admin

Author Archives

  • சிந்திக்க வினாக்கள்-332 (995th Posting)

    வாழ்க மனித அறிவு!                           வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்-332 (995th Posting)

    24-05-2022-செவ்வாய்

    மேலும் பல உண்மை விளங்க . . .

                              

    பிரதான வினா(Main Question): 332

    அறிவிற்கு அறிவியல் அருளிய அறிவின் அறிவியலின் தந்தை  வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘பேரறிவு உணர்ச்சியாயும், சிந்தனையாயும் உள்ளது’ என்று அறிந்திருந்த நிலையில் மேலும் உண்மை விளங்க உணர்ச்சிக்கு முன்னர்  பேராற்றல் ஒழுங்காற்றலாயும் விளங்குகின்றது என்கின்ற அரிதினும் அரிதான உண்மையினை மகரிஷி அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.   அவருக்கு மேலும் விளங்கிய  அந்த உண்மை என்ன?  அந்த உண்மை ஒன்றா, பலவா?  

     துணை வினாக்கள் (Sub questions):

    1)  இந்த வினாவின் நோக்கம்  என்ன?

    2) மேலும் மகரிஷி அவர்களுக்கு விளங்கிய உண்மைகளை நாம் ஏன் அறிந்துகொள்ள வேண்டும்?  அதன் பயன் என்ன?  புலன்கள் வழியாக இன்பத்தை துய்ப்பதைவிட   மேலான இன்பமா புலன்களின் உதவியின்றி உண்மையினை அறிவது?  எவ்வளவு மேலான இன்பம் உண்மையினை அறிவது?  அளவு ஏதாவது கூறமுடியுமா அவ்வின்பத்திற்கு?  அதுதான் பேரின்பமா?

    3) மகரிஷி அவர்களின்  சிந்தனை ஓட்டம்,  எப்படி/எவ்வாறு/எந்த திசையில்  இருந்திருந்தால் அவருக்கு உண்மை விளங்கி உணர்ச்சிக்கு முன்னர் அறிவு ஒழுங்காற்றலாய் விளங்குகின்றது எனக் கண்டுபிடித்திருப்பார்?  இதனை அவரது மாணவர்களாகிய நாம் அறிய வேண்டாமா?  அவருடைய மாணவர்கள் உண்மை அறிதலில்  அனுபவிப்பதில் அவரது ஆன்மாவும் சேர்ந்து அல்லவா இன்புறும்?!

    4) அறிவின் ஒழுங்காற்றல் என்கின்ற நிலையினை மகரிஷி அவர்கள் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் இன்று சமுதாயத்திற்கு     முழுமையான அறிவிற்கு அறிவியல் கிடைத்திருக்குமா?

    4) அறிவின்  இயக்க படிநிலைகள் என்னென்ன?

    5) அவற்றில் எந்தெந்த படிகள் ஒழுங்காற்றலாய் விளங்கும் அறிவின் திருநிலைகள்?

    5) அறிவு உணர்ச்சிக்கு முன்னர் ஒழுங்காற்றலாய் விளங்குகின்ற அரிய உண்மையைக் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் அவரால் அறிவின் இயக்கமாக  உள்ள படிநிலைகளை முழுவதுமாக அவர் கண்டுபிடித்திருக்க முடியுமா?

    6) அறிவு என்றால் அறிவு?  அதற்கு ஏன் ஒழுங்காற்றல் என மற்றொரு புனிதப் பெயரைச் சூட்ட வேண்டும் மகரிஷி அவர்கள்?

