சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 298(241)

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 298(241)

     

    24-05-2020 — ஞாயிறு

    தோணியில் ஏறிக்கொள்; வாழ்வாகிய கடல் ஆழமானது; கடக்கக் கஷ்டமானது; சான்றோருடன்  உறைவதே அதனின்று கரையேற்றும் தோணியாகும்.”

    . . . குருநானக்

    பயிற்சி—
    1) அவ்வையார் இதேபோன்று கூறும் வரிகள் என்ன?
    2) திருவள்ளுவர் எந்தக் குறளில் இதுபோன்று கூறுகிறார்?
    3) இதனை வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகிறார்?
    4) இதுபோன்று அறவோர்களின் அறிவுரை இருந்தும் அதனை அலட்சியம் செய்த சமுதாயத்திற்கு இருபதாம் நூற்றாண்டிற்கு பிறகாவது செயல்படுத்தக் கூடிய அறிவுரைகள் கிடைத்துள்ளது அல்லவா? மகரிஷி அவர்களின் அறிவுநிலைக்கு உயர்ந்து நெஞ்சார வேதாத்திரியத்தைப் போற்றி வாழ்த்துவோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள் – 297(221)

    வாழ்க மனித அறிவு!                      வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள் – 297(221)

    23-05-2020 — சனி

    நல்ல ஆலோசனைகளை விரும்பிக்கேட்டால் திறமைகள் அதிகரிக்கும்.”

    . . . கபீர்.

    பயிற்சி—
    1) நல்ல ஆலோசனைகளை விரும்பிக் கேட்டால் திறமைகள் எவ்வாறு அதிகமாகின்றது?

    2) விரும்பிக் கேட்டால்தான் திறமைகள் அதிகமாகுமா?

    3) திறமைகள் என்றால் என்ன?  என்னென்ன திறமைகள் அதிகமாகும்?

    4) எந்த நியதியின் கீழ் இது நடைபெறுகின்றது?

    5) அவ்வைத்தாய் அருளியுள்ள ‘அறம் செய விரும்பு’ , ‘சான்றோர் இனத்திரு’, ‘ பெரியாரைத் துணைகொள்’ மற்றும் ‘மேன்மக்கள் சொல்கேள்’ என்கின்ற அமுத மொழிகளை இதனுடன் தொடர்பு படுத்தி சிந்திக்கலாமன்றோ!

    6) பொய்யாமொழிப் புலவர்   ‘பொியாரைத் துணைக்கோடல்’  பற்றி பத்து கோணங்களில் இயற்றியுள்ள பத்து குறட்பாக்களையும் இன்றைய சிந்திக்க அமுதமொழியுடன் தொடர்பு படுத்தியும் விரிவாக சிந்திக்கலாம்.

    7) நம் குருநாதர் குருவணக்கம் பாடல்கள்  வரிசையில் ‘குருவின் சேர்க்கையில்’என்கின்ற தலைப்பில் “எப்பொருளை எச்செயலை” என ஆரம்பி்க்கும் பாடலில் அருளியுள்ள வேதவாக்கினை   இன்றைய அமுதமொழியுடன் தொடர்பு படுத்தி மேலும் விரிவாக சிந்தித்து, சிந்திக்கும் ஆற்றலை மேலும், மேலும் வளர்த்துக்கொண்டு  பயன்பெறலாம்.   

    வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


  • சிந்திக்க அமுத மொழிகள்- 296(230)

    வாழ்க மனித அறிவு!                வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 296(230)

    22-05-2020 — வெள்ளி

    நிலையாமையைப் பற்றிச் சிந்தித்தால் தற்பெருமை அழிந்துவிடும்”

    . . . புத்தர்

    பயிற்சி:
    1) இக்கூற்றிலிருந்து முதலில் அறிய வேண்டியது தற்பெருமை கொள்ளக் கூடாது என்பது. ஏன் தற்பெருமை கொள்ளக் கூடாது?
    2) தற்பெருமை கொள்வது பழக்கமாகிவிட்டதால் என்ன செய்வது?
    3) தற்பெருமை கொள்வதால் என்ன தீமைகள் வரும்?
    4) தற்பெருமைக்கும் நிலையாமையை அறிவதற்கும் உள்ள தொடர்பு அறிவியல் ரீதியானதா?
    5) நிலையாமையை அறிவதால் தற்பெருமை எவ்வாறு நீங்கும்? அதிலுள்ள அறிவியல் என்ன?
    6) இவ்வுண்மையைப்பற்றி மகரிஷி அவர்கள் கூறியுள்ளது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்!                   வளா்க அறிவுச் செல்வம்!!


