இன்றைய விருந்து

  • FFC-299(263) சிந்திக்கப் பழகுவதற்கு பயிற்சி அவசியமா?2/3

     வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

    lotus

    FFC-299(263)

    22.07.2020-புதன்

    சிந்திக்கப் பழகுவதற்கு பயிற்சி அவசியமா? 2/3

    Analysis_of_Thought

    கடந்த அறிவுக்கு விருந்தில் சிந்தனைப்பற்றிய கருத்தியலை(THEORY) அறிந்துகொண்டோம். இனி செய்முறைக்குச்(PRACTICAL) செல்வோம்.

    சிந்திக்கும் அரிய கலையில் தேர்ச்சி பெறுவதற்கு பயிற்சி அவசியம். அந்த பயிற்சி இந்த இணைய தள சத்சங்கத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வருவதை அறிவீர்கள். இந்த சிந்தனைப் பயிற்சி ஐந்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

    1) சிந்திக்க வினாக்கள் 

    2) சிந்திக்க அமுத மொழிகள்

    3) சிந்திக்க அறிஞர்களின் கவிகள்

    4) சிந்திக்க குரு–சீடர் உரையாடல்

    5) சிந்தித்தலின் அன்றாட சுயசோதனை.

    இப்பயிற்சிகளின் நோக்கங்கங்களைத் தனித்தனியாக அறிவோம். நோக்கம் அறிந்து எந்த ஒன்றையும் செய்வது நலம் தானே?

    அறிவு எதனையும் அறிவு பூர்வமாகத்தான் அறிய விரும்பும்.

    அதாவது அறிவு உண்மையை அறியத்தான் விரும்பும். ஏனெனில் அறிவு மெய்ப் பொருளிருந்து வந்தது அல்லவா?

    அறிவுப்பூா்வமாக அறியும் போதுதான் அது உள்ளத்திற்குச் சென்று, தரம் மாறுவதற்கு, மனம் ஒத்துழைக்கும். சிந்தனைப் பயிற்சியினை ஒரே பயிற்சியாக வைக்காமல் சிந்திக்கப் பழகுவதற்காக ஐவகையாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளதன் நோக்கத்தைத் தனித்தனியாக அறிய வேண்டும்.

    1) சிந்திக்க வினாக்கள் – இப்பயிற்சியின் நோக்கம்:

     வினாக்களை சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு விடைகளைக் கண்டுபிடிப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும். சிந்தனைக்குரிய இக்கேள்விகளைச் சிந்திக்க சிந்திக்க சிந்திப்பது பழக்கமாகும். நீங்களே ஒரு நிலையில் சிந்தனை வினாக்களுக்குரிய விடையை கண்டுபிடிப்பீர்கள். அப்போது உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அது பேரின்ப நிலைக்கான வாயில். சில வினாக்களுக்கு அவ்வப்போது விடைகளும் தரப்படுகின்றன.

    2) சிந்திக்க அமுத மொழிகள் – இப்பயிற்சியின் நோக்கம்:

    அறிஞர்கள் மொழிந்தது அமுத மொழிகள். அறிஞர்கள் மொழிந்தவை ஏன் அமுத மொழிகள் எனப்படுகின்றன? அமுதம் என்கின்ற சொல்லுக்கு என்ன பொருள்? அமுதம்(அமிர்தம்) என்றால் இனிமை, நிரந்தரமானது என்று பொருள். புராணத்தில் சாகாமையைத் தரக்கூடிய தேவர் உணவு(ambrosia) என்கின்ற பொருளும் உண்டு, ஆங்கிலத்திலே ‘delicious’ என்று பொருள்.

    வெயில் நேரத்தில் மோர் அமிர்தமாய் இருந்தது என்கிறோம். வெயில் நேரத்தில் தாகம் அதிகமாக இருக்கும். அப்போது தாகம் தீர்வதற்கு நீர் கிடைத்தாலே போதுமானது. ஆனால் மோர் கிடைத்ததால் மூன்று இன்பங்கள் கிடைக்கின்றது.

        ஒன்று தாகம் தீர்கின்றது.

       இரண்டாவது நாவிற்கு சுவை உணர்வு கிட்டுகின்றது.

      மூன்றாவது உணவாகவும் அமைகின்றது.

    நீரை அருந்தியிருந்தால், நீரை அமிர்தமாக இருந்தது என்று சொல்வதில்லை. தாகம் தணிய நீருக்குப் பதிலாக மோரை அருந்தியதால் கூடுதலாக இன்பங்கள் கிடைத்ததால் மோரை அமிர்தமாக இருந்தது என்கின்றது அறிவு.

         இதிலிருந்து அமுதம் என்கின்ற சொல்லின் பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

       அப்படி உணர்ந்து கொண்டால் அறிஞர்களின் மொழிகள் எவ்வாறு அமுதமாக இருந்து பயன் அளிக்கும் என்பது தெளிவாகும்.

       தெளிவானால் அறிவு அறிஞர்களின் அமுத மொழிகளைக் கேட்பதற்கு விழையும். அவ்வார்வம் ஏற்படும்போது அறிஞர்களின் அறிவு நிலைக்கு ரசிப்பவர் அறிவும் உயரும்.  அதானல் திருத்தங்கள் தேவைப்படின் கேட்பவர்  அதுபோல் அறிவு தன்னைத் திருத்திக் கொண்டு தரத்தில் உயரும். அதுவரை இருட்டில் இருந்த அறிவொளியை வீசத்தொடங்கும். அறிவொளியாகத் திகழும்.

    வயிற்றுப் பசிக்கு உணவு உட்கொள்கிறோம். உணவு சுவையாக இருந்தால் அதனை அமிர்தமாக (food is delicious) இருந்தது என்கிறோம். அறிவுப்பசிக்கு எது உணவு?

    அறிவு தன்னை உணர்ந்து கொள்ள ஆவலாக உள்ளது. அந்த ஆவலை நிறைவேற்றுவதுதான் அதற்கான உணவு. ஆகவே அறிஞர்களின் சிந்தனைகள் அறிவிற்கு அமுதமாக இருக்கும்.

    வயிற்றிற்கான உணவு அமிர்தமாக இருந்தாலும் உண்ட பிறகு அது அடுத்த இருபத்து நான்கு மணிநேரத்தில் அது கழிவாகி வெளியேறிவிடும்.

        எப்படி புராணத்தில் அமுதம் தேவர்களுக்கு சாகாமையைத் தருமோ, அதுபோல் ஞானிகளின் அமுத மொழிகள் (எவரொருவர் குருவை மதித்தொழுகினாலும் தப்பாது குரு உயர்வு தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும் என்று வேதாத்திரி மகாரிஷி அவா்கள் மொழிவது போல்) சாகாமையைத் தரும் அறிஞர்களின் மொழிகள், அறிஞர்களின் மொழிகளின் பயன்களைப் பட்டியலிட்டுப் பார்ப்போம்.

    1) அறிவிற்கு இனிமையாக இருக்கும்.

    2) வாழ்வியலைப் பற்றிய உண்மைகளைக் கூறும்.

    3) பல பிரச்சனைகளுக்கு ஆறுதல்களைத் தருவதாக இருக்கும்.

    4) அறிவுப் பசியைத் தீர்ப்பதாக இருக்கும்.

    5) ஆறாவது அறிவிற்கு செறிவூட்டுவதாக இருக்கும்.

    6) ஞானிகளின் சிந்தனைகள் அஞ்ஞானிகளையும் சிந்திக்கச் செய்யும்.

    7) ஞானிகளின் சிந்தனைகள் கருமையத்தில் பதிந்து தரமாற்றத்தை ஏற்படுத்தும்.

    8) கருத்தொடராக வம்சாவளிக்கும் உதவும்.

    9) இன்றைய இளைஞர்களுக்கு ஒழுக்க நெறிகளை கற்பிக்கும்.

    10) தரம் மாற்றத்திற்கு மன தைரியத்தை ஊட்டும்.  தன்னம்பிக்கையை வளர்க்கும்.

    பத்து  பயன்களையும் அறிஞர்களின் மொழிகள் தருவதால்  அவற்றை அமுதம் என அழைக்கக் கூடாதா? அமுத மொழிகள் என்று பெயரளவில் சொல்கிறோமே தவிர அறிஞர்களின் மொழிகளை அமுதமாக உண்பதில்லை. பாராமுக இருக்கிறோம். காரணம் அவற்றின் பயனை அறிவதில்லை.

    பயனை  இப்போது பட்டியலிட்டுள்ளோம். எனவே இந்தப் பட்டியலை நினைவில் கொண்டு இனி அறிஞர்களின் மொழிகளை அமுதமாக அருந்துவோம்.

    அறிஞர்களின் மொழிகளை அப்படியே விழுங்காமல் அது அமுதமாக இருப்பதால் அதனை அசை போடவேண்டும்.

    சுவையாக இருக்கும். இந்த வாழ்வியல் உண்மை நமக்கு இதுவரை தெரிந்திராமல் இருந்ததே என நினைத்துப் பார்க்கலாம்.

    அறிஞர்களின் மொழிகள் அமுதமாகவே இருக்கும்; சலிப்பே இராது.

    நாளடைவில் நீங்களும் உங்கள் பங்கிற்கு அமுத மொழிகளை இந்த சமுதாயத்திற்கு தர வல்லவா்களாவீர்கள்.

    வாழ்க வளமுடன்.

    3) சிந்திக்க அறிஞர்களின் கவிகள் –   இப்பயிற்சியின் நோக்கம்:

    அறிவை அறிந்த அறிஞர்கள் தங்களின் அனுபவத்தால் அறிந்து இன்பமுறுவதை, தான் அனுபவித்ததுபோல் இவ்வுலக மக்களும் பயன் பெற விரும்பி மூன்று விதங்களில் தெரிவிப்பார்கள்.

         ஒன்று அருளுரை நிகழ்த்துவார்கள்,

        இரண்டாவதாக நூல்கள் எழுதுவார்கள்,

        மூன்றாவதாக கவிகள் எழுதுவார்கள்.

    கவிகள் என்பது என்ன? மகான்களின் கவிதை என்பது, அவருடைய எண்ணத்தையோ அல்லது அனுபவத்தையோ சமுதாய நலன்கருதி தெரிவிக்க

        உரைநடை இல்லாத சொல்லமைப்பில் சுருக்கமாகவும். செறிவாகவும். வெளிப்படுத்தும் வடிவம்.

      கவிகள் நான்கு வரிகள் இருந்தால் அதற்கான விளக்கம் நாற்பது வரிகளாகவோ அல்லது ஒரு நூலாகவோ கூட இருக்கலாம். அவ்வளவு செறிவுள்ளதாக இருக்கும் கவிகள்.

      எனவே கவிகளை மனனம் செய்வதோடு மட்டுமல்லாது அதன் உட்பொருளை உணர்ந்து கொண்டு பயன் பெற வேண்டும்

    கவிகளின் சிறப்பு பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் பதின்மூன்று தலைப்புகளில் பதின்மூன்று கவிகள் அருளியுள்ளார். கவிகளின் சிறப்பைக் கூறுவதற்கும் கவிகளே இயற்றியுள்ளார் என்பது அவருடைய கவித்திறமையைக் காண்பிக்கின்றது,

      அதுமட்டுமல்ல அவருடய செறிவுள்ளக் கவிகள் ஆர்வத்துடன் படிப்போர்களுக்கு மனிதப் பிறவியின் பயனை அடைவதற்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள பேருதவியாக இருக்கும். அப்படி யானால்  வாழ்வின் நோக்கம் தாங்களாகவே கண்டுபிடித்து பிறவிப் பெருங்கடலை நீந்தி பிறவிப் பயனை எய்துவதற்கு வழிகாட்டியாகவும் இருக்கும்.

    1. நல்ல கவி (19-12-1962),
    2. கவியின் சிறப்பு (1954),
    3. சிறப்புடைய கவிகள் (1954),
    4. கவியின் பெருமதிப்பு,
    5. கவியின் ஆயுளும் எண்ணிக்கையும் (1954),
    6. கவி ஓர் சிந்தனைத் தூண்டுதல் (1954),
    7. கவியின் ஆற்றல் (1954),
    8. அருட்பா (1954),
    9. பலர் கருத்தும் கவிஞனின் அறிவில் பிரதிபலிக்கும் (1954),
    10. கவிகள் எவ்வாறு வருகின்றன? (1954)
    11. கீழ்த்தரமான கவிகள் (1954),
    12. கவிகள் பொதுச் சொத்து (1954),
    13. நிறைவாய் இருக்க (1988)

    ஆகிய பதின்மூன்று தலைப்புகளில் கவிகள் இயற்றியுள்ளார். 

    இக்கவிகளை ஞானக்களஞ்சியம் பாகம் – 1 ல் உள்ளன.  அதனை  வாசித்து பயனடையுங்கள்.  மேலும் சிந்திக்க கவிகள் பயிற்சியின் அவசியம் விளங்கும்.

    கவிகளின் பெருமதிப்பை, இயற்கையிலுள்ள நிகழ்வோடு ஒப்பிட்டு வேதாத்திரி மகரிஷி அவர்கள் எடுத்துக் கூறுவதைக் கவனிப்போம்.

    பேச்சினைப் பெய்கின்ற மழையோடும்,

    எழுதுகின்ற எழுத்தை நீர் நிலைகளான ஏரி, குளம், குட்டை ஆகியவைகளோடும்,

    கவிகளைப் பெருமலையிலிருந்து நீர் கீழே இறங்கி கடல் வரை பேரோட்டமாக ஓடும் சீவநதிக்கும் ஒப்பிடுகிறார்.

    இக்கருத்தைக் தெரிவிக்கவும் கவியின் வாயிலாகவேத் தெரிவிக்கின்றார். அக்கவியினைப் பார்ப்போம்.