    7) இயற்கையின் ஆதிநிலையில் பேராற்றலும், அறிவும் இருந்துள்ளது என்பதனை நாம் அறிவோம்.   அறிவு என்றால் அது உணர்ச்சியாயும்(எல்லா உயிர்களிலும்) சிந்தனையாகவும்(மனிதனில்) இயங்குகின்றது என்பதனையும் அறிவோம்.  ஆனால் அவ்வாறு அறிவு அறிந்திருக்கும் நிலையில் அறிவிற்கு ஒழுங்காற்றல் என்கின்ற  மற்றொரு பெயர் சூட்டப்படுவதன் காரணம் விளங்கிவிட்டதா அன்பர்களே!?  வாழ்க வளமுடன்!

    8) ஒழுங்காற்றல் என்கின்ற அறிவின் மற்றொரு புனிதப்பெயரைக் கொண்டு இப்போது நம் அறிவு என்ன பேரின்பத்தை அனுபவிக்க முடிகின்றது?

    (அ)  அறிவைப்பற்றிய தெளிவு கிடைக்கின்றதா?

    (ஆ) எப்போது ஒன்றைப்பற்றிய தெளிவு ஏற்படும்?

    (இ) அறிவை அறிவு தெளிவாக அறிந்துகொள்வதில் ஏற்படும் ஐயங்கள் தெளிவாகியுள்ளனவா?

    (ஈ) என்னென்ன ஐயங்கள் அறிவாற்றுலுக்கு தீர்ந்துள்ளன ஒழுங்காற்றல் என்கின்ற திருப்பெயரால்?

    9) அறிவு தன்னை அறிய வேண்டும் என்பதில் இன்றைய சிந்தனையின் முக்கியம் என்ன?

    10) நான் யார் என அறிவதில் இன்றைய சிந்தனையும் அடங்குமா?

    11) ஒழுங்காற்றலுக்கும், ஒழுங்கிற்கும்,  ஒழுக்கத்திற்கும் உள்ள  தொடர்பு என்ன?   ஆறாம் அறிவின் நடத்தையில்/குணத்தில்/மனிதப்பண்பில்/ மனிதனாக நடந்துகொள்வதில்/இறைவழிபாட்டிலும்  ஒழுங்காற்றலின்(order of function) பங்கு என்ன? ஒழுங்காற்றலின் பங்கிற்கு மனிதன் இடம் தராமல் இருந்தால் அது இறைவழிபாடாகுமா?

    12) ஒழுங்காற்றலைக்கொண்டு இயற்கை/இறை மனிதனுக்கு  கட்டிக்கொடுத்த உடலை துன்பம் வராமல் பராமரிப்பது  ஆறாம் அறிவின் கடமைதானே? ஆறாம் அறிவு  ஒழுக்கநிலையில்தானே அந்த கடமையை ஆற்ற முடியும்?! ஆகவே ஒழுங்காற்றலாக உள்ள அறிவு மனிதனில் ஆறாம் அறிவாக செயல்படும்போது  ஒழுக்க நிலையில் செயல்பட மனிதன்தான் பொறுப்பேற்கவேண்டுமல்லவா?  இங்கேதான்  அறியாமையிலும், அலட்சியத்திலும், உணர்ச்சிவயத்திலும் மனித வாழ்வில்  சிக்கல்கள் ஏற்படுகின்றதல்லவா? ஆறாம் அறிவு மனிதனில் ஒழுக்கறிவாக, ஒழுக்கப்பழக்கறிவாக  செயல்பட மனிதன் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லையெனில் துன்பம்தான் வருமன்றோ? அதனால்தானே ஒழுக்கம் உயரினும் மேலாகக் கருதப்படவேண்டும் என்கிறார் திருவள்ளுவர்?

    13) மேலும் ஏதேனும் வினாக்கள் இருப்பின் அவற்றையும் எழுப்பிக்கொண்டு விடைகள்  அறிந்து அறிவைப்(தெய்வத்தைப்) பற்றிய தெளிவினை அடைவோம்  இந்த புனித நாளில்.

    அதற்கு நம் குருபிரான் உள்பட இயற்கையின்/இறையின் நேரிடை பிரதிநிதிகளான/தூதுவர்களானஅறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அனைத்து அறவோர்களிள் அருளும் இறையின் திருவருளும் நிச்சயமாக துணை நிற்குமாக. வாழ்க வளமுடன்!