  • சிந்திக்க அமுத மொழிகள்- 295(194)

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    சிந்திக்க அமுத மொழிகள்- 295(194)

    17-05-2020 — சனி

    முயற்சி வெறும் உந்து சக்தி மட்டுமல்ல. ஆற்றலை வெளிக்கொணரும் கருவி”.

    ….. இரவீந்திரநாத் தாகூர்.

    பயிற்சி:

    1) என்ன கூறுகிறார் அறிஞர் இரவீந்திரநாத் தாகூர் அவர்கள்?

    2) முயற்சி என்பது தெய்வீகப்பண்பு என்று சொல்லமா? சரியா? சரியானால் எவ்வாறு?

    3) முயற்சி பற்றி திருவள்ளுவர் எந்த அதிகாரத்தில் விளக்கியுள்ளார்?

    4) முயற்சி பற்றி கூறும் அதிகாரத்திற்கு ஏன் அவ்வாறு பெயர் வைத்துள்ளார்?

    5) அந்த அதிகாரம் எந்த அதிகாரத்திற்கு அடுத்ததாக வைக்கப்பட்டுள்ளது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள்- 294(191)

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    சிந்திக்க அமுத மொழிகள்- 294(191)

    16-05-2020—சனி

     

    எந்த உயிரிடத்திலும் பேதமின்றி தம் உயிர் போன்று காண்பவன் உள்ளத்தில் இறைவனும் நடனமாடுகிறார்.”

    . . . இராமலிங்க அடிகள்.

    பயிற்சி:

    1) மற்றவர்கள் உள்ளத்தில் …. ?

    2) இந்த அருள் மொழியை மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகிறார்?

    3) இறைவன் நடனமாடுகிறார் என்பது அவரது பேரின்ப அனுபவம்! இது எல்லோருக்கும் உரியதுதானே?

    4) இந்த உண்மையினை மகான் மகாகவி பாரதியார் எவ்வாறு கூறுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                          வளா்க அறிவுச் செல்வம்


     

  • சிந்திக்க அமுத மொழிகள்- 293(187)

    வாழ்க மனித அறிவு!               வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்- 293(187)

    15-05-2020 — வெள்ளி

    நம்மிடம் அறிவு இருக்கிறது. ஆனால் உழைக்கும் திறன் இல்லை. வேதாந்தக் கோட்பாடு உள்ளது.   ஆனால் நடைமுறைப்படுத்தும் ஆற்றல் இல்லை”

     
    . . . சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி:

    1) என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?

    2) எதனை வலியுறுத்த அறிவையும் உழைக்காத  திறனையும் இணைத்து ஆதங்கப்படுகிறார்?

    3) அதேபோல் எதனை வலியுறுத்த வேதாந்த கோட்பாட்டையும் அதனை நடைமுறைபடுத்தும் ஆற்றல் இன்மையையும்   இணைத்து ஆதங்கப்படுகிறார்?

    4) இக்கூற்று ஆன்ம சாதகர்களுக்கு அறிவுறுத்துவது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


  • சிந்திக்க அமுத மொழிகள்- 292(183)

    வாழ்க மனித அறிவு!              வளர்க மனித அறிவு!!

    09-05-2020 — சனி

    சிந்திக்க அமுத மொழிகள்- 292(183)

    நான் யார்? என்ற கேள்வியைக் கேளுங்கள். பதிலை உங்களுக்குள்ளே தேடுங்கள். பிறவியைத் தவிர்க்கும் உபாயம் இதுவே”.

     …. ஸ்ரீ ரமணர்

    பயிற்சி:
    1) பிறவியைத் தவிர்ப்பது என்றால் என்ன? பிறவியை ஏன் தவிர்க்க வேண்டும்?