    கவியின் பெருமதிப்பு (1954)

    ஒருவர்கருத் தைப்பலர்நன் கறியச் செய்ய

    ஓங்கியதோர் ஆர்வமே மொழி களாகி

    பெருகியுள; அவற்றிலேநம் பேச்சின் வேகம்

    பெய்கின்ற மழைபோலும்; எழுத்தின் வேகம்

    உருவடைந்த நீர்நிலைக ளான குட்டை

    ஊருணிகள் போலும்உயர் கவியின் வேகம்

    பெருமலைக ளிடமிருந்து கடல் வரைக்கும்

    பேரோட்ட முடை சீவநதி போலாகும்.               

                                     — வேதாத்திரி மகரிஷி அவர்கள்

    பேச்சு, எழுதுவது, கவிகள் இயற்றுவது மூன்றும் திறன்களும் ஒன்று சோ்ந்து ஒருவரிடம் காணப்படுவது அரிது. ஒரு சிலர்தான் .அந்த வாய்ப்பையும் திறமையையும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

    ஆனால் அந்த அரிதினிலும் அரிதாகத் திகழ்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    அவருடைய அருளுரைகள் அருவிபோல் கொட்டும்.

    கேட்பவர்களின் உள்ளங்களில் பாய்ந்து நிரம்பி ஆறுதலைத்(soothing effect to the Consciousness as it is in search of its origin) தரும்.

    கேட்பதற்குத் தேனமுதமாகத் திகழும்.

    அறிவை அறிய நினைத்துவிட்டால் அது தன்னை அறியும் வரை ஓயாது என்பார் மகரிஷி அவர்கள். மகரிஷி அவா்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதியுள்ளார். ஆயிரத்து எண்ணூற்றுக்கும் மேல்க் கவிகள் எழுதியுள்ளார்.

    கவிகளின் சிறப்பைக் கருதி, அதனைத் தெரிவிக்க கவிகளின் சிறப்புக்களை எட்டு வரிகள் கொண்ட பதின்மூன்று கவிகளை அருளியுள்ளார். கவிகள் வற்றாத சீவநதியைப் போல் உலகம் உள்ளவரை பயன் தரும். என்பது உண்மை என்றாலும், சமுதாயம் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது

    கவிகள் சீவ நதியோடு ஒப்பிட்டதற்குச் சான்றாகத் திகழ்வது திருக்குறள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த திருவள்ளுவர் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களை எழுதியுள்ளார். அதன் சிறப்பு உணரப்பட்டதால்தான் அது நாற்பது வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

    திருக்குறள் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.  அதே போன்று திருவள்ளுவரை இருபதாம் நுற்றாண்டில் மானசீகமாக் குருவாக ஏற்றுக்கொண்ட நம் குருநாதர் அருளிய ஞானக்களஞ்சியம் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த அருட்பாக்களை சமுதாயம் இனிமேலாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  

    ஏதோ தேர்விற்காக மனனம் செய்து மதிப்பெண்கள் பெறுவதற்காக மட்டுமல்லாது கவிகளின் உட்பொருளை உணர்ந்து அருட்கவிஞர்களின் அனுபவங்களைப் பயனாகக் கொண்டு மனித தரத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வர வேண்டும். அறிஞர்கள், கவிகளைப் பின்வரும் சமுதாயம் மனனம் செய்து தேர்வில் மதிப்பெண்கள் பெருவதற்காக எழுதவில்லை. கவிகளின் உட்பொருளை உணர்ந்து தன்னை மனித தரத்தில் உயர்த்திக் கொண்டு பிறவிப்பயனை எய்த வேண்டும் என்பதே அருட்கவிஞர்களின் விழைவாகும்.

    அறிவினரைச் சோ்தலும், அவர்களைக் கனவிலும், நனவிலும் காண்பது இனிது என்கிறார் அவ்வையார்.

    அறிவினர்கள் வாழும் காலத்தில் வாழ்வதற்கு வாய்ப்பில்லாதவர்களுக்கு,

    அவ்வையார் கூறுவது போல் அறிவினரோடு சோ்ந்திருத்தலும்,

    மற்றும் அறிவினரைக் கனவிலும். நனவிலும் கண்பதும் இனிதாக இருக்கும் என்பதனை ஈடுசெய்வதாக அறிஞர்களின் கவிகள் இருக்கும்.

    அறிவினர்களின் கவிகளை வாசிப்பதும்,

    நினைவில் கொள்வதும்,


    உட்பொருளை நினைவில் கொள்ளுதலும்

    அறிவுப் பசிக்கு விருந்தாக அமைந்து

    பிறவிப்பயனை எய்துவதற்கு அல்லது துன்பமில்லாமல் பேரின்ப வாழ்வு வாழ்வதற்கு பேருதவியாக இருக்கும்.  இரண்டுமே ஒன்றுதான்.  பிறவியின் பயனை அடைவது என்பதே  பல பிறவிகளில் சாதாரண வாழ்வு வாழ்ந்தது போலன்றி இப்பிறவியலாவது வாழ்வாங்கு  வாழ்கி்ன்ற  பேரின்ப வாழ்வதுதானே!

    இதற்குச் சான்று வேதாத்திரி மகரிஷி அவர்களே. மகரிஷி சிறு வயது முதலே   “அங்கிங்கெனாதபடி”  எனத் தொடங்கும் தாயுமானவர் பாடலைக் கேட்டுவந்ததால், அவருக்கு. உள்ளுணர்வைத் தூண்டி தத்துவத்திலே தெளிவை அளித்து இறைநிலையை அவர் உணர்வதற்கு உதவியதாகக் கூறுகிறார். எனவே தாயுமானவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்ட மகரிஷி அவர்கள், அதே போன்று திருவள்ளுவரையும், திருமூலரையும் மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டு பயன் அடைந்துள்ளார் என்பது அவர் எழுதிய குருவணக்கப் பாடல் ஒன்றிலிருந்துத் தெள்ளத் தெளிவாகின்றது.

    திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர் ஆகியவா்கள் வாழ்ந்த காலத்தில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பிறக்கவே இல்லை. பின்னர் எவ்வாறு அவர்கள், மகரிஷி அவர்களுக்குக் குருவாக அமைந்தனர்?

    அவர்களது கவிகளே மகரிஷி அவர்களுக்கு உள்ளுணர்வைத் தூண்டி பல விளக்கங்களை அறிவித்து அவர்கள் நிலைக்கு மகரிஷி அவர்களையும் உயர்த்திப் பிறவிப்பயனை எய்துவதற்கும் பேருதவியாக இருந்துள்ளன,.

    எனவேதான் மகரிஷி அவர்கள், தன்னுடைய  சீடர்களும் பயன் பெறட்டும் என்று குருவணக்கப்பாடலில் அம்மூவருடன் இராமலிங்க சுவாமிகளையும் சேர்த்து, அதுவும் போதாது என்று

    அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து வாழ்ந்து காட்டிய அனைவரையும் நினைவு கூறும்படி பாடல் அருளியுள்ளார்.

    ஒருமை விஞ்ஞானத்தின்படி(Science of Oneness) அறிஞர்களின் அறிவெல்லாம் இயற்கையாகிய பேரறிவு ஒன்றேதான்.

    கவிகளால் சிந்தனை வளம் பெருகும்.

    ஆகவே கவிகளின் சிறப்பை நாமும் பெறவே சிந்தனைப் பயிற்சியில்  “சிந்திக்கக் கவிகள்” என்றொரு பயிற்சியும் சேர்க்கப்பட்டுள்ளது.

    கவிகளால் பயன் பெறுவதில் நான்கு நிலைகள்:

    முதல் நிலை:  கவிகளை வாசிப்பது என்பது மூளை வரை மட்டுமே செல்வது ஒருவகை. ஏனெனில் கண்கள் பார்த்து படிக்கும்போது, அதற்கு மூளை உதவியாக உள்ளதால் ‘மூளை வரை செல்லும்’ எனப்படுகின்றது.  அதற்கு மேல் ஏதும் மாற்றம் அடைவதில்லை கவியினை வாசித்தவர்

    இரண்டாம் நிலை: இந்நலையில் மனம் வரை செல்லும்.  அதாவது கவியின் உட்பொருள் மூளையைக் கடந்து மனம் வரை செல்லும்.  அறிவு ஓரளவு சிந்திக்க ஆரம்பிக்கின்றது என்று பொருள்.

    மூன்றாம் நிலை: மூளை, மனம் வரை சென்ற உட்பொருளை அறிவு பின்னர் உருவகப்படுத்திப் பார்ப்பது மூன்றாம் வகை.   இந்த நிலையில் அறிவு கவியின் உட்பொருளால் ஈர்க்கப்பட்டுள்ளது  என்று பொருளாகின்றது.  அதனால்தான் அறிவு அதனைத் தீவீரமாக சிந்திக்கின்றது.

    நான்காம் நிலை:  கடைசியாக கவியின் உட்பொருளாக மாற்றம் அடைந்தால்தான் கவி வாசிப்பதன் முழுப்பயன் நிறைவேறும். கவியும் அந்த நபரை பொறுத்த வரையில் பயனுள்ளதாக அமைந்ததாகவும் இருக்கும். கவியை வாசிக்கும்போது, கவி அருளிய அருளாளரை நினைந்து, நினைந்து, போற்றி, போற்றி அவரது அரிய திறமைகளைம் பெருமைகளையும் நினைத்து தனக்குள்ளாகவே மகிழலாம்.  வாய்ப்பு இருந்தால், ‘யான் பெற்ற இவ்வின்பம் பெரு இவ்வையகம்’ என்பதற்கிணங்க மற்றவர்களிடம் அதனைப் பற்றிப்பேசி தானும் மகிழ்ந்து, அடுத்தவரையும் மகிழ வைத்து ஊக்குவிக்கலாம்.  ஆனால் நம் கவனம் மட்டும் அறிவின் முழுமையை அடைவதிலேயே இருக்க வேண்டும்.

    இது போன்ற மகிழ்ச்சி அவ்வைத்தாய் கூறும் அறிவினரைச் சேர்ந்து, அவரைக் கனவிலும், நனவிலும் அடிக்கடி நினைப்பதால்தான் சாத்தியமாகின்றது. அதனால்தான் அவ்வைத்தாய் அறிவினரைச் சேர்ந்திருந்து அவரை கனவிலும், நனவிலும் நினைப்பதை இனிதினும் இனிதாகக் கருதுகிறாள் அவ்வைத்தாய்.

    4) சிந்திக்க குரு – சீடர் உரையாடல்-இப்பயிற்சியின் நோக்கம்:

    மூன்று வகையான சிந்தனைப் பயிற்சியின் நோக்கங்களை தனித்தனியாக இதுவரைப் பார்த்தோம். இப்போது நான்காவதான குரு – சீடர் உரையாடல் என்கின்ற சிந்தனைப் பயிற்சியின் நோக்கத்தை அறிவோம்.

    தழிழ் இலக்கியம் இயல், இசை. நாடகம் ஆகிய மூன்றைக் கொண்டது. இப்போது . மூன்றாவதான நாடக வடிவில் இந்த பயிற்சி அமைகின்றது. ஆகவே இணைய சத்சங்கம். இயல், இசை. நாடகம் ஆகிய மூன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    நாடகம் என்பது என்ன? சமுதாய நலன் கருதி சொல்லவேண்டியக் கருத்தை நாடக வடிவில் எடுத்துக் கூறப்படும். நாடகத்தில் வெவ்வேறு கதாபாத்திரங்கள் நடிப்பார்கள். சொல்ல வேண்டியக் கருத்தை நேரிடையாகச் சொன்னால் புரியாமல் போகலாம். ஆகவே அக்கருத்து நாடக வடிவில் சொல்லப்படுகின்றது. மகாத்மா காந்தி அடிகள் சிறு வயதில், அரிச்சந்திரன் நாடகம் பார்த்துவிட்டுத்தானே உண்மையே பேசவேண்டும் என்கின்ற உறுதி பூண்டார். நாடகம் தானே அவரை உண்மையைப் பேசுவதற்குத் தூண்டி விட்டது.

       ஒரு பொருளைப் பற்றி நேரிடையாகக் கூறுவதற்கு அதிக நேரம் தேவையில்லை. ஆனால் நாடக வடிவில் காட்சிப் படுத்திக் கூறும் போது நாடகம் முடிந்த பிறகும், அது மனதில் நின்று சிந்திக்கச் செய்யும். குரு – சீடர் உரையாடல் பயிற்சியில் இரண்டு பாத்திரங்களே உள்ளனர். குரு மற்றும் சீடர். குருவிடம் மாணவன் ஒரு பொருள் பற்றி அறிந்து கொள்ள கேள்விகளைக் கேட்பார். குரு அதற்குப் பதில் சொல்வார். சீடர் அறிய வந்த பொருள் பற்றி அவரது ஐயங்களைப் பல கேள்விகளாகக் கேட்பார். குருவும் சீடரின் நிலை அறிந்து பதில் கூறுவார், சீடருக்கு முற்றிலுமாக ஐயமின்றி அறியவந்த பொருள் பற்றி அறியும் வரை குரு – சீடர் நாடகம் தொடரும். சீடர் அறிய வந்த பொருள் அறிந்ததும் நாடகம் முடிவுறும். 

        இதுவரை சிந்தித்தலின் நான்கு பயிற்சிகளைப் பார்த்தோம்.  அடுத்த பயிற்சியான சிந்தித்தலின் அன்றாடசுயசோதனை பயிற்சியினை அடுத்த அறிவிற்கு விருந்து பகுதியில் 26.07.2020 அன்று அறிந்து கொள்வோம்.  வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளர்க  அறிவுச் செல்வம்!!


  • FFC-298(262) சிந்திக்கப் பழகுவதற்கு பயிற்சி அவசியமா?1/3

    வாழ்க மனித அறிவு!                                        வளர்க மனித அறிவு!! 

    lotus

    [rev_slider home-slider-1]

    FFC-298(262)

    19.07.2020-ஞாயிறு

    சிந்திக்கப் பழகுவதற்கு பயிற்சி அவசியமா? 1/3

     

     வாழ்க வளமுடன்!

        அவசியமா என்றால் எல்லோருக்கும் அவசியமில்லை.  ஓர் உதாரணத்தின் மூலம் விளங்கிக்கொள்வோம். 