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

       உலகெங்கிலும் பரவட்டும் திருவேதாத்திரியம்!!!

     வாழ்க அறிவுச் செல்வ                   வளர்க அறிவுச்   செல்வம்!!


     

  • சிந்திக்க அமுத மொழிகள்-335 (994th Posting)

    வாழ்க மனித அறிவு!                               வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்-335  (994th Posting)

                

        22-05-2022 — ஞாயிறு

     அறிவு வளர்ச்சி

    மனிதனுடைய மகத்துவத்தை அவனே அறிந்துகொண்டு மனிதனாகவே வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் உலகமுழுதும் குறுகிய காலத்திலேயே உருவாகிவிடும் என்பது திண்ணம்.”

                                                          . . . வேதாத்திரி மகரிஷி.

    பயிற்சி—

    1. மனிதகுலம் தன்னுடைய மகத்துவத்தை தற்போது அறிந்துகொள்ளவில்லை என்கிறாரா மகரிஷி அவர்கள்?
    2. ந்த அடிப்படையில் அவ்வாறு கூறுகிறார்?
    3. மனிதகுலம் தன்னுடைய மகத்துவத்தை அறியாததுதான் இன்று மனிதகுலம் படும் எல்லாத்துன்பங்களுக்கும் காரணமா?
    4. மனிதனின் மகத்துவம் பற்றி மகரிஷி அவர்கள் ஏதேனும் கவிகளின் வாயிலாகத் தெரிவித்துள்ளாரா? ஞா.க. கவிகள் [எண் 290(1955) மற்றும் 297(03-01-1959)] என்ன கூறுகின்றன?
    5. முன்னாள் ஜனாதிபதியும் தத்துவஞானியுமான டாக்டர். இராதாகிருஷ்ணன் பரிணாமம் இன்னும் பூர்த்தியாகவில்லை-Evolution is  still incomplete) என்று கூறியுள்ளதையே மகரிஷி அவர்கள் ’மனிதகுலம் தன்னுடைய மகத்துவத்தை தற்போது அறியவில்லை’ என்கிறாரா? 
    6. ஆதிமனிதனிலிருந்து கருத்தொடராக வந்துள்ள இன்றைய மனிதகுலம் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும் தன்னுடைய மகத்துவம் தெரியாமலா இருக்கின்றது?
    7. பல்லாயிரம் ஆண்டுகளாக தன் மகத்துவத்தை உணராத மனிதகுலம் தன் மகத்துவத்தை உணர்கின்ற காலம் அருகிலேயே உள்ளது என்பது ஆச்சரியத்தை அல்லவா தருகின்றது? எப்படி அவருக்கு அந்த வருங்கால உணர்தல் சாத்தியமாகின்றது? நமக்கு அதுபோன்ற வருங்கால உணர்தல் திறன் இல்லாமல்தானே உள்ளது! எப்போது வரும்?
    8. மனிதனாக வாழ்கின்ற சூழ்நிலைகள் விரைவிலேயே உருவாகிவிடும் என்றால், தற்போது மனிதன் எவ்வாறு வாழ்கின்றான் என்கிறார் மகரிஷி அவர்கள்?
    9. விரைவிலேயே உருவாகிவிடும் என்பது வருங்கால உணர்தல் என்பதுதானே? வருங்காலத்தைப்பற்றி அறிஞர்கள் கூறும் போது இரண்டுவிதமாகக்  கூறலாம்? ஒன்று  நல்ல காலம் விரைவில் வரவேண்டும் என்று தன்விருப்பத்தைக் கூறலாம்.  மற்றொன்று வரும் என்று உறுதியாகவும் கூறலாம். நல்ல காலம்  உருவாகிவிடும் என்பது திண்ணம் என்று கூறியுள்ளதால் அந்த நல்ல காலம் வந்துவிடும் என்று றுதியாகத்தான்(positively) கூறுகிறார் அல்லவா?
    10. இவ்வாறு எதன் அடிப்படையில் றுதியாகக் கூறமுடிகின்றது மகரிஷி அவர்களால்? 