    2) ‘நான் யார்?’ என்பதற்கான விடை எவ்வாறு பிறவியைத் தவிர்க்கச் செய்யும்?

    3) இதில் உள்ள விஞ்ஞானம் என்ன?

    4)  ஸ்ரீ இரமண பகவானைத் தரிசிக்க வரும் பக்தர்கள், தங்களின்  துன்பங்கள் நீங்க ஆசி வழங்குமாறு வேண்டி நிற்கும்போது,  “நீ யார் என உணர்ந்துகொள் — Find out who you are.” என்பதே அவரது ஆசிர்வாதம்.  எனவே இதிலிருந்து நான் யார் என அறிந்துகொள்வதால் லாபமும்(பயன்) நான் யார் என அறிந்து கொள்ளாமையால் விளையும் நஷ்டமும்(துன்பமும்) என்ன என்று ஒவ்வொரு மனிதனும் அறிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாத மூன்றாவது தேவைக்கு அடுத்த நான்காவது தேவையாக  உள்ளதல்லவா?! 

         அதற்கு கட்டாய ஒழுக்கவியல்கல்வி பள்ளியிலும், மாண்பியல் கல்வி கல்லூரியிலும் உருவாக வேண்டாமா அன்பர்களே?! வாழ்த்துவோம்.  கட்டாய  ஒழுக்கவியல் பாடம் பள்ளிகளில் ஏற்படவேண்டும்.

    கட்டாய  ஒழுக்கவியல் பாடம்(கல்வி) வாழ்க வளமுடன்! 

    வளர்க கட்டாய ஒழுக்கவியல் பாடம்(கல்வி)

    வாழ்க அறிவுச் செல்வம்!                        வளா்க அறிவுச் செல்வம்!!


  • சிந்திக்க அமுத மொழிகள்- 291(175)

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    08-05-2020— வெள்ளி

    சிந்திக்க அமுத மொழிகள்- 291(175)

    பேரின்பம்

    இறைநிலையான மன அலை விரிந்த சுத்த வெளியுடன் அபூர்வமாக ஒன்றிணைந்து தனது சொந்த ஆற்றலையே ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு பொருளிலும் அதன் செயல் ஒழுங்காக மெய்யுருவாக்கிக் காணும்போது, அது இன்பமும், திருப்தியும், கலந்த உணர்வாக அமைவது பேரின்பம்”.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி:
    1) ஏன் அபூர்வமாக என்கிறார் மகரிஷி அவர்கள்?

    2) ‘தனது சொந்த ஆற்றல்’ என்பதன் பொருள் என்ன?

    3) ஒவ்வொரு இடத்திலும், பொருளிலும் என்பதன் பொருள் என்ன?

    4) ‘செயல் ஒழுங்காக’ என்பதன் பொருள் என்ன?

    5) ‘மெய்யுருவாக்கிக் காணும்போது’ என்பதற்குப் பொருள் என்ன?

    6) மகரிஷி அவர்கள் சுருங்கச் சொல்வதென்ன?

    7). பேரின்பத்திற்கான மேற்கண்ட வரையரையை மகரிஷி அவர்கள் தமது எந்த நூலில் அருளியுள்ளார்?

    வாழ்க அறிவுச் செல்வம்            வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுத மொழிகள்-290

    வாழ்க மனித அறிவு!                                                             வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்-290

     

    02-05-2020-சனி

    தெய்வநிலை அறிந்தோர்கள் கோடி என்றால்,

    தெளிவாக அறிவறிந்தோர் ஒருவராகும்.”

                                            . . . . .    வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     பயிற்சி:

    1. என்ன கூறுகின்றார் மகரிஷி அவர்கள்?
    2. தெய்வநிலை அறிந்தோர்களில் இருவகை உள்ளனர் என்பதுபோலல்லவா கூறுகின்றார்?
    3. தெய்வம் ஒன்றுதான். அவ்வாறிருக்கும்போது தெய்வநிலை அறிந்தவர்களில் இரண்டு வகையினர் எவ்வாறிருக்க முடியும்?    
    4. உயிரை உணர்ந்தவர்கள் தான் தெளிவாக தெய்வத்தை அறிந்தவர்களோ?
    5. தெளிவாக அறிவறிந்தவர் ஒருவராகும் என்பதால் அறிவே தெய்வம் என அறிந்தவர்கள்தான் கோடியில் ஒருவரா?
    6. அப்படியானால் வேதாத்திரி மகரிஷி அவர்களின் சீடர்களாகிய நாம் கோடியில் ஒருவரா?  அந்த புண்ணியம், பெரும்பாக்கியம்  செய்தவர்கள்தானே  நாம் அனைவரும்?! அவர் கூறும் ஒருவர் இப்போது பலராகிவருகின்றனரா அவருடைய போதனையும்  சாதனையும்  கொண்ட மனவளக்கலையால்?
    7. என்ன சொல்ல வருகிறார் மகரிஷி அவர்கள்? அதனை அறிய ஞானக்களஞ்சியம் பாடல் எண். 1693 ஐ வாசிக்கவும்.
    8. வேறுயாராவது இது போன்று(in this context)  கூறியுள்ளனரா? 

    வாழ்க வளமுடன்!

                       

     வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!


    அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    http://www.prosperspiritually.com/contact-us/

     வாழ்க அறிவுச் செல்வம்!                                                வளர்க அறிவுச் செல்வம்!!   


     

       

     

  • சிந்திக்க அமுத மொழிகள்-289

    வாழ்க மனித அறிவு!                                                                  வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்-289

                                                                                                                          01-05-2020-வெள்ளி

             புலனில்  வாழ்க்கை இனியுண்டோ? நம்மி லந்த

             வாழ்க்கை இனியுண்டோ’’ 

    . . . . .    மகா கவி பாரதியார்.

    பயிற்சி:

    1. என்ன கூறுகின்றார் மகா கவி பாரதியார்?
    2. இந்த அமுத மொழியினைக் கண்ணுறும்போது நமது சிந்தனை எங்கு செல்கின்றது?
    3. புலனில் வாழ்க்கை என்றால் என்ன பொருள்?
    4. இனியுண்டோ என்பதனால் புலனில் வாழ்க்கை விரும்பத்தக்கதல்ல என்றுதானே கூறுகிறார் மகா கவி? புலனில் வாழ்க்கையால் துன்பம் என்கிறார்தானே?
    5. அப்படியானால் எந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்கிறார்?
    6. பாரதியாருக்கு 19 நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவதரித்த ஐயன் திருவள்ளுவர் புலனில் வாழ்க்கையின் தொடர்பாக என்ன கூறியுள்ளார்?
    7. திருவள்ளுவர் புலன் வழி வாழ்க்கையைப் பற்றி கூறி 19 நூற்றாண்டுகள் கடந்தும்  மக்கள் மாறினார் இல்லை என்பதால்  மகா கவி பாரதியாரும் புலன் வழி வாழ்க்கையைப் பற்றி கூறுகிறார்?   
    8. மேலும் கூறுகிறார் “நம்மில் புலனில் வாழ்க்கை இனி இருக்குமா? என வினவுகிறார்?
    9. இதனைக் கூறி ஒரு நூற்றாண்டு ஆகின்றது? அவர் கூறிய புலனில் வாழ்க்கை இன்னமும் நடக்கின்றதா? இல்லை மாறிவிட்டதா சமுதாயம்?
    10. புலன்கள் ஐந்து இருக்கின்றன. வாழ்வதற்குத்தானே அப்புலன்கள் உள்ளன!  புலனில் வாழ்க்கை கூடாது என்றால் எவ்வழி  வாழ்க்கை வாழ வேண்டும்?
    11. அவ்வழி வாழ்க்கைக்கு 21 நூற்றாண்டிலாவது ஏதாவது அறிகுறி தோன்றியுள்ளதா?
    12. இதற்கு இறைநேசச் செல்வர்கள், உலக நல ஆர்வலர்களின் பதில் என்ன?

                        வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!


    அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    http://www.prosperspiritually.com/contact-us/

     வாழ்க அறிவுச் செல்வம்!                                                வளர்க அறிவுச் செல்வம்!!   