        மீன்குஞ்சிற்கு நீந்துவதற்கு  நீச்சல் பயிற்சி தேவையிருக்கின்றதா?  இல்லையே!  காரணம்  அது பிறந்ததுமே வாழ்வைத் தொடங்குவது  நீரிலே.  ஆகவே பிறப்பதும் நீரில்தான்.  நீரில் வாழ்வு ஆரம்பிக்கும்போது அது நீந்தித்தான் ஆகவேண்டும். ஆகவே மீன்குஞ்சு  பிறந்த உடனே   நீந்துகின்றது. நீந்தத் தெரியவில்லையெனில் அது மடிந்துவிடும்.  பிறக்கும் குஞ்சுகளெல்லாம் உடனே இறந்துவிடவேண்டியதுதான்.  எனவே இயல்பாகவே நீந்த ஆரம்பித்து விடுகின்றது அது.

          இது இயற்கையில் உள்ள ஏற்பாடு என்று நினைந்து மகிழலாம்.  ஆனால் இயற்கையில் உள்ள ஏற்பாடு என்பதைவிட  பிறந்தவுடனே வாழ்க்கையை நீரில் தொடங்க வேண்டியுள்ளதால்  கருமையத்தில் நீந்துகின்ற திறனுடனே பிறக்கின்றது மீன்குஞ்சு என்கின்ற ஆராய்ச்சியினால் அறிந்த  கண்டுபிடிப்பு மேலும் ஆனந்தத்தை அதிகரிக்கும் அல்லவா?  அதிகரிக்கும்!!

         எல்லாருக்கும் சிந்தபை்பயிற்சி அவசியமில்லை என்பது எப்படி?     

              மீன்குஞ்சுபோன்று சிலர்  சிந்திக்கும் இயல்புடையவர்களாகவே  உள்ளனர். அதாவது  அவர்கள் இயல்பாகவே

         சிந்திக்கும் பழக்கம் உடையவர்கள்.  சிந்தித்து சிந்தித்து பழக்கமாக்கிக்கொண்டதும் சுயபயிற்சியே.  மேலும் அவர்கள் 

         சிந்தித்தலில் ரசனை உள்ளவர்கள். சிந்தித்தலின் ருசியினை உணர்ந்தவர்கள்.

         அவர்களது ஆன்மாவின் இயக்கம் விஞ்ஞானமய கோசத்தில் இயங்கும். 

         அதற்கு அடுத்தபடியான  ஆனந்தமய கோசத்திலும் இயங்கும். 

         ஆகவே  சிந்தித்தலில் ஆனந்தம் அடைபவர்கள் அவர்கள். 

         அனந்தத்தை உணர்ந்து ஆனந்தம் அடைபவர்கள் அவர்கள்.

    தான் சிந்தனைச்சிற்பியாக திகழும்  அவர்கள் ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கிணங்க  மற்றவர்களும் தங்களைப்போன்று சிந்தித்து உயர்வதற்கு உதவலாம்.  அங்கேதான் சிந்தனைப்   பயிற்சி தேவையாக உள்ளது.  

         ஆகவே சிந்திக்கப் பயிற்சி தேவையானவர்களுக்கு  சிந்தனைப் பயிற்சி அவசியம் தான் என்று பொருள்கொள்ள வேண்டியுள்ளது.  சிந்திக்கக் கூட பயிற்சி உண்டா என்றுகூட ஐயம் எழலாம்.  எந்த ஒன்றும் ஆரம்பத்தில் பயிற்சியுடன் ஆரம்பிக்க வேண்டும்.   பயிற்சியின்றி சாதனையாக்க முடியதாது.   

    சிந்தனை ஆறாம் அறிவின் வளம்:

    சிந்தனைவளம் இயற்கைவளங்களில் மிக மிகச் சிறப்பானதும், முதன்மையானதுமாகும். ஆறாம் அறிவின் துணை கொண்டு இயற்கை வளத்தைக் கண்டுபிடித்து, வாழ்வின் வளமாக்கி பயன் அடைந்து வரும் சமுதாயம் அதே இயற்கையின் ஆறாம் அறிவினுடையப் பயனாகிய சிந்தனை வளத்தை பயன்படுத்தாமல் இருக்கின்றது மிகவும் வருத்தப்படுவதாகவும், கவலைக்கிடமாகவும் உள்ளது. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் சிந்தயைாளர்கள் வாழ்ந்தார்கள், வாழ்ந்து வருகின்றார்கள். மலர்கின்ற அச்சிந்தனைப் பூக்களின் வாசனையாவது நுகரப்படுகின்றதா என்றால் அதுவும் மிகமிகக் குறைவே.

    அவர்கள் கூறிய அறநெறி அறிவுரைகளையாவதுக் கேட்டு மனித குலம் திருத்திக் கொண்டு வாழ்கின்றதா என்றால் அதுவும் இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் அறிவுடைமை, ஒழுக்கமுடைமை, நாணமுடைமை ஆகிய அதிகாரங்களை ஒதுக்கி அதில் பத்து குறட்பாக்களின் வாயிலாக ஒரு பொருள் பற்றி வெவ்வேறு கோணங்களில் எடுத்துக் கூறியும் இதுவரை இந்த சமுதாயத்தில் ஒழுக்கமும் அறிவுடைமையும் சிறப்புற்றுள்ளதா? சமுதாயம் திருந்தியுள்ளதா?

    11230650_1612478765690891_6536263016119760624_n

    இயற்கைக்கு/இறைக்கு நாக்கு இல்லை:  

    தனக்கு நாக்கு இல்லை என்பதால் சிந்தனையாளர்களின் நாக்காக இருந்து கொண்டு, சிந்தனையாளர்களின் வழியாக, இயற்கை தன் குழந்தைகளுக்கெல்லாம் சொல்லியும் குழுந்தைகளின் கேளா அலட்சிய நிலையைப் பார்ப்பதற்கு எப்படி இருக்கும் இயற்கை அன்னைக்கு? சிந்தனையைாளர்கள் கூறுவது யாருடையது? இயற்கையினுடையதுதானே! இப்போது கூறிய இந்த இரண்டு கூற்றுக்களும் ஒருமை விஞ்ஞானத்தின் புரிதலின் வெளிப்பாட்டின் கீழ் கூறப்பட்டதாகும். ஏதோ மொழி வளத்திற்காக கூறுவதன்று.

    அமுதமொழிகளை ரசிப்பதே சிந்தனை-உயர்தலின் அறிகுறி:

    சிந்தனையாளர்கள் கூறும் வாழ்வியல் அறிவுரைகளைக் கேட்பதற்கே சிந்தனை அவசியமாகின்றது. முதலில் அறிஞர்களின் அமுத மொழிகளைக் கேட்பதற்கு ஆர்வம் இருக்க வேண்டும். வயிற்றுப் பசியைத் தீர்ப்பதற்கு உண்ண ஆர்வம் இருப்பது போல் அறிவுப்பசிக்கு உண்ண ஆர்வம் இருக்க வேண்டும். அதுதான் சிந்தனையாளர்கள் உதிர்க்கும் அமுதத்தை தேனமுதமாக்கி உண்ணுவதாகும்.

       சிந்தனையாளர்களின் அமுதமொழிகளைக் கேட்பதற்கு ஆர்வம் இருப்பதே சிந்திக்கக் கற்றுக்கொள்வதன் அறிகுறியாகும். அதுதான் சிந்திக்கும் கலையின் முதற்படியாகும். அந்த ஆர்வம் வந்துவிட்டால் அங்கே சிந்தனை வாடாப் பூ மலர ஆரம்பிக்கின்றது என்று பொருள்.

    செல்வங்களில் முதன்மையானதுஅறிவுச்செல்வமாகும்:

    மனிதன் சிக்கலின்றி மகிழ்ச்சியாக வாழ்வதற்குப் பல வளங்கள் தேவைப்படுகின்றன. அவ்வளங்களில் ஒன்று செல்வம். செல்வம் என்றால் பொதுவாக சமுதாயத்தால் கருதப்படுவது யாதெனில் பொருட்செல்வம் மட்டும் தான். ஆனால் செல்வ வளங்களில் முதன்மையானது அறிவுச்செல்வம். பொருட் செல்வத்தை ஈட்டுவதற்குக்கூட அறிவு தேவைப்படுகின்றது.

    சீர்திருத்தம்(06.05.1994)  

    சிந்தனையும் சிக்கனமும் சீர்திருத்தம் மூன்றும்,

    சிறப்பான செல்வவளம், வாழ்வின் வளம் நல்கும்.  

                                                                                                    — ஞா.க.: 1773

    Scientist of Consciousness

    நல்லோர் இயல்பு

    பண்பு(02.01.1955)

             சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும்,

               பந்தித்து நிற்கப் பழகுதல் நற்பண்பு.”     …       ஞா.க. 632

    பொருட் செல்வத்தை ஈட்டுவதற்கானத் திறமையை முதலில் அறிவு பெற வேண்டும். இங்கேயும், அதாவது பொருட்செல்வத்தைத் தேடும்போதுகூட அறிவு தேவையாய் இருக்கின்றது. பொருட்செல்வத்தை,

    • எவ்வாறு,
    • எவ்வழியில்,
    • எவ்வளவு               

           ஆகிய அறவழிகளில் ஈட்டுவது,

    • ஈட்டியதை எவ்வாறு அறவழியில் சேமிப்பது.

    எவ்வழியில் தனக்கும், குடும்பத்திற்கும், மற்றும் வறியோர்க்கு ஈகையாக செலவழிப்பது ஆகிய முடிவுகளை அறிவுதான் எடுக்க வேண்டும். பொருட் செல்வம் ஈட்டுவதற்கும் அறிவு தேவையாக இருக்கின்றது. இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக்குவதற்கும் அறிவுதான் தேவைப்படுகின்றது.

    ஆகவே செல்வத்தில் முதன்மையானது அறிவுச் செல்வமாகும். ஆனால் இத்தகைய அறிவைப் பற்றிய அறிவு(Knowledge of Consciousness) இல்லாமல் உள்ளது மனித சமுதாயத்தில். இது பெரும் குறை. இப்பெரும் குறையை வைத்துக் கொண்டு சமுதாயம் எவ்வாறு வளமாக, நலமாக, அமைதியாக வாழ முடியும்?

    அறிவைப் பற்றிய விஞ்ஞானத்தை(Science of Consciousness) இயற்கை,

         சாதாரண குடும்பத்தில்,   பேறு பெற்ற,   கொடுத்து வைத்த சின்னம்மாள், வரதப்பன் தம்பதியினர்           தவமிருந்து பெற்ற வேதாத்திரி எனும் தெய்வீகக் குழுந்தையும்,

     பின்னர் உலகநலத் தொண்டரான வேதாத்திரி மகரிஷியின் வாயிலாக    எடுத்து இயம்புகின்றது.   தயவு செய்து அதனைப் படித்து நலம் பெறுங்கள்.

    Studied in the city of the Universe:

    Who studied in the city of the Universe? நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி தான் பிரபஞ்ச பல்கலைக்கழகத்தில் படித்து மகத்தான வெற்றியும் பெற்றிருக்கிறார்.  

    அதன் விளைவுதான்

         இயற்கையியல்,

         ஒருமையியல் (Science of Oneness–Science Of Pure Advaida),

         அறிவின் அறிவியல்(Science of Consciousness)

         வாழ்வியல், 

        குடும்பவியல்,

         உலக அமைதியியல்(Science of World Peace).    ஆகிய இயல்களின் தோற்றம்.

    மூன்றாம் வகுப்பு வரை படித்துள்ள வேதாத்திரி மகரிஷியினுடைய, இயற்கையியல் மற்றும் வாழ்வியல் கண்டுபிடிப்புகளை பள்ளிகளுக்கும் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டப்படிப்பு வரை இயற்கையால் கொண்டு போக முடிந்துள்ளதற்கான காரணம் மகரிஷியின் சிந்தனைகள் தான்.

    திருவள்ளுவர், திருமூலர், அவ்வையார் போன்ற அறிஞா்கள் எந்த பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்றனர்? அவா்கள் இயற்றிய அறநூல்கள் தான் பள்ளியிலும் கல்லூரியிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. அதில் தேர்ச்சி பெற்று பட்டம் பெறுகின்றனர் மாணவர்கள். அறிஞர்கள் சிந்தித்ததன் பயனாக பின்னர் வரும் சமுதாயம் பயன் பெறுகின்றது.

    மகரிஷி அவர்கள் பிரபஞ்ச பல்கலைக்கழக்தில் படித்த இரகசியம் வெளிவந்த நிகழ்ச்சி ஒன்று அவர் வாழ்க்கையில் நடந்ததை அறிந்து கொள்வோம்.

    மகரிஷி அவர்கள் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகக் கூட்டத்தில் கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் விடை அளித்தாராம். மகரிஷி அவர்களின் பேச்சால் ஆச்சரியமடைந்த அமெரிக்கர்கள் மகரிஷி அவர்களிடம் “You are speaking on a wide variety of topics. Which was the University you studied in, Swamiji?” எனக்கேட்டார்களாம்.

    அதற்கு மகரிஷி அவர்கள் “ I did not study in any University; I only studied in the city of the Universe” என்றாராம். மகரிஷியின் இக்கூற்று உண்மைதானே!

    அதாவது இயற்கை அவருக்கு அறிவுறுத்தி அவர் சிந்தித்ததை மற்றும் உள்ளுணர்வாகப் பெற்றதை வாழ்க்கையில் நடைமுறையில் சரியாக உள்ளதா, என உறுதி செய்ததை, எல்லாவற்றையும் சமுதாயத்திற்கு அறிவித்துவிட்டார் உலநலத்தொண்டரான அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    அதுவும் அவர் படித்தது பிரபஞ்ச பல்கலைக்கழகத்தில் என்பதும் சரிதானே! அருந்தவத்தால், அவர் மனதை பிரபஞ்சம் வரை விரித்து அங்கேயே நிற்கின்ற பழக்கத்தை கைவல்யப்படுத்திவிட்டார்.