    11. *ஒன்றுமிலா ஒன்றிலிருந்து ஆரம்பித்த இயற்கை/இறை தனது தன்மாற்றப் பயணத்தின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால்தான் மனிதகுலம் தோன்றியுள்ளது.  தன்மாற்றமாக இருப்பதால்(தானே மாறியுள்ளதால்) இயற்கைக்கு /இறைக்குள்ள மகத்துவம் மனிதனுக்கும் உண்டல்லவா?  அம்மனிதனுக்கும் தெரியுமல்லவா? ஆகவே அதனை வைத்து உறுதியாகக் கூறுகிறாரா?(* மனித புலனறிவிற்கு) 
    12. மனிதன் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்படியிருக்கும்போது இத்தனை நாட்களாக மனிதன் தன் மகத்துவத்தை அறியாத நிலை நிலவும்போது விரைவில் மகத்துவத்தை உணரும் நிலை உருவாகிவிடுமா என்கின்ற ஐயமல்லவா ஏற்படுகின்றது! பல்லாயிரம் ஆண்டுகளில் உருவாகாத அணுவியல் விஞ்ஞானம்(atomic theory) இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகி இயற்கை தன் ரகசியங்களை விஞ்ஞானத்தின் மூலம் அறிவித்துவருவதுபோல் மனிதனும் தன் மகத்துவத்தை அறிந்து கொள்ளும் நிலை வெகுவிரைவில் உருவாகும் என்கிறாரா?
    13. இயற்கையில் பல்லாயிரம் ரகசியங்கள் உள்ளன.   ஆனால் அவற்றையெல்லாம் மனிதன் குறுகிய ஆயுட்காலத்தில் தனது அறிவால் அறியமுடியாது என்றாலும்  மனிதகுல வாழ்வு சிறப்புற எதனை அறியவேண்டுமோ,  அதாவது இயற்கை/இறை தன்னுடை மாற்றத்தை ஆதிநிலையிலிருந்து தான் அசைந்ததிலிருந்து  ஆரம்பித்து படிப்படியாக விளக்கி ஆறாம் அறிவுடைய மனிதன் வரை வேதாத்திரி மகரிஷி அவர்களால் மூலம் விளக்கி,   மனிதன் தன் மகத்துவத்தை அறிந்துகொள்ளும் சூழ்நிலைகள் விரைவில் உருவாகிவிடும் என்பதனையும் வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாகவே தெரிவிக்கின்றதா?
    14. மேலும் புலி மானை அடித்துக் கொல்லும் உதாரணத்தை எடுத்துக்கொண்டு சிந்திப்போமா அன்பர்களே?! Discovery Channel-ல் புலி மானைத் துரத்திப் பிடிக்கும் காட்சிகளைக் கண்ணுறுபவர்களின் நெஞ்சங்கள் பதைபதைக்கும். அதற்காக புலிகளெல்லாம் இனி மான்களை வேட்டையாடக்கூடாது, வருங்காலங்களில் புல்லை மட்டுமே தின்னவேண்டும் என்று  எதிர்பார்ப்பது போலவா உள்ளது மகரிஷி அவர்கள் கூறுவது? அல்லவே! மனிதன் தன் மகத்துவத்தை உணர்ந்து மனிதனாக வாழ்வது நடைமுறையில் சாத்தியம் தானே!  என்ன அன்பர்களே?
    15.  மனிதன் தன்  மகத்துவத்தை அறிகின்ற சூழ்நிலை விரைவிலேயே உருவாகிவிடும் காலம் எந்த நியதியின் ஊக்கத்தால்  நடக்கும்?
    16.  இனி நம் பொறுப்புகளும் கடமைகளும்# என்னென்ன?   (# இயற்கை ஐந்தறிவு வரை அதுவே அயரா விடாமுயற்சி செய்து தனது தன்மாற்றத் தொழிற்சாலையில்(Transformation industry) தானே ஒரே முதலாளியாக (sole proprietor) இருந்து நடத்தி வந்தது. ஆதி மனிதனாக வந்த பிறகு, ஆறாம் அறிவு வளர்ந்த போது மனிதனும், இயற்கையின் தன்மாற்ற தொழிற்சாலையில் பங்குதாரராகிவிட்டான்(share holder). மனிதன் பங்குதாரராகிவிட்டாலும் இயற்கை/இறையேதான் செயல் இயக்குனா் (Ever Managing Director) என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். இயற்கையின் மனித –- தன்மாற்றத் தொழிற்சாலையில் பங்குதாரராகிவிட்ட பிறகு, அந்த தொழிற்சாலையின் இலாபத்திற்கும் (வாழ்க்கையில் மகிழ்ச்சி) நஷ்டத்திற்கும் (துன்பம்) பொறுப்பு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உண்டு.

