “குருவின் உயர்வு (உயர்ந்த குருவின் தன்மைகளும், அருட்பார்வைகளும், அருட்செய்திகளும்) குருவை மதிப்பவரின் தரத்தை உயர்த்தும்” என்று மகரிஷி அவர்கள் கூறியிருப்பது,  திருமூலர் குருவைத் தேடுவதில் இருக்கும் எச்சரிக்கையை நினைவு படுத்துகின்றதல்லவா?

    அபக்குவன்!!

    குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

    குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்

    குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்

    குருடும் குருடும் குழி விழுமாறே.”

                                                                                                             . . .  திருமூலர்

    (அபக்குவன் என்று கொடுக்கப்பட்ட  தலைப்பு சிந்திக்கக் கூடியது)

                           23.  திருமூலரின் உண்மை-குரு பற்றிய  எண்ணம்போல்   பக்குவ-      

                                   மனவளக்கலைஞர்கள்,  வேதாத்திரி மகரிஷி     அவர்களை    குருவாகப்           

                                  பெற்றமைக்கு பூர்வபுண்ணியம் செய்திருக்க  வேண்டும் அல்லவா?

    24.  இந்த அமுதமொழியில் ஐயங்கள் வேறு ஏதேனும் இருப்பின் அவற்றைக் கேள்விகளாக தங்களுக்குள்ளாகவே எழுப்பி சிந்தனை செய்து – சுயசத்சங்கம் நடத்தி பயன்பெறலாமன்றோ?

    வாழ்க அறிவுச் செல்வம்!                          வளா்க அறிவுச் செல்வம்!!


     

  • சிந்திக்க அமுத மொழிகள் – 332-சுயமாய் சிந்தி!

    வாழ்க மனித அறிவு!                                                                                      வளர்க மனித அறிவு!!

     

    சிந்திக்க அமுத மொழிகள் – 332

     

        02-04-2022 — சனி

    சுயமாய் சிந்தி!

    எல்லாம் வல்ல தெய்வமது.  எங்கும் உள்ளது நீக்க மற.  சொல்லால் மட்டும் நம்பாதே. சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்!”

                                                                 — வேதாத்திரி மகரிஷி

    பயிற்சி—

    1. தெய்வம் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதை அப்படியே நம்புவது சரியில்லையா?

    2. மகரிஷி அவர்கள் கூறுவதை நம்பவேண்டாம் என்று அவரே எச்சரிப்பது வியப்பாக இருக்கின்றதல்லவா? ஏன் அவ்வாறு கூறுகின்றார்? 

    3. காரணம் இல்லாமலா இருக்கும், சிந்திப்போம்.  அந்தக் காரணத்தை  அறிவதற்கும்  சிந்திப்போம் என்றுதான் கூறுகிறோம்!  ஆறாம் அறிவின் உச்சமான சிறப்பான சிந்தனை ஆற்றல்  தடத்தை(pondering channel) திறக்கச் சொல்கிறாரா வேதாத்திரி மகரிஷி அவர்கள்?!

    4. தெய்வம் பற்றி கூறிவிட்டு ஏன் சுயமாக சிந்தித்துத் தெளிவு பெறச்சொல்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

    5. சிந்தித்தல் என்றால்  எவ்வாறு சிந்திக்க வேண்டும்?  அதனைக் கூறவில்லையே! எங்கிருந்து சிந்தித்தலை ஆரம்பிக்க வேண்டும்?  எங்கு முடிக்க வேண்டும்?

    6. முதலில் சிந்தித்தல் மீது தீராத ஆர்வம் கொள்ள வேண்டுமல்லவா?

    7. அன்னமய கோசம், மனோமய கோசம் ஆகிய இரண்டில் மட்டுமே இயங்கும் எண்ணத்தை பிராணமயகோசத்திற்கு கொண்டு வந்து பிறகு விஞ்ஞாணமயகோசத்திற்கு கொண்டு வருவதற்கு  சுயமாய்ச் சிந்திக்கச் சொல்கிறாரா? 

    7. சிந்தித்தலை அவர் எவ்வாறு ஆரம்பித்தார் என்பதனைக் கவனித்தால் நாமும் சிந்தித்தலை அவ்வாறே ஆரம்பிக்கலாம் அல்லவா?

    8. சிறு வயதிலேயே அவருக்குள் எழுந்த மகானாக்கிய நான்கு மகோன்னத கேள்விகள் இருக்கின்றனவே. அவற்றையே நாம் சிந்தித்தலுக்கு ஆரம்பமாக வைத்துக் கொள்ளலாமன்றோ?

    9. சிந்தித்தலால் தெளிவு பெறச்சொல்கிறார். நம்பிக்கை வேறு,  தெளிவு வேறா?  தெளிவு என்றால் என்ன?  தெளிவின் பயன் என்ன?