    ஆகவே, இது வரை வாழ்ந்த அறிஞர்களின் வாயிலாகவும், இயற்கை அவருக்கு, உணா்த்தியதை சமுதாயத்திற்குத் தெரிவித்துள்ளார். இது எல்லோருக்கும் சாத்தியம் என்றும் கூறுகிறார்.

    தாத்தா விதைத்த அவரைச் செடி:

    ஒரு முறை. கும்பகோணத்தில் நடந்த பயிற்சியின் முடிவு நாளன்று, அவரது உலக நலத்தின்பால் உள்ள எண்ணத்தை, அவா் ஒரு கதையின் வாயிலாகக் கூறினார்.

    தாத்தா ஒருவர் அவரை விதையை நிலத்தில் ஊன்றி, நீர் ஊற்றி, அது முளைத்து, வளர்ந்து கொடியாகி, அதற்கு பந்தலும் போட்டு விட்டார். கொடி உயர்ந்து காயும் காய்த்து விட்டது. ஆனால் பந்தலுக்கு மேல் உயர்ந்த கொடியில் காய்த்திருக்கும் காயை அவரால் எட்டிப் பறிக்க முடியவில்லை.

    அதற்கு அவரது பேரன் அவரிடம்  “தாத்தா! என்னை உங்கள் தோள் மீது ஏற்றி உட்கார வையுங்கள். உங்கள் தோளின் மீது உட்கார்ந்து கொண்டு காயைப் பறிக்கிறேன் என்று கூறினானாம்.

    இந்த கதையைக் கூறிவிட்டு மேலும் மகரிஷி அவர்கள் தொடர்ந்தார். அவரது மாணவ–நண்பர்களிடம் கூறியதாவது:-  

    “அதுபோல் நான் அவரைச் செடியின் விதை ஊன்றி, செடியும் முளைத்து, பந்தலும் போட்டு விட்டு. கொடி படர்ந்து பூ பூத்து காய்க்க ஆரம்பித்து விட்டது.

    நீங்கள் என் தோளின் மீது உட்கார்ந்து காயைப் பறியுங்கள். இயற்கை எனக்குத் தெரிவித்ததை எல்லாம் நான் உங்களிடம் தெரிவித்து விட்டேன். ஒன்றையும் விட்டு விடவில்லை.

    இனி இதனை அடிப்படையாகக் கொண்டு மேலும் நீங்கள் எளிதாக சிந்திக்க முடியும். நீங்கள் ஆன்மீக வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்துங்கள். ஆன்மீகத்தில் ஆழ்ந்து போனால், இச்சை இல்லாமலாகி, புலன் இன்பமே அனுபவிக்க முடியாமல் போய்விடுமோ என்கின்ற மாயையான அச்சத்தை நீக்கி, ஆன்மீகத்தை வாழ்வியலாக்கி அரும்பெரும் சாதனைகளைப் படைக்க இருக்கின்றீர்கள்” என்றார்.

    சிந்திக்கவில்லை எனில் அது ஐந்தாம் அறிவு:

    அறிவுச் செல்வத்தைப் பெறுவதற்கு அறிவு சிந்திக்க வேண்டும். சிந்தனை என்பது மனித வாழ்விற்குத் தேவையான வளமாகும் மனித இனத்திற்கும் ஐயறிவு விலங்கினத்திற்கும் உள்ள வேறுபாடே ஆறாம் அறிவுதான். சிந்திக்கின்ற அறிவுதான் ஆறாம் அறிவு. சிந்தித்தால்தான் அது ஆறாம் அறிவு. இல்லை எனில் அது ஐந்தாம் அறிவு. எப்படி? சிறு நடைமுறை நடப்புகளின் வாயிலாக அறிவோம்.

    இருவருக்கு இடையே வாய்ச்சண்டை நடக்கும் போது, அது அதிகமாகி, முதலாமவர், இரண்டாமவரை  “மிருகம் மாதிரி நடந்து கொள்ளாதே.” என்றால் இரண்டாமவருக்குச் சினம் பொங்கி, அதிகமாகி, கையை ஓங்கி முதலாமவரை அடிப்பதற்கு செல்வதைப் பார்த்திருக்கலாம். காரணம் என்ன?

    ஒரு காரணம், முதலாமவர் இரண்டாமவரை சொன்னது முதலாமவருடைய கீழ்த்தரத்தைப்(மிருகம் என்று கூறியது) பற்றிய உண்மைக்கூற்று.

    இரண்டாவது காரணம், மனிதர்கள் புகழுக்கு ஆசைப்படுபவர்கள், ஏங்குபவர்கள். தன்னைப் பற்றி கற்பனையாக, பொய்யாக பிறர் புகழ்ந்துரைத்தாலும், அதில் மகிழ்ச்சி அடையும் இயல்புடையவர்கள். எனவே,  “மிருகம் மாதிரி நடந்து கொள்ளாதே” என்று இரண்டாமவரின் கீழ்த்தரத்தைச்சுட்டிக்காட்டியது இரண்டாமவருக்கு அவமானமாகி விட்டது.

    சிந்தித்திருந்தால் அங்கே சண்டைக்கே வாய்ப்பில்லை. சிந்திக்காததால் சினம் அதிகமாகி கைகலப்பு ஏற்படும் அளவிற்கு சென்று விடுகின்றது, சில நேரங்களில் கொலை நடக்கும் அளவிற்கும் சென்றுவிடுகின்றது நிலைமை. பிறகு வாழ்நாள் முழவதும் வருந்த வேண்டியுள்ளது.

    சிந்தித்தல் பொறுமையைத் தரும்.

    அறிவு ஆட்சி செய்திருக்கும் அந்த நிகழ்வில்.

    பின் விளைவுகளைத் தடுத்திருக்க முடியும்.

    நிகழ்வில் பாதிப்பை ஏற்படுத்தியவர் மிருகமாகி விட்டார்.

    சிந்தித்தல் ஆறாம் அறிவின் சிறந்தகலை:

    சிந்தித்தால்தான், ஆறாம் அறிவு,

    பரிணாமத்தில் மனித இனத்திற்கு முந்தைய இனமான விலங்கினப் பண்பின் வாசனையால் மறந்தும்,

     ஐந்தாம் அறிவாக செயல்பட விடாமல்,

     ஆறாம் அறிவாகச் செயல்பட முடியும்.

    சிந்தித்தல், ஆறாம் அறிவை முதன்மைச் செல்வமாக்கும், துன்பங்கள் நீங்கி பேரின்பத்தை அனுபவிக்கச் செய்யும். சிந்தித்தல் என்பது ஆறாம் அறிவின் சிறந்த கலை.

    எல்லாக் கலைகளிலும் எல்லோராலும் சிறந்து விளங்க முடியாது.

    ஏதாவது ஒரு கலையிலும் எல்லோராலும் சிறந்து விளங்குவது சாத்தியமில்லை.

    ஆனால் சிந்தித்தல் கலை எல்லோருக்கும் பொதுவானது. ஏனெனில் மனிதன் என்கின்ற உயிரினத்திற்கு அடையாளம் ஆறாம் அறிவே. மனிதனுக்கு அடையாளமான ஆறாம் அறிவினுடைய அடையாளமே சிந்தித்தல் தானே. ஆகவே சிந்தித்தல் எல்லோருக்கும் பொதுவானதாகின்றது.

    சிந்தித்தல்தான் ஒழுக்கத்திற்கு வழி வகுக்கும்.

    ஆனால் எதார்த்தத்தில் பெரும்பாலோர் சிந்திப்பது கிடையாது.

    சிறந்த சிந்தனையாளர் என்று புகழப்படும் அளவிற்கு சிந்திக்கமுடிய வில்லையாயினும் வாழப் பிறந்துவிட்ட மனிதன் வாழ்க்கையை வெற்றிகரமாக துன்பமில்லாமல் இன்பமாக வாழ்வதற்காவது கீழ் கண்டவாறு சிந்திக்க வேண்டாமா?

    • நல்லெண்ணமாக இருப்பதற்கு எண்ணத்தை ஆராய வேண்டாமா?
    • பேராசை ஆட்டிப்படைக்காமல் இருக்க, ஆசையை சீரமைக்க வேண்டாமா?
    • கோபமே பாவங்களுக்கெல்லாம் தலை என்று தெரிந்தும் சினம் தவிர்க்க வேண்டாமா?
    • இன்பத்தைச் சுரண்டும் கவலையை ஒழிக்க வேண்டாமா?
    • அறிவிற்கு விருந்தளிக்க நான் ஏன் பிறந்தேன் என தெரிந்து கொள்ள வேண்டாமா?

    சிந்தனையின்மையால் தான் வாழ்க்கையில் தவறுகள் நடக்கின்றன. அதன் விளைவுதான் துன்பமாகின்றது. தனக்கு மட்டும் துன்பம் ஏற்படுவதில்லை. அவனைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கும், மற்றவர்களுக்கும், சமுதாயத்திற்கும் துன்பம் ஏற்படுகின்றன.

    கூர்மை என்பது எவ்வாறு உருவமில்லா அறிவிற்குப் பொருந்தும்?    

    அறிவு தன்னுடைய திறனைப் பற்றிக் கூறுவதற்கு  ‘அறிவுக்கூர்மை’ என்கின்ற சொல்லை ஏற்படுத்திக் கொண்டது.

    கூர்மை என்கின்ற சொல் எவ்வாறு உருவமில்லா அறிவிற்குப் பொருந்தும்? உருவம் உள்ள பருப்பொருளுக்கு கூர்மை இருப்பது சாத்தியமாகும்.

    உதாரணத்திற்கு காய் நறுக்கும், உருவமுள்ள கத்தி கூர்மையாக இருக்கும். இருக்க வேண்டும். இல்லை என்றால் காய் நறுக்கவே முடியாமலும் போகலாம். அல்லது எளிதாக நறுக்க முடியாது. சிரமப்பட்டுதான் காயை நறுக்க வேண்டும். காய் நறுக்குவதில் நளினம் இருக்காது. கத்தி கூர்மையாக இருந்தால் தேவையில்லாது சிரமப்பட வேண்டியதில்லையே! இந்த விளக்கம் உருவமில்லா கத்தியைப் பற்றியது.

    ஆனால் நாம் இப்போது சிந்திப்பதோ உருவமில்லா அறிவினுடையக் கூர்மையைப் பற்றி.

    அறிவிற்கு உருவமில்லை என்பதால் அறிவில் எவ்வாறு கூர்மை சாத்தியம் என ஐயம் எழலாம்.

    குழந்தையின் அழகை வர்ணிக்கும் போது மூக்கு கூா்மையாக உள்ளது என்கிறோம். ஏனெனில் மூக்கிற்கு உருவம் இருக்கின்றது.

    ஆனால் உருவமில்லாத அறிவிற்கு கூர்மை என்பது என்ன? சிந்தித்தல்தான் அறிவின் கூர்மை.

    அறிவு கூர்ந்து கவனிப்பதையே அறிவின் கூர்மை என்கிறோம். அறிவின் கூர்மையேதான் சிந்தனை என்பதாகும்.

    இப்போது சிந்தனைப் பயிற்சி பற்றி அறிவோம்.

    சிந்தனைப் பயிற்சி:

    எந்த ஒரு கலையையும் பயிற்சி செய்துதான் அக்கலையில் வெற்றி பெற முடியும்.

    சிந்தித்தல் என்பது ஒர் அரிய கலையாக உள்ளது மனித குலத்திற்கு.

    ஏனெனில் மனிதர்களில் சிந்திப்பவர்கள் மிக மிகச் சிலரே.

    ஏன் பிறந்தோம்,

    எங்கே செல்ல இருக்கிறோம்,

    இன்பதுன்பம் ஏன் வருகின்றது என்றுகூடத் தெரியாமல் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கின்றது.

    சிந்தனை என்பதும் எண்ணம் தான், ஒரு பொருள் பற்றி ஏன், எதற்கு, எவ்வாறு என வினாக்கள் எழுந்து விடை கண்டுபிடித்து தெளிவு பிறக்கும் வரை மனதில் தொடர்ந்து எழுபவைகள் அனைத்தும் எண்ணங்கள்தான்.

    மனம் எண்ணுகின்றது.

    எண்ணும் நிலைகள் மற்றும் தரத்தை வைத்து மனம் ஐந்து நிலைகளில் இயங்கக் கூடியதாகக் கண்டுபிடித்துள்ளனர் அறிவை அறியும் கலையில் தேர்ச்சி பெற்ற அறிதல் கலைஞா்களாகிய அறிஞர்கள்(அறிவை அறிந்த கலைஞர்கள் அறிஞர்களாவர்)

    முதல் இரண்டு நிலைகளிலேயே வாழ்கையின் முடிவு:

    1) அன்னமய கோசம்
    2) மனோமய கோசம்
    3) பிராணமய கோசம்
    4) விஞ்ஞானமய கோசம்
    5) ஆனந்தமய கோசம்

    ஆகிய ஐந்து நிலைகளில் மனம் இயங்கும். கோசம் என்றால் உறை என்று பொருள். பெரும்பாலோருக்கு அன்னமய கோசம், மனோமய கோசம் ஆகிய முதல் இரண்டு நிலைகளிலேயே மனம் இயங்குகின்றது.

    சாப்பிடுவது மற்றும் அன்னத்தின் மீது மனம் செல்வது. ஆகவே பெரும்பாலோர் சிந்திப்பதில்லை. அன்னமய கோசம் மற்றும் அன்னைத்தைப் பற்றிய மனோமய கோசத்திலேயே மனம் இயங்குகின்றது. 

    தின்று திரிந்து உறங்கவோ பிறந்தோம் என வினவுகிறார் மகரிஷி  அவர்களும்.

    சமூகநல ஆர்வலர்களின் எண்ணம்:

     “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்கிறாரே அவ்வைத்தாய்.

    எப்படி மானுடப் பிறவி அரிதாக இருக்க முடியும்?

    சிந்திக்காமல் இருந்தால் இந்தப் பிறவி அரிதானதாக இருக்கமுடியுமா?