     

       

     

  • சிந்திக்க அமுத மொழிகள்-288

    வாழ்க மனித அறிவு!                                                                             வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்-288

                                                                                                                           25-04-2020 — சனி

    தேவைகள் குறையும் அளவுக்கே தெய்வத்தன்மை அடைவோம்.”
                                                                                                                              – சாக்ரடீஸ்

    பயிற்சி:

    • தேவைகள் குறைவதற்கும் தெய்வத்தன்மைக்கும் என்ன தொடர்பு?
    • அந்த தொடர்பு அறிவியல் அடிப்படையிலானதா?
    • முதல் தத்துவஞானியான சாக்ரடீஸ் அவதரித்த  பின்னர் முன்னூறு ஆண்டுகள் கடந்து  அவதரித்த  திருவள்ளுவப் பெருந்தகை இந்த உண்மையினை  எவ்வாறு இயம்புகிறார்?
    • இருபது நூற்றாண்டுகள் கழித்து, வள்ளுவப் பெருந்தகையை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்ட வேதாத்திரி மகரிஷி அவர்கள் இந்த உண்மையை எவ்வாறு கூறுகிறார்?
    • பொதுவாக ஆன்மிக உலகில் இவ்வுண்மையை குருமார்கள் தனது சீடர்களுக்கு எவ்வாறு உணர்த்துகின்றனர்?

    சிந்திப்போம்! 

     வாழ்க வளமுடன்!


    அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    http://www.prosperspiritually.com/contact-us/

     வாழ்க அறிவுச் செல்வம்!                                                வளர்க அறிவுச் செல்வம்!!

     குறிப்பு:  நாளைய (26-04-2020) சத்சங்க நிகழ்ச்சியில் அறிவிற்கு விருந்து பகுதி 288 ல் பாரதியார் கூறிய “இனியெரு விதி செய்வோம்” பற்றி ஆராய இருக்கிறோம்.

         


     

       

     

  • சிந்திக்க அமுத மொழிகள்- 287

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    lotus


    சிந்திக்க அமுத மொழிகள்- 287


    23-04-2020 — வியாழன்

    சாகா வரமும்  பரிபாக நிலையும்!

    பயிற்சி—

    1. இந்த செய்தியிலிருந்து ஆன்மீக சாதகர்களுக்கு என்ன அறிவுறுத்தப்படுகின்றது?
    2. வள்ளலாரின் விருப்பம் என்ன?
    3. வள்ளலாரின் பூதவுடல் இல்லாதபோதும் அவருடைய இலக்கு என்ன?
    4. மக்களை எத்தனை வகையாக பிரித்துப் பார்க்கிறார் வள்ளலார்?
    5. சாகா வரம் என்பது என்ன? அதனை இதுவரை நாம் அறிந்தமட்டில் யாருக்கேனும் அளித்துள்ளாரா?
    6. பரிபாக நிலை என்பது என்ன?
    7. இச்செய்தியில் நம்பிக்கையூட்டும் அம்சம் என்ன?
    8. இதேபோன்று நம்பிக்கையூட்டிய பெருமகனார்கள் யார் யார்?
    9. அந்த அருட்ச்செய்திகளை நினைவுபடுத்தி மகிழ்வோம். மகிழ்ந்து அப்பெருமகனார்களின் புனித எண்ணத்திற்கு மேலும் வலுவூட்டுவோமாக!
    10. வள்ளலாரின் அழுத்தமான எண்ணமே மனவளக்கலை மூலம் நம் அனைவரையும் வேதாத்திரி மகரிஷி அவர்களின் சீடர்களாக்கியுள்ளதல்லவா?
    11. அப்பயனை இப்பிறவியிலேயே நாம் அனைவரும் பெறுவோமாக!
    12. யார் யாருக்கு என்ன வரம் அளிக்கவிருக்கிறார் என்பது அவரவர்கள் நிலையைப் பொருத்தது என்பதனை நினைவில் கொண்டு பயிற்சிகளை செய்வோம். இப்பிறவியை கடைசியாக்கிக் கொள்வோம். 

    வாழ்க திருவேதாத்திரியம்                                             வளர்க திருவேதாத்திரியம்!!

                     வாழ்க அறிவுச் செல்வம்                      வளா்க அறிவுச் செல்வம்


     அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    http://www.prosperspiritually.com/contact-us/