    10. தெய்வம் பற்றி அறிவதற்கு மட்டுமா சிந்தித்தலை பயன்படுத்த வேண்டும்? மானுடவியலைப் பற்றி அவர் கூறியவற்றை உறுதிபடுத்துவதற்கும் பயன் படுத்தவேண்டுமா?

    11. சிந்தித்தலை எவ்வாறு அவரிடமிருந்து கற்றுக்கொள்வது? அவருடன் இணைந்தால் கற்றுக்கொள்ள முடியுமா?

    12. இப்போது அவர் இல்லையே இப்புவியில்! எவ்வாறு அவருடன் இணைந்துகொள்வது?

    13. அவருடைய சிந்தனை ஆற்றலைப் போற்றி, மகிழ்வுற்றால் அவருடன் இணைப்பு கிடைத்துவிடுமா?

    14. தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர் வாழ்ந்த காலத்தில் பிறவாத மகரிஷி அவர்கள் எப்படி அம் மூவரையும் குருமார்களாகக் கொண்டார்?

    15. அதே யுக்தியை நாமும் பயன்படுத்தலாமன்றோ?!

    16.எவ்வளவு காலம் தேவை தெய்வத்தைப் பற்றி சுயமாய்ச் சிந்திக்க ஆரம்பித்து சிந்தித்தல் முடிந்து தெளிவு பெறுவதற்கு? சிந்தித்தலுக்கு முடிவு என்று ஒன்று இருக்கின்றதா?

          16.1.ஒரு நொடி போதுமா? 

         16.2. ஒரு மணித்துளி போதுமா?

         16.3. ஒரு வாரம் போதுமா? 

        16.4. ஒரு மாதம் போதுமா? 

        16.5. ஒரு வருடம் போதுமா? 

        16.6. இந்தப்பிறவிக்காலம் போதுமா? 

         16.7. செயலற்று/உறங்குகின்ற(dormant) சிந்தினை  ஆற்றல் தூண்டப்பட்டு விழித்தெழுவதைப் பொருத்து கால அவகாசம் மாறுபடுமா?

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!


    வாழ்க மனித அறிவு!  வளர்க மனித அறிவு!!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                          வளா்க அறிவுச் செல்வம்!!

     

  • சிந்திக்க அமுத மொழிகள்- 331

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

     

     01-04-2022— வெள்ளி

    ஒன்றை மனதில் எண்ணி அதையே சிந்தனை செய்து கொண்டிருந்தால் அவனது உள்ளம் அதே வழியைச் சென்று அடைந்துவிடும்.

    …..புத்தர்.

    பயிற்சி—
    1) இவ்வுண்மையில், புத்தருடன் மகரிஷி அவர்கள் எவ்வாறு ஒன்று படுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்               வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள் – 330(26-03-2022)

    வாழ்க மனித அறிவு !                          வளர்க மனித அறிவு !!

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 330

    26-03-2022 — சனி

    “ஆணவம் இல்லாத இடத்தில் அருள் ஒளி வீசும்.”
                                                                                             . . . வள்ளலார்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அருட்பிரகாச வள்ளலார்?
    2) ஆணவம் என்று எதனைக் குறிப்பிடுகிறார்?
    3) அருள் என்பது என்ன?
    4) ‘அருள் ஒளி’ என்பது என்ன?
    5) அருள் நமக்கு வேண்டுமல்லவா?
    6) அருளுக்குப் பாத்திரமாக என்ன செய்ய வேண்டும்?
    7) ‘ஆணவம் இல்லாத இடத்தில்’ என்பதால் அந்த இடம் எது?

    வாழ்க அறிவுச் செல்வம்!                       வளா்க அறிவுச் செல்வம்!!

  • சிந்திக்க அமுத மொழிகள் – 329-25-3-22

    வாழ்க மனித அறிவு!                                                                வளர்க மனித அறிவு!!

     

    சிந்திக்க அமுத மொழிகள் – 329

        25-03-2021 — வெள்ளி

     

    Fraction demands Totality supplies

                                                          . . . வேதாத்திரி மகரிஷி

    பயிற்சி:

    1) என்ன கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

     2) ‘Fraction’ என்று எதனைக் குறிப்பிடுகிறார்? 

    3) ‘Totality’ என்று எதனைக் குறிப்பிடுகிறார்?

    4) மனிதகுலத்திற்கு என்ன தெரிவிக்க எண்ணி இப் பொன்மொழியினை அருளியுள்ளார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

    5) இப் பொன்மொழிக்கும் நேற்றைய(24.03.2022) சிந்திக்க வினாப் பயிற்சியில் சிந்தித்த கேள்வியான ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்பதற்கும் தொடர்புள்ளதா? (Click here)

    6) தொடர்பு இருப்பின் என்ன தொடர்பு?

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                          வளா்க அறிவுச் செல்வம்!!