    எல்லோருமே சிந்தித்து விஞ்ஞானி ஆக முடியுமா என்று கூட ஐயம் எழலாம்.

    விஞ்ஞானியாக இருந்தாலும் அஞ்ஞானியாக இருந்தாலும், இருவருமே வாழப் பிறந்தவர்கள். ஆகவே வாழ்வியல் விஞ்ஞானம் எல்லோருக்குமே பொது. ஆகவே எல்லோரும் வாழ்வியல் விஞ்ஞானிகளாக வேண்டும்.

    இதுவும் சற்று இயலாத காரியமாக இருப்பதால் வாழ்வியல் சூழலையாவது அறிஞர்கள், பொறுப்புடைய தலைவர்கள் ஏற்படுத்தி மனிதகுலம் தன்னுடைய பூர்வீகச் சொத்தான அமைதியை அனுபவிக்கச் செய்ய வேண்டும் என்பதே நோக்கமும் ஆர்வமும்.

    ஆனந்த வாழ்விற்கு மூச்சு போன்று தொடர் சிந்தனை அவசியம்

    வெகு சிலருக்குத்தான் மனம் மூன்றாவது நிலையான பிராணமய கோசத்தில் இயங்குகின்றது.

    அவர்களிலும் வெகுச் சிலருக்குத்தான் மனம் நான்காவது நிலையான விஞ்ஞானமய கோசத்தில் இயங்குகின்றது. இவர்களே சிந்திப்பவர்கள்.

    இந்த சிந்திப்பவர்களிலும் ஒரு சிலரால்தான் ஆனந்தமய கோசத்தில் மனதை இயங்க வைக்க முடிகின்றது.

    ஆகவே மனிதன் ஆனந்த வாழ்வு வாழ சிந்தனை, தொடர் சிந்தனையாக அமைய வேண்டும்.

    பெரும்பாலோர் சிந்திக்காததுதான் இன்றைய மனிதகுல அமைதியின்மைக்குக் காரணம்.

    இதுவரை சிந்தனைப்பற்றிய கருத்தியலை(THEORY)அறிந்து கொண்டோம்.

    இனி செய்முறைக்குச்(PRACTICAL) செல்வோம்.  

     வரும் 22.07.2020 புதன் அன்று அறிவிற்கு விருந்து பகுதியில்  இதன் தொடர்ச்சியைக் காண்போம்.  ….தொடரும்

    வாழ்க மனித அறிவு!     வளர்க மனித அறிவு!!


  • இன்றைய விருந்து – ஐவகை மயக்கம் – FFC-297(102)

    வாழ்க மனித அறிவு!                     வளர்க மனித அறிவு!!


    ஐவகை மயக்கம்- FFC – 297 (102)

    16-07-2020-புதன்

    வாழ்க வளமுடன்!

    இன்றைய சிந்தனைக்கான பொருள் ‘ஐவகை மயக்கம்’. மயக்கம் என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். மயக்கம் என்பது அறிவு தன் சுயநினைவு அற்றலாகும். உறவினர் யாராவது மயக்கம் அடைந்துவிட்டால் அதிர்ச்சியும் கவலையும் அடைவோம். எப்போது மயக்கம் தெளிந்து சுய நினைவிற்கு வருவார் என்கின்ற கவலை இருக்கும். அநேக நேரங்களில் மயக்கம் சீக்கிரம் தெளிந்து விடுவதும் உண்டு.

    மயக்கம் நீடித்தால் நீண்ட மயக்கத்திற்கு (coma) நோயாளி தள்ளப்பட்டுவிடுவார். இன்னும் கவலை அதிகரிக்கும். மருத்துவ சிகிச்சையின் பயனாக நீடித்த மயக்கத்திலிருந்து தெளியலாம். அல்;லது சில நேரங்களில் நீடித்த மயக்கம் தெளியாமலேயே நோயாளி படுக்கையிலேயே இருப்பார். அப்போது படுக்கைப் புண்(Bed soar) ஏற்பட்டுவிடும். பிழைப்பதும் கடினமாகிவிடும்.

    எண்ணிக்கையிலோ இந்த மயக்கம் ஒன்றே ஒன்றுதான். ஒரு மயக்கமே இந்த நிலையை ஏற்படுத்துகின்றது என்றால் ஒரு மயக்கத்திற்கு மேலாக ஐவகை மயக்கம் வந்துவிட்டால் என்ன ஆகும் மனிதனின் நிலை? வந்து விட்டால் என்பதில்லை, இப்போதே ஐவகை மயக்கத்தில்தான் சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்கின்றனர் அறிவை அறிந்த அறிஞர்கள். ஐவகை மயக்கம் என்பது என்ன?

    அதுதான் ஐம்புலன் மயக்கம். ஐந்து புலன்கள் வழியாகப் பெறும் இன்பங்களில் மயங்கி, மூழ்கி அறிவு துன்பத்துக்குள்ளாகின்றது. புலன்கள் இருப்பதே இன்பத்தை அனுபவிக்கத் தானே என ஐயம் எழலாம். புறப்பொருட்களிலோ அல்லது புறநிகழ்ச்சிகளிலோ இருந்து வரும் இன்பத்தை அனுபவிக்கத்தான் புலன்கள் உள்ளன என்பதில் ஐயமில்லை. ஆனால் புலன்கள் வழியாக அனுபவிக்கும் இன்பம் அளவு மீறும்போதும், முறை மாறும் போதும் துன்பமாகிவிடுகின்றதே! அதனைக் கவனியாமல் புலன், இன்பங்களைத் துய்ப்பதில் அளவு மீறுவதிலும், முறை மாறுவதிலும் பழக்கமாகி ஒரு காலகட்டத்தில் புலன்களுக்கு அடிமையாகி விடுகிறான் மனிதன். மேலும் எந்த புலனை அதிகமாகப் பயன்படுத்துகிறானோ அந்த புலன் சீக்கிரம் பழுதடைந்து துன்பத்துக்குள்ளாக நேரிடும்.

    எனவே, அளவு மீறியும் முறை மாறியும் புலன் இன்பம் துய்க்கும் மனிதனை புலன் மயக்கத்தில் இருக்கிறான் என்கின்றனர் அறிவை அறிந்த அறிஞர்கள். விளக்கம் கிடைத்தாலும் பழையப் பழக்கத்திலிருந்து விடுபட கடுமையான தளரா விடாமுயற்சி செய்ய வேண்டியிருக்கும். அதில் எல்லோராலும் வெற்றி பெற முடிவதில்லை. இதனாலேயே ஆரம்பத்தில் ஆா்வமாக ஆன்மீகப் பயிற்சியினைத் தொடங்கியவர்கள் வெற்றி பெறும் வரை பயிற்சியினை தொடரமுடியமால், ஒழுக்க நெறிக்கு வரமுடியாமல் ஆன்மீகப் பயிற்சியினை விட்டு விடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
    இந்த நிலையைத் தெளிவு படுத்தி,

    o இனிமேலாவது, புதிதாக தீய பழக்கங்களை பழகிக் கொள்ளாதிருக்க எச்சரிக்கவும்,
    o ஏற்கனவே ஏற்படுத்திக் கொண்ட தீய பழக்கங்களில் இருந்து விடுபட முயற்சிப்பதில் தொய்வு ஏற்படாமல் இருக்கவும்,

    “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சீவன் மனிதன்” என்கின்ற எதார்த்த நிலையைக் கூறுகிறார், இன்ப – துன்ப அறிவியலைக் (Science of Enjoyment and Suffering) கண்டுபிடித்த வேதாத்திரி மகரிஷி அவர்கள். பழகிய பழக்கத்திலிருந்து வெளிவருவது ஆரம்ப நிலையில் கடினமாக உள்ளது என்கிற எதார்த்த நிலையை எடுத்துக் கூறப்படுவது, தேவையற்ற பழக்கங்களிலிருந்து விடுபடும் முயற்சியினை பாதியிலே விட்டுவதற்காக அல்ல. பழகிய பழக்கத்திலிருந்து விடுபட முயற்சிக்கும் போது, ஆரம்பத்தில் வெற்றி பெறமுடியாமையால், மனம் தளர்ந்து விடாமல் இருந்து ஒருவர் தொடர்ந்து முயற்சி செய்து பழகிய பழக்கத்திலிருந்து விடுபட்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சீவன் மனிதன்” என்று சொல்லப்படுகிறது.

    அதே நேரத்தில், வேண்டாத தீயப்பழக்கத்தை இனிமேலாவது ஏற்படுத்திக் கொள்ளாமல் இருக்கவும் எச்சரிக்கப் படுத்தப்படுகின்றது.

    அதே நேரத்தில்

    this_birth_is_enough_for_liberation
    என்று இக்கவியின் வழியாக நம்பிக்கையை அளிக்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
    வேதங்கள் “இன்பம் புறப்பொருளில் இல்லை” என்று கூறுகின்றது. ஆனால் எவ்வாறு இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்பதனைக் கூறவில்லை. ஆனால் இளமையிலேயே மகரிஷி அவர்களுக்குள் எழுந்த நான்கு மகோன்னத கேள்விகளில் “இன்பம் துன்பம் என்பதென்ன?” என்கின்ற ஒரு கேள்வி எழுந்து விட்டதால் அதற்கான அறிவியல் பூர்வமான விடையைக் கண்டுபிடித்துவிட்டார்.
    உண்மையிலேயே இன்பம் துய்ப்பது என்பது, மனிதனின் சொந்த ஆற்றலான சீவகாந்த ஆற்றல் செலவழிவதை அறிவு இன்பமாக உணர்வதே. எனவே அந்த சீவகாந்த ஆற்றல் அதிகமாக செலவாகும் போது அந்தப் புலன்களின் செல்கள் தாங்கும் அளவைவிட மீறும் போது அதுவே பொருந்தா உணர்வாகி, அறிவு அதனை துன்பமாக உணர்கின்றது. தான் சேமித்து வைத்த சீவகாந்தமும் செலவாகிவிடுகின்றது. துன்பமும் ஏற்படுகின்றது. புலன்கள் வழியாக அறிவு இன்பம் அனுபவிக்கின்றது என்றால் அப்போது தன் சொந்த சீவகாந்த ஆற்றலைச் செலவழிக்கின்றது என்று பொருள்.

    ‘ஒரு மயக்கம்’ என்பது எப்போதாவது ஒருவருக்கு வாழ்க்கையில் நிகழ்வது. ஆனால் எல்லோருக்கும் வாழ்க்கையே மயக்கத்தில் தான் நடக்கின்றது. அந்த மயக்கம் தான் ‘ஐவகை மயக்கம்’ என்பது. இந்த ஐவகை மயக்கத்தைதான் திருவள்ளுவரிலிருந்து, அறிவை அறிந்த எல்லா அறிஞர்களும் புலன்மயக்கம் என்கின்றனர்;. புலன்கள் ஐந்து என்பதால் ஐந்து புலன்களின் வாயிலாக அறிவு மயக்கமடைந்துள்ளதால் அது ‘ஐவகை மயக்கம்’ எனப்படுகின்றது. திருவள்ளுவர் புலன்மயக்கம் பற்றி என்ன எச்சரிக்கிறார் என்பதனைப் பார்ப்போம். திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் ஆறாவது குறளாக,

    “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்” …….. குறள் எண் 6 என்று கூறுகிறார்.

    dheaivappulavar

    இந்த குறளில் திருவள்ளுவர் கூறியுள்ள உண்மையையும், அதனை ஏன் கடவுள் வாழ்த்தில் கூறியிருக்கிறார் என்பதனையும் கவனிக்க வேண்டும். இக்குறளில் உள்ள,

    1) பொறி, அவித்தான்,
    2) ஒழுக்க நெறி மற்றும்
    3) நீடுவாழ்வார் ஆகிய சொற்களுக்கு பொருள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    வெவ்வேறு ஆசிரியர்கள், இக்குறளுக்குக் கூறிய பொருளை ஆய்வு செய்வோம்.

    “ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்து, இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்”. என்பது ஒருபொருள்.

    மற்றொரு பொருள்

    “மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பொறிகளின் வழியாக வரும் ஐந்து ஆசைகளை அறுத்து மெய்யான ஒழுக்க நெறியில் வாழ்பவர் பிறப்பு இன்றி வாழ்வர்.

    மூன்றாவது பொருளாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ள பொருளைப் பார்ப்போம்.

    இயற்கையின் ஆரம்ப(ஆதி) நிலையிலிருந்து மலர்ச்சி பெற்று, பேரியக்க மண்டலத்தில் அழுத்தமாய், ஒலியாய், ஒளியாய், சுவையாய், மணமாய், அறிவாய் அவ் இயற்கை ஆற்றலே விளைவுகளாகி இயங்குகின்ற உண்மையினை மனிதன் உணர்ந்து செயலாற்றி வாழ்ந்தால், அவன் செயலும் விளைவும் “அருள்நெறி”சார்ந்ததாக இருக்கும் என்கிறார் மகரிஷி அவா்கள்.

    ஆகவே செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு என்கின்ற இயற்கை நீதியை மதித்து நடக்கப் புலன்களை தன்வசப்படுத்த வேண்டும் அறிவு. இல்லை எனில் ஒருவனுடைய புலன்களே அவனை வசப்படுத்தும் பொறிகளாகி(traps) விடும் என்கிறார். பொறிகள் என்றால் கருவி(tool or instrument) என்றும், அகப்படுத்துவதற்கும் உதவும் சாதனம்(trap) என்றும் பொருள். உதாரணத்திற்கு எலிப்பொறி்.

    அவித்தான் என்கின்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார் திருவள்ளுவர். அவித்த தானியம் முளைக்காது. அது போல் புலன்வழி தீய பழக்கங்களில் மீண்டும் செல்லாத அளவிற்கு அறிவு முடிவு செய்து அத்தீயப் பழக்கத்தை அவித்து விடவேண்டும் என்கிறார் திருவள்ளுவர். புலன்களை, அறிவு தன் கட்டுப்பாட்டிற்குள் (control over senses)கொண்டு வரவில்லை என்றால் ஒழுக்க நெறி மீறப்படும் என்கிறார். ஒழுக்க நெறி மீறினால் செயல்கள் பாவச்செயல்களாகி விளைவுகள் துன்பங்களையேத் தரும்.

    “நீடுவாழ்வார்” என்பது ஒரு மனிதரின் வாழ்நாளைக் குறிப்பதில்லை. உடல்தான் அழிந்து விடப் போகின்றதே. புலன் ஒழுக்கத்தினால் ஒரு மனிதா் செய்யும் செய்த நற்செயல்களின் நல்விளைவுகள் மனித சமுதாயத்தில் இவ்வுலகம் உள்ளளவும் நீண்டு பயன் அளித்துக் கொண்டே இருக்கும் என்கிறார்.

    புலன்களை பயன்படுத்துவதில் ஒழுக்கம் கடைபிடிப்பது புலன் ஒழுக்கம். புலன்களில் எவ்வாறு ஒழுக்கம் கடைபிடிப்பது?

    ஒழுக்கம் என்பது தீங்கு தராத நல்ல செயல்களாகும். ஆகவே புலன்களைப் பயன்படுத்தும்போது தீங்கு தராத செயல்களைச் செய்வது ஒழுக்கமாகும்.

    புலன்களைப் பயன்படுத்தும் போது எப்போது தீங்கு வரும்? புலன்களில் இன்பம் துயக்கும்போது, அளவு மீறினாலும், முறையை மாற்றினாலும் இன்பமே துன்பமாக மாறிவிடுகின்றது என்பதனை அறிவோம். ஆகவே புலனொழுக்கம் என்பது இன்பம் துய்த்தலில் அளவும், முறையும் காப்பது ஆகும்.

    ஒவ்வொரு இயக்கத்திலும் ஒழுங்கு இருக்க வேண்டும். அந்த ஒழுங்கே(order of function) அதற்கு ஒழுக்கமாகும்.

    மற்றும் நீத்தார் பெருமையில்,

    “ ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்
    இந்திரனே சாலும் கரி.” குறள் எண் 25                                                  என்கிறார் திருவள்ளுவர்.

    புலன் மயக்கம் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை அவருடைய கவியின் வாயிலாக அறிவோம்.

           நல்வினை தீவினை (அக்டோபர் 1982)

    “புலன்கவர்ச்சி மயக்கத்தால் உணர்ச்சி மீறி,

    புறத்தாற்றும் செயல்களெல்லாம் வீழ்ச்சி காட்டும்;

    புலன்கள்தமை அறிவாலே ஆளக் கற்கும்

    பொறுப்புடைய வாழ்க்கைநெறி ஆக்கம் நல்கும்,

    புலன்மயக்கம் தன்முனைப்புப் பழிச்செயல்கள்,

    புகழ்போக்கும் பொருட்கள் உயிர்ப் பற்றுயர்த்தும்,

    புலன்அடக்கம் இம்மூன்றும் களங்கம் போக்கி,

    புவிவாழ்வின் நிறைவுதரும், பிறப்பறுக்கும்.”

                             …..  வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பாடல் வரிகளே அவற்றிற்கான விளக்கத்தை தெளிவாகத் தருவதால் தனியாக விளக்கம் அவசியமில்லை. தனியாக விளக்கம் அவசியமில்லை. புலன்மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்கின்ற அவசியத்தை இப்பாடலில் இருந்து உணரமுடிகின்றது. ஆன்மீகத்திற்கு மிகப் பெரிய தடைக்கல் பற்று. பற்று என்பது புலன்மயக்கத்திலிருந்து உருவாகின்றது. புலன் மயக்கத்தினால் களங்கங்கள் உருவாகின்றன. ஏனெனில் புலன்கவர்ச்சி மயக்கத்தினால் உணர்ச்சி மீறுகின்றது. உணர்ச்சி மீறும்போது பாவப்பதிவுகள் உருவாகும்.   அப்படி பிறவிதோறும் உருவாக்கிய பாவப்பதிவுகளினால்தான் இந்த பிறவி உண்டானது.

    எனவே மனம் போனபோக்கெல்லாம் போகாமல், புலன்களை அறிவாலே ஆட்சி செய்து புவிவாழ்வில் நிறைவைப் பெற்று பிறப்பை முடித்துக் கொள்ளச் சொல்கிறார் மகரிஷி அவர்கள், வைணவப் பெரியார் ஒருவரின் பாடலோடு சிந்தனையை முடித்துக் கொள்வோம்.

    நன்றாய் ஞானம் கடந்து போய்,

    நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து,

    ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும் பாழ்

    உவப்பு இல் – அதனைத் உணர்ந்து உணர்ந்து,

    சென்று ஆங்கு, இன்ப துன்பங்கள்

    செற்றுக் களைந்து, பசை அற்றால்,

    அன்றே அப்போதே வீடு,

    அதுவே வீடு – வீடாமே. 

                            ….. வைணவப் பெரியார்.

    உலகியல் வாழ்க்யைில் துன்பமில்லாமல் வாழவும்,  ஆன்மீகத்தில் முன்னேறவும் புலன்மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்கின்ற அவசியத்தை இப்பாடலில் இருந்து உணரமுடிகின்றது. புதிய சிந்தனை தொடரும்.

    வாழ்க திருவேதாத்திரியம்!                  வளர்க திருவேதாத்திரியம்!!


  • வயிற்றுப்பசியும் அறிவுப்பசியும் -அறிவிற்கு விருந்து – FFC-296

    வாழ்க மனித அறிவு!                         வளர்க மனித அறிவு!!

    அறிவிற்கு விருந்து – FFC-296

    12.07.2020- ஞாயிறு

     

    அன்பர்களே!

    வாழ்க வளமுடன்!

            தலைப்பு ‘வயிற்றுப்பசியும் அறிவுப் பசியும்’ என்றிருக்கின்றது.  பசி என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான்.  புதிதானது அல்ல.  எல்லோரும் அனுபவித்திருக்கின்ற ஒன்றுதான். ஆனால் தலைப்பு, வயிற்றுப்பசியுடன் அறிவுப்பசி என்று சேர்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது.   ஆகையால், பசியில் இரண்டு வகைகள் உள்ளன, அந்த இரண்டைப்பற்றியும்  சிந்திக்கப் பணிக்கப்பட்டுள்ளது இயற்கையால்/இறையால் இன்று. மகிழ்ச்சியுடன் சிந்திப்போம்.  இத்தலைப்பை ஏற்றுக்கொண்டு சிந்திப்பதன் வாயிலாக, இயற்கைக்கு/இறைக்கு உள்ளப்பூர்வமான  நன்றியினை அகத்திலிருந்து செலுத்துகின்றோம். 

    முதலில் பசியின் இரண்டு வகைகள் என்னென்ன என்று பார்ப்போம். 

                                  ஒன்று வயிற்றுப்பசி.  

                                  மற்றொன்று அறிவுப்பசி.

          வயிற்றுப் பசி எல்லா சீவன்களுக்கும் பொதுவானது.  ஆனால் அறிவுப்பசி என்பது ஐந்தறிவிலிருந்து ஆறாம் அறிவாக மலர்ந்த மனிதனுக்கு மட்டுமே பிரதானமாக இருக்கக் கூடியது.  ஆன்மா ஐந்து கோசங்கள் (போர்வைகள்) கொண்டிருந்தாலும் ஐந்தறிவு சீவன்களின் வாழ்க்கை முதல் இரண்டு கோசங்களான அன்னமய கோசம் மற்றும் மனோமய கோசத்திலேயே புலன்வழி இச்சையோடு முடிந்து விடுகின்றது.  அவ்வளவுதான் அவற்றின் வாழ்க்கை. இந்த புலன்வழி இச்சைக்கான வாழ்க்கை வாழ்வதற்காகவா பேரறிவு நாமாக(மனிதனாக) தன்மாற்றம் அடைந்துள்ளது?! சிந்திக்கலாமே!  சிந்தித்தாலே பிறவியின் நோக்கம் அறியும் முயற்சியிலோ, இறைத்தேடலிலோ விரைவில் வெற்றி பெற்றிடலாம்!

    ‘இச்சையின்றேல் ஏது இப்பிரபஞ்சம்?’

          இச்சையைப்பற்றி 80 வரிகள் கொண்ட கவியில் இருபத்தைந்தாவது  வரி ‘இச்சையின்றேல் ஏது இப்பிரபஞ்சம்?’ என்பது. அக்கவியின் எல்லா வரிகளுமே உலகியல் வாழ்க்கையை மட்டும் பிரதானமாக நடத்தும் மனிதர்களுக்கும் உலகியல் வாழ்க்கையையும் இறையுணர்வு ஆன்மீகத்தையும் இணைத்து நடத்திக் கொண்டிருக்கும் ஆன்ம சாதகர்களுக்கும் பொதுவானதுதான். இருந்தாலும், மேலும் அக்கவியின் மற்றொரு வரியினையும் இத்தருணத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது உசிதமானது.  அதாவது 63-வது வரியில் “இச்சையின்றேல் உயர் ஞானந்தான் ஏது?” என வினவுகிறார் இன்ப-துன்ப அறிவியளாலரான ஜகமே போற்றுவதற்கு உரியவரான இருபதாம் நூற்றாண்டின் ஜகத்குருவாக அவதரித்த நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள். சிந்தித்தால், மனிதனின் வாழ்க்கை மிக மிகச் சிறப்புடையது என்பதனை நன்கு உணரலாம்; அறியலாம் அனுபவப்பூர்வமாக.  மனிதனின் சிறப்பு பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள்  ‘மனிதனின் சிறப்பு’ (1955) என்கின்ற தலைப்பில் 100 வரிகளில் கவி ஒன்றை அருளியுள்ளார். வாசித்து இன்புறலாம்.

     

    மனிதனின் சிறப்பை  அறிந்து   ஐந்தறிவிலிருந்து ஆறாம் அறிவாக மலர்ந்துள்ள மனிதனால் மற்ற மூன்று கோசங்களிலும்  வாழ்க்கையை நடத்தாமல் வாழ்க்கை வாழ்வது சரியா என்பதனை அறிந்துகொள்ள முடியும்.   நடைமுறையில் ஐந்து கோசங்களிலும் ஆன்மா செயல்படுவதில்லையே!  ஏன்?

    கடினமானதா?

        மற்ற மூன்று கோசங்களில் வாழ்க்கையை நடத்துவது கடினமானதா? மற்ற மூன்று கோசங்கள் என்னென்ன?  அவற்றில் பெரும்பாலோர் கடைசி மூன்று கோசங்களில் வாழ்வதில்லை; வாழ முடிவதில்லை?   ‘வாழ்வதில்லை’ என்றால்  அது தனிமனிதனின் பொறுப்பின்மையையாகின்றது.   ‘வாழ முடிவதில்லை’ என்றால் அதற்குக் காரணம் சமுதாயம்.  பாரதியார் மொழிந்துள்ளதுபோல் ‘வாழவேண்டிய நன்முறையை’ சமுதாயமோ, விஞ்ஞானமோ  மனிதர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.  அந்த நன்முறையினை  சமுதாயத்தின்  சார்பாகவும் விஞ்ஞானத்தின் சார்பாகவும்  திருவேதாத்திரியம் செய்துகொண்டிருக்கின்றது  என்பது மிகையே அன்று. 

    கடைசி மூன்று கோசங்கள் என்னென்ன?

       அவையாவன:

                    3) பிராணமய கோசம்

                    4) விஞ்ஞானமய கோசம்

                    5) ஆனந்தமய கோசம் (முழுமை பெற்று நிறைவாக நிற்கின்றது மனம்)

         முதல் இரண்டு கோசங்களையும் சேர்த்துத்தான் ஐந்து கோசங்களிலும் ஆன்மா செயல்படவேண்டியுள்ளது. ஆனால் முதல் இரண்டு கோசங்களிலேயே வாழ்வது என்பது

         அறியாமையின் காரணமாகவோ

                  அல்லது

        அறிந்தும் அலட்சியப்படுத்தி வாழ்வதன் காரணமாகவோ

                 அல்லது

        தக்க வழிகாட்டுதல் கிடைக்காமலோ மனிதர்கள் அல்லலுறுவதைக் கண்கூடாகப் பார்க்கும்போது  சகமனிதர்களாகிய மனவளக்கலைஞர்களுக்கெல்லாம் கவலை ஏற்படுகின்றது.  கவலை ஏற்பட்டாலும், அந்நிலையினை மாற்றி அமைக்க  மகரிஷி அவர்களின் வழியில், தொண்டுகளிலே சிறந்ததான அறிவுத் தொண்டாற்றி இன்பம் கண்டு வருகிறோம்.   இன்றைய  ‘அறிவிற்கு விருந்து’ (FFC: Feast For Consciousness) – க்கான முன்னுரையை (like starter served in Dinner to create appetite) இத்துடன் முடித்துக்  கொண்டு நேரிடையாக தலைப்பிற்குள் செல்வோமாக.

    பசி என்பது என்ன?

          ‘பசி’ என்பதனை எல்லோரும் அறிவர்.  பசி என்பது அறிவிற்கு ஏற்படும் ஒரு துன்ப உணர்வு. அது தோன்றுமிடம் வயிறு. நான் பசியுடன் இருக்கிறேன். I am hungry என்போம். அல்லது வயிறு பசிக்கின்றது என்போம். உடல் இயக்கத்திற்கு சக்தி தீர்ந்ததும், சக்தி தேவை என்கின்ற நிலையை அறிவிப்பது பசி என்கின்ற துன்ப உணர்வு.  அந்தப் பசிக்கு  ‘வயிற்றுப் பசி’ எனப் பெயர் வைத்துள்ளோம்.

        வயிற்றுப் பசியைப் போக்க உணவு உட்கொள்வோம். அந்த உணவு வயிற்றுக்குள் சென்று சீரணிக்கப்பட்டு உடலுக்கு வேண்டிய ரசம், இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் என்ற ஏழு வித தாதுக்களாகி பிறகு எது எது, எந்தெந்த உடல் உறுப்புகளுக்குப் போய்ச் சேர வேண்டுமோ அங்கு போய்ச் சேரும்.   இதனை செய்வது யார்?  நாமா?  இல்லையே! இயற்கைதான்/இறைதான் செய்கின்றது.     வாயிலிருக்கும் உணவை நாக்கால் உணவுக் குழாய்க்குள் தள்ளும் வரை நமது வேலை முடிந்துவிடுகின்றது.  உண்ணும் உணவை சீரணம் செய்து ஏழு வித தாதுக்களாகப் பிரித்து அந்தந்த உடலுறுப்புகளுக்கு அனுப்புவது  யார் அல்லது எது அனுப்புகின்றது? இது இயற்கையாக நடக்கின்றது என்போம். ஆனால் இயற்கை செய்கின்றது என்று சொல்ல மாட்டோம்.   

    காரணம் என்ன?

           காரணம் 1911 வரை அவ்வாறெல்லாம்  சிந்தித்ததில்லை மனிதஅறிவு. சிந்தித்துப் பழக்கமில்லை. ஆனால் 1911 ற்குப்  பிறகு மனிதஇனத் தன்மாற்றத்தில்  அல்லது  ஆன்மீகத்தில்  ஒரு புதிய திருப்பத்தை சடுதிமாற்றமாக எட்டியிருக்கின்றது இயற்கை/இறை. எனவே இப்போது  சீரணம் செய்யவைத்து ஏழுவித தாதுக்களாகப் பிரித்து அந்தந்த உடலுறுப்புகளுக்கு அனுப்புவதை  இயற்கை என்கின்றது 1911 ல் ஏற்பட்டுள்ள  சடுதிமாற்றத்திற்குள் வந்த மனிதஅறிவு.   இதில் யாருக்கும் கருத்து வித்தியாசம் இருக்க முடியாது. இது கருத்து என்றுகூட சொல்ல முடியாது. இதுவே உண்மை. எனவே உண்மையை ஏற்றுக் கொள்வதில் கருத்து வித்தியாசத்திற்கே இடமில்லை.  

    விந்தையை நினைத்து மகிழலாமன்றோ!

           மனிதன் உண்ட உணவு சீரணிக்கப்பட்டு ஏழு வித தாதுக்களாகப் பிரித்து அந்தந்த உடலுறுப்புகளுக்கு அனுப்பப்படும் விந்தையை நினைத்து மகிழலாமன்றோ?  இயற்கையை/இறையை* நினைவில் கொண்டோ அல்லது  முன் வைத்து ஒருமை இயலில் (in advaidic sense or in  Oneness Science)  பேசப் பழகிக் கொள்ள வேண்டும்.  இல்லையெனில் நான், தான், தனது என்கின்ற தன்முனைப்பில்(Ego = Edging God Out= E + G+ O = EGO) மூழ்கிவிடும் அறிவு.  தன்முனைப்பு வந்துவிட்டால் அறிவு தடுமாற்றம் அடைந்து தடமாற்றத்தில் சென்றுவிடும்.  விழிப்புணர்வு அயர்ந்துவிடும்.  அயராவிழிப்புணர்வேதான் இயற்கையின் ஆதிநிலையான பேரறிவு.  பேரறிவேதான் இப்போது ஆறாமறிவாக தன்மாற்றம் அடைந்துவிட்டாலும், மனிதஅறிவு விழிப்புநிலையில் அயர்ந்துவிட்டதால் அது மயக்கத்தில்- மாயையில்(புலன்மயக்கத்தில்) சிக்கித் தவித்துக்கொண்டு வாழ்கின்றது.  காரணம் பேரறிவு நேரிடையாக மனிதனாக தன்மாற்றம் அடையவில்லை என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும். இதுவும்கூட ஒருவகை விழிப்புணர்வைச்சார்ந்ததே!  பேரறிவு நேரிடையாக மனிதஅறிவாக மாறுவதற்கு வாய்ப்பில்லை.  ஓரறிவிலிருந்து ஐந்தறிவாகி மனிதனாகி வந்துள்ளதால் பேரறிவின் பின்னமான மனிதஅறிவு விழிப்புணர்வில் ஏற்பட்டுள்ள அயர்ச்சியைப் போக்கி அயராநிலைக்கு வந்து அயராவிழிப்புணர்வாகிய பேரறிவோடு கரைந்து ஆனந்தமயகோசத்தில் இன்புறவேண்டும்.  இதுவேதான் மனிதப்பிறவியின் நோக்கங்களிலே பெரும் நோக்கமானதாகவும் உன்னதமானதாகவும் உள்ளது. இந்த அறிவு பற்றிய அறிவியல் உண்மையை மனவளக்கலையின் வழியாக மலரச்செய்து கொண்டிருக்கின்றது  திருவேதாத்திரியம். 

    (*திருவள்ளுவர் மொழிந்துள்ளது போல் ஐயப்படாது அகத்தினை உணர்ந்தவர்கள்  இயற்கையை இறை என்றனர். ‘இயற்கையை’ இயற்கை என்று சொல்லாமல் ஏன் இறை என்கின்றனர்?  காரணப் பெயராக இயற்கையை இறை என்கின்றனர்.  இயற்கை எனும் பேராற்றல் எங்கும் இருப்பதால், அதாவது இறைந்து கிடப்பதால் அதனை இறை  என்று கூறுகின்றனர்.)

    அளவும் முறையும் அவசியம்

          உணவில் சாதாரண உணவும் உண்டு.  விருந்தும் உண்டு. சாதாரண உணவும் பசியினைப் போக்கும். விருந்தும் பசியினைப் போக்கும். விருந்தில் பல வகையான உணவுகள் பரிமாறப்படும். விருந்தில், உணவு செயற்கையாக ருசியைக்கூட்டித் தயாரிக்கப்படும். உணவு கிடைக்கின்ற பெரும்பாலோருக்கும் சாதாரண உணவுதான் கிடைக்கின்றது.  இந்த சாதாரண உணவு கூடக் கிடைக்காத வறுமை நிலையும் உள்ளது இந்த சமுதாயத்தில் என்பது மிக மிக வருத்தத்திற்குரியது.  வறுமை என்பது சமுதாயத்தின் ஒரு பெரிய கொடும் துன்பம். கருணையாலும்,  சமுதாயத்தின்  மீது கொண்ட அக்கறையின் காரணமாக  “தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினையே அழித்திடுவோம்” என்று கூறுகிறார் மகாகவி – பன்முகமாக  சிந்தித்த மாமனிதர்  (multifaceted Personality). அதாவது உலகில் வாழும் ஒருமனிதனுக்குக்கூட உணவு இல்லை என்கின்ற நிலை இருக்கக்கூடாது  எனக்கருதியே அவ்வாறு கூறி அதற்காக “இனியொரு விதி செய்வோம். அதனை எந்தநாளும் காப்போம்” என்கிறார் மகா கவி பாரதியார்.  

        விருந்து ஒரு சிலருக்குத்தான் எப்போதாவது கிடைக்கின்றது. சாதாரண உணவே போதுமானது. ருசி இருந்தால் தான் நாக்கு, உணவை உணவுக்குழாய்க்குள் தள்ளும் என்பது உண்மைதான். இருந்தாலும் பசிக்காகத்தான் உணவு. ருசிக்காக உணவு இல்லை என்பதனையும் மறந்து விடக்கூடாது, ருசியை செயற்கையாக அதிகமாக்கினால் சில நேரங்களில் தீமையையும் விளைவிக்கும்.

       எனவே வயிற்றுப் பசிக்கு சாதாரண உணவே போதுமானது. விருந்து கிடைப்பதாக வைத்துக்கொண்டாலும் தினந்தோறும் விருந்தை உண்ண முடியாது. சலிப்பு ஏற்படும். விருந்து என்பது தேவைக்கு அதிகமான உணவுதானே?  தினந்தோறும் விருந்து உண்பது வயிற்றுக்குத் தீங்கையும் விளைவிக்கும். உணவு உண்பதில்   “அளவும்” (limit) முறையும் (method) அவசியம்.  அளவு என்பது அதிகமாகவோ, குறைவாகவோ, அனுபவிக்கக் கூடாது.  முறை என்பது இயற்கைக்கு முரண்படாமல் ஒத்த முறையில் அனுபவிப்பதாகும்.  இன்பம் துய்த்தலில் அளவும் மீறி, முறையும் மாறினால் இன்பமே துன்பமாக மாறும் என்கின்ற இயற்கை நியதியைக் கவனிக்க வேண்டும்.

           வயிற்றுப் பசியைப் பற்றி அறிந்து கொண்டோம்.    மூன்று முக்கியமான உண்மைகளைத் தெரிந்து கொண்டோம்.

    1. உணவு சீரணமாகி உடலுக்கு வேண்டிய சக்தியாக மாற்றுவது இயற்கை அல்லது மறுபெயரைக்கொண்ட இறை என்றும்,
    2. உணவு உட்கொள்வதில் அளவும் முறையும் கடைபிடிக்க வேண்டும் என்றும்,
    3. இல்லையெனில் இயற்கையின் நீதி மீறப்பட்டு இன்பமே துன்பமாக மாறிவிடும் என்பதனை அறிந்து கொண்டோம்.

    அறிவுப் பசி என்பது என்ன?

           இப்போது அறிவுப்பசி பற்றி அறிந்து கொள்வோம். வயிற்றுப் பசி என்பது சரி.  அறிவுப் பசி என்பது வார்த்தை ஜாலமா? உண்மையில் அறிவிற்குப் பசி இருக்குமா என ஐயம் எழலாம். அறிவோ அரூபம். அதாவது உருவமில்லாதது. உருவமில்லா அறிவிற்குப் பசி எவ்வாறு ஏற்பட முடியும் என ஐயம் எழலாம்? அறியவேண்டியதை அறியவேண்டும் என்கின்ற அவா எழுந்தால் அதுவே அறிவிற்கானப் பசி ஆகும்.  அந்த அறிவுப்பசியினைப் போக்குவதுதான்  மனவளக்கலை எனும் விருந்து.  மனவளக்கலை அறிவை அறியும் பயிற்சியாயிற்றே!  அது அறிவிற்கு ஆனந்தத்தைத்தான் தரும்.  அதுதான் அறிவு முழுமை பெற்று நிறைவாக இருக்கின்ற நிலை.     வயிற்றுப் பசியின் போது வயிற்றில் ஏற்படும் பசியாகிய துன்ப உணர்வை அறிவது அறிவு.  அதேபோல் மற்ற உடல் உறுப்புகளில் ஏற்படும் துன்ப உணர்வுகளையும் அறிந்து கொள்கின்றது அறிவு. அப்படி இருக்கும்போது தனக்கேகூட(அறிவிற்கேகூட) துன்ப உணர்வு ஏற்படுமா? பசி என்பது துன்ப உணர்வு என்பதால் அறிவுப்பசி என்பது அறிவிற்கு ஏற்படும் துன்பம் என்றுதானே பொருள்?

        அப்படியானால் அறிவுப்பசி என்பது என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும். வயிற்றுப் பசியில் பசி என்கின்ற துன்ப உணர்வை, உணவை உட்கொண்டு சரி செய்து கொள்கிறோம். வயிறு ஓர் உறுப்பு. உருவமுள்ளது. வயிற்றில் இரைப்பை உள்ளது.  நாம் அருந்தும் உணவு இரைப்பையில் நிறைகின்றது. வயிறும் பருப்பொருள். உணவும் பருப்பொருள்(கெட்டிப் பொருளாகவோ அல்லது நீர்ப்பொருளாகவோ இருக்கும்) வகையைச் சார்ந்தது. ஆனால் அறிவோ அரூபம். அதாவது உருவமில்லாதது. அப்படி இருக்கும்போது உருவமில்லா அறிவிற்கு ஏற்படும் பசியை எவ்வகையான உணவுப் பொருளைக் கொண்டு அறிவு தனது பசியைப் போக்கிக் கொள்ள முடியும்?

    எத்தகைய உணவு அறிவிற்கு விருந்து?

         உருவத்தைக் கொண்ட வயிறு பருப்பொருள்(உருவமுள்ள) உணவைக் உட்கொண்டு பசியைப் போக்கிக் கொள்வதுபோல் அறிவு தன் பசியை போக்கிக் கொள்வதற்கு பருப்பொருள் உணவு ஏதும் கிடையாது. உருவமில்லா உணவைக் கொண்டுதான் அறிவு தன் பசியைப் போக்கிக் கொள்ள வேண்டும்.   அதுதான் சிந்தனை. எனவேதான் சிந்தனையை சிந்தனை விருந்து என்றும் அறிவிற்கு விருந்து என்றும் சொல்கிறோம். அறிவு ஐம்புலன்கள் வாயிலாக புற நிகழ்ச்சிகளை உணர்கின்றது.  இன்பதுன்பங்களை உணர்கின்றது.  இதுமட்டுமேவா அறிவின் வேலை?  இது மட்டுமே அறிவிற்கு இன்பம் தரமுடியுமா?

    அறிவு அறிய வேண்டியது எது?

        அப்படியானால் அறிவுப்பசி என்பது என்ன? அறிவது அறிவு.  அறிய வேண்டிய இறுதியானதை(அதாவது தன்னையே) அறியவேண்டும் அறிவு. உடலுக்கு ஏற்படுகின்ற இன்பதுன்ப உணர்வுகளை அறிந்து கொள்வது எதுவோ அது அறிவு. புறத்தே நடக்கின்ற நிகழ்ச்சிகளை எல்லாம் அறிகின்றது. இவற்றை எல்லாம் அறிந்து கொண்டு, இவற்றிற்கெல்லாம் மேலாக, அறிய வேண்டி இறுதியானதை அறியக் கூடியது அறிவு(Capable).  அப்படியானால் அறிவு அறிய வேண்டியது எது?  அறிவு  ‘தான் யார்’ என்றும்,  ‘தன் இருப்பிடம்’ எது என்றும் அறிய வேண்டும். உயிரினங்களிலேயே இந்தச் சிறப்பை உடையது மனிதஇனம். தன்னை உணரும்போதுதான்  அறிவு முழுமை பெறும்.  மகாகவி கூறும் தெளிந்த நல்லறிவாகும் அறிவு

    அறிவுப்பசிக்கான விருந்துதான் திருவேதாத்திரியம்

        அறிவு தனது பூர்வீகத்தை அறிய வேண்டும். இது வரை அறிவைப்பற்றிய விஞ்ஞான பூர்வமான தகவல் ஏதும் இல்லாதபோது அறிவைப்பற்றிய(Consciousness) தகவல்களை எங்கிருந்து அறிவது என்கின்ற ஐயம் எழலாம். அறிவுப்பசியைப் போக்கிட இயற்கை/இறை தயாரித்துள்ள விருந்துதான் திருவேதாத்திரியம். இயற்கையின்/இறையின் தன்மாற்றப்படி பேரறிவிற்கு  எது பிரியமோ அதனை மனிதஅறிவு அறிய வேண்டும். அப்போதுதான் மனிதஅறிவிற்கு பேரின்பம். இந்த நிலை மனிதஅறிவிற்கு இல்லாதபோது மனிதஅறிவு அல்லலுறுகின்றது. அல்லலைப் போக்கிக்கொள்ள வேண்டும் என்கின்ற வேட்கை மனிதஅறிவிற்கு வந்துவிட்டால் அதுவே அறிவுப்பசியாகிவிடுகின்றது. தனக்குப்(அறிவிற்கு) பிரியமானதை அறியாமல்,  அறிந்தாலும் அதற்கான வழியும் தெரியாமல்  காலம் கடத்துவது அறிவிற்குத் துன்பம்தான். எந்த நோக்கத்திற்காக அறிவு(இந்த ஆன்மா உடல் எடுத்ததோ) இந்த உடலில் அறிவாக இயங்க வந்ததோ அதனை அடைவதற்கான ஏக்கம் தான் அறிவுப்பசி.

    அறிவிற்கு ஓய்வேது?

           அறிவிற்கு தன்னை அறிவதில் விருப்பம் வந்துவிட்டால் தன்னை அறிகின்ற வரை அதற்கு ஓய்வே கிடையாது என்பார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். எப்போது தன்னை உணா்கின்றதோ அன்றுதான் அறிவிற்கு ஓய்வு. அன்றுதான் அறிவின் பசி முழுவதுமாகத் தீரும். அன்றுதான் அறிவிற்கு முழு விருந்துமாகும்.  அதுவே அறிவின் முழுமைப்பேறு.  ஆகவே ஆறாம் அறிவுடைய மனிதன் சிந்திக்க வேண்டும். சிந்தித்தலின் வாயிலாக வாழ்வின் நோக்கத்தை தானே அறிந்து, அதுபோல் வாழ்க்கை வாழ்ந்து, மற்றவர்களுக்கும் வழிகாட்டும் புண்ணியக் கடமையை ஆற்றும் போதுதான் அறிவிற்குப் பசி தீரும். இப்பூமியில்  வந்து போனதற்கான சுவட்டினை விட்டுவிட்டுச் செல்லவேண்டும்.  வயிற்றுக்குப் பசி இருப்பதுபோன்று அறிவிற்கும் பசி உண்டு என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.  சிந்தனை விருந்துதான் அறிவின் பசியினைப் போக்க முடியும். அறிவு  அன்னமய கோசத்தைக் கடந்து விஞ்ஞானமய கோசத்திற்குள்ளும், ஆனந்தமய கோசத்திற்குள்ளும் பயணிக்க வேண்டும்.

           இதுவரை அறிந்து கொண்டது என்ன என்று சுருக்கமாகப் பார்ப்போம்.

    1. எந்த நோக்கத்திற்காக அறிவு(இந்த ஆன்மா உடல் எடுத்ததோ) இந்த உடலில் அறிவாக இயங்க வந்ததோ அதனை அடைவதற்கான ஏக்கம் தான் அறிவுப்பசி.
    2. சிந்தனைதான் அறிவுப் பசியைத் தீர்க்கும்.
    3. அறிய வேண்டிய இறுதியானதை அறியாத அறியாமையால் வருவது துன்பம்..
    4. அறிவுப் பசியைத் தீர்க்க இயற்கை தயாரித்துள்ள விருந்துதான் திருவேதாத்திரியம்.

    வாழ்க திருவேதாத்திரியம்!           வளர்க திருவேதாத்திரியம்!!

  • குருபூர்ணிமா-அறிவிற்கு விருந்து-FFC – C295

    வாழ்க வையகம்!                                        வாழ்க வளமுடன்!!

    அறிவிற்கு விருந்து
    FFC – C295

    05.07.2020 – ஞாயிறு

    குருபூர்ணிமா

    vysa_maharishi_and_vethathiri_maharishi

    வாழ்கவளமுடன்

    அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டியவர்கள் அனைவரையும் குருபூர்ணிமா கொண்டாடும் இந்த தினத்தில் நினைவு கூர்வோம்.

    வருடத்தில் ஒரு நாள் குருபூர்ணிமா விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழா வியாசமுனிவரை நினைவுகூர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட விழாவாகும். வியாச முனிவர் நான்கு வேதங்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். பதினெட்டு புராணங்களை வழங்கியுள்ளார். மகாபாரதம் மற்றும் ஸ்ரீமத்பாகவதம் அருளியுள்ளார். வியாசமுனிவரை நினைவு கூறும் இவ்வேளையில் ஆன்மீக சாதகர்கள் அவரவர்களுடைய நேரிடை குருவினையும் நினைவு கூர்தல் நலம் பயக்கும்.


    எனவே இத்தருணத்தில் நமது குருவாகிய அருட்தந்தை அவர்களை நினைவு கூர்வோம். அப்படியென்றால் மற்ற நாட்களில் நமது குருவை மறந்து விட்டிருக்கிறோம் என்று பொருளல்ல. என்றைக்கு அவருடைய உயிராற்றல் நம்முடன் கலப்புற்றதோ அன்றைய தினத்திலிருந்து அவருடன் நாம் இணைந்தேதான் உள்ளோம்.

    எப்படியெனில் அருட்தந்தை அவர்கள் நமக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுத்து, அதற்கான பொருளையும், நமக்கு அறிமுகப்படுத்தி விட்டார். மூச்சு விடுவதுபோல் சிந்திப்பதும் நமக்கு சகஜமாகிவிட்டதால் சிந்திக்கும் போதெல்லாம் நம்முடைய குருவின் அறிவாற்றலுடன் தொடர்பு கொள்வதோடு மட்டுமல்லாது, சிந்திப்பதற்கு அவர் அறிமுகப்படுத்திக் கொடுத்த பொருளுடனும்(மெய்ப்பொருளுடனும்) தொடர்பு கொண்டு இணைந்து கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால் மூச்சு விடுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பது போல், சகஜ நிஷ்டை போல் எப்போதுமே சிந்தனையோடு இருப்பதால் எப்போதுமே குருவின் நினைவோடும் அதே நேரத்தில் அவர் அறிமுகப்படுத்திக் கொடுத்த சிந்தனைக்குரிய பொருளுடனே(மெய்ப்பொருள்) இணைந்தேதான் வாழ்கிறோம்.

    குருவோடு தொடர்பு கொள்வதோடு மட்டுமல்லாது அவரையும்(எப்பொருளை), அவரது செயலையும்(எச்செயலை), அவரது குணத்தையும்(எக்குணத்தை) அவரது உயிரையும்(எவ்வுயிரை) எப்போதும் (அடிக்கடி) நினைந்து கொண்டேதான் இருக்கிறோம். விளைவு இயல்பூக்க நியதிப்படி நம்முடைய அறிவினிலும் உடலினும் மாற்றங்கள் ஏற்பட்டு நம்முடைய மனிதப் பண்பேற்றம் நடை பெற்றுக் கொண்டு வருவதை நாம் உணர்ந்து கொண்டு வருவதில் ஆனந்தம் அடைகிறோம்.பிறவிப்பயனாகிய லட்சியம் நிறை வேற அந்த லட்சிய நாளுக்கு ஏங்கிக் காத்துக் கொண்டிருக்கிறோம்.
    அவரது செயலாலும் குணத்தாலும் அடைந்த உயர் புகழையும் நாம் மேலும் மேலும் நினைக்கிறோம். அறிந்து மகிழ்கிறோம். அவருடைய சூக்கும உடலுக்கு உளம் கனிந்த நன்றியினையும் அவரது அறிவாற்றலை சிரம் தாழ்த்தி வணங்கி போற்றுகிறோம். பாராட்டுகிறோம்.

    அருட்தந்தை அவர்கள் அருளுவதாவது:

    வினைப்பயனைப் போக்காமல் வீட்டையடைய விரும்புவதோ பொருந்திடாது
    தட்டுங்கள் திறக்குமென்றார் தனக்குள்ளேயே பேராற்றல் புதையல் கண்டோர்
    தக்கவழி அருட்குருவின் தாள் பணிந்து தவம் பயின்று தனை உணர்தல்”

    என்றும்

    எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
    தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்
    தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்”

    என்றும் அருள்கூர்ந்து தெரிவிக்கிறார் நமக்கு.

    அருள் துறையில் நுழைவதற்கே ஆர்வமில்லாமலும் வாய்ப்பில்லாமலும் இருக்கும் இச்சமுதாயத்தில், நாம் விரும்பி வாய்ப்புக் கிடைத்து, அருட்தந்தையின் சீடர்களாக வந்துள்ள நமக்கு, பயிற்சியின் வெற்றி தள்ளிப்போகும் போது நம்பிக்கை இழந்து பயிற்சியில் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நம்பிக்கை ஊட்டும் வகையில் அருட்தந்தை அவர்கள் மேலும் அருளுவதாவது

    “பலஆயிரம் பிறவி எடுத்து ஏற்ற பழிச்சுமைப் பதிவுகளை ஒரு பிறவி காலத்திலே மாற்றலாம்”என்கிறார்.

    இந்த தெய்வீக வரிகள் வாயிலாக நமக்கு உற்சாகத்தையும் உறுதியையும் அளிக்கின்றார். அதற்கு வழி கருமையத்தூய்மையாகும் என்கிறார். அதற்கு தவமும் அறமும் தேவை என்கிறார். மேலும் இறையுணர் பாதையிலே என்றும் விழிப்புடனே வாழ்வதுதான் அவ்வழி என்கிறார்.

    மேலும் “உத்தம நண்பர்காள் உங்களுக்கும் உரியது”என்கின்ற அவரது கருணை மொழி ‘பயணம் முடியாமல் தள்ளிப்போய்க் கொண்டிருக்கின்றதே, எப்போது வரும் அந்தநாள்’ என்கின்ற தீரா ஆன்மீக தாகத்திற்கு தெய்வீக நீரை அளிப்பது போல் உள்ளது.மேலும் நமக்கு நம்பிக்கை அளிக்கின்றது.

    மேலும் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது. தரம் உயர்த்துவது என்பது:– விலங்கினத்திலிருந்து சடுதிமாற்றமாக வந்த ஆதிமனிதனின் கருத்தொடர்தான் இன்றுள்ள நாமும்.

          எனவே

        நம்மிடம் உள்ள விலங்கினப் பதிவுகளைச் செயலிழக்கச் செய்து,

      பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் ஆகிய நான்கிலும் புகுந்து அழுந்தி மனதை புண்ணாக்கிக் கொள்ளாமல்  .

     எப்போதும் அயராவிழிப்பிலே(Awareness is God) இருந்து கொண்டு,

     மனிதப் பண்பான  அன்பிற்கும், கருணைக்கும் பாத்திரமாக திகழ்ந்து அறிவுத் தொண்டினை  செய்து வருதலே, கோடான கோடி மக்கள் வாழ்கின்ற இச்சமுதாயத்தில் நமக்கு மட்டும் குரு-சீடர் உறவு கிடைத்திருப்பதை நாள்தே்ாறும் நினைவு கொண்டு சுயதிருத்தம் பெற்று வருவதே நாம் நம் குருவிற்கும், அவர் வழியாக இறைக்கும் செலுத்தும் நன்றியாகும்.

    “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை”என்று அருளிய தெய்வத்தாய் அவ்வையை மதித்து தந்தைகளுக்கெல்லாம் தந்தையாக விளங்கும் நம்முடைய அறிவுக் கண்களையெல்லாம், திறந்து அறிவொளி வீசச் செய்துள்ள அருட்தந்தை அவர்களின் சொற்களையெல்லாம் மந்திரங்களாகக் கொண்டு எப்போதும் நினைந்து மதித்து நடந்து இப்பிறவியிலேயே பிறவிப்பயனை எய்துவோம். நம்முடன் வாழும் சக மனிதர்களையும் உய்விக்க அறிவுத் தொண்டாற்றி மகிழ்ந்து குருவின் சூக்கும சரீரத்திற்கு நன்றியினை செலுத்திப் பூரிப்படைவோம். அவரது கனவான ஓர் உலக ஆட்சியும், உலக அமைதியும் விரைவில் நிஜமாக, உறுதியான  எண்ண அலைகளை அழுத்தமாக பரப்புவோம். இதுவல்லவோ பிறவிப்பயன். மனிதப்பிறவியின் பயனில் இரண்டு அங்கங்கள் உள்ளன.

         ஒன்று, மனிதப் பிறவி எடுத்த நோக்கத்தையும் நிறை வேற்றிக் கொள்ள வேண்டும்.

        மற்றொன்று மனிதப் பிறவியின் நோக்கம் நிறைவேறிய பிறகு,

      நோக்கம் நிறைவேறிய பிறவி சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் அறிவுத்தொண்டாற்றுவது.

    இங்குதான் பிறவியின் நோக்கமும் நிறைவேறுகின்றது.

    நோக்கம் அறிந்த பிறவியும் சமுதாயத்திற்கும் பயனாகின்றது.

    வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

    guru_paadham

    வாழ்க திருவேதாத்திரியம்!                              வளர்க திருவேதாத்திரியம்!!