        இயற்கையின் தன்மாற்ற தொழிற்சாலையில், கடைசியான மனித உற்பத்தியில், இன்னமும் ஒழுங்கு படுத்தப்பட்ட உற்பத்தி regular production ஆரம்பிக்கப் படவில்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டுதான் முன்னாள் ஜனாதிபதியும், தத்துவஞானியுமான டாக்டர். இராதாகிருஷ்ணன் “பரிணாமம் இன்னமும் பூர்த்தியாகவில்லை – Evolution is still incomplete” என்கிறார். ஆதிமனிதன் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகியும், இன்னமும், இயற்கையின் தன்மாற்ற மனித உற்பத்தியில் மாதிரி முறையில்தான் (prototype) உற்பத்தி (மகான்கள், அறிஞா்கள்) நடை பெற்று வருகின்றது. ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். எண்ணாமல் பரிணாம வளர்ச்சி இல்லை. ஆகவே மனவளக்கலைஞர்களின் ஆதங்க எண்ணங்கள் குருபிரானின் புனிதஎண்ணங்களோடு இணைந்து வலுப்பெற்றால்தான் மனிதனுடைய மகத்துவத்தை அவனே அறிந்துகொண்டு மனிதனாகவே வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் உலகம் முழுதும் குறுகிய காலத்திலேயே உருவாகிவிடும் என்கின்ற  மகரிஷி அவர்களின் புனித எண்ணங்கள் நிறைவேறி மனிதகுலம் தனது பூர்வீக சொத்தான (hereditary wealth) அமைதியை அனுபவித்து இன்புற்றிருக்கும்! வாழ்க வளமுடன்!)

    மகரிஷி அவர்களின் அழைப்பில் உறுதி இருப்பதைக் கவனிப்போம்.

    வாழ்க அறிவுச் செல்வம்!                 வளர்க அறிவுச் செல்வம்!!


     

     

  • சிந்திக்க வினாக்கள்-331-வருங்காலம் உணர்தல்

    வாழ்க மனித அறிவு!                                 வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்-331

    15-05-2022-ஞாயிறு        

    வருங்காலம் உணர்தல்

                                                               

    வாழ்க வளமுடன்!

    பிரதான வினா(Main Question): 331  – (993rd Posting)

    எந்த அடிப்படையில்,  வருங்காலத்தை உணர்தல் ஒரு வியப்பிற்கான செயலே அல்ல என மானுடத்தை உள்ளடக்கிய இயற்கைக்கு  இயல் ஏற்படுத்தித் தந்துள்ள  வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்?

    துணை வினாக்கள் (Sub questions):

    1) வியப்பில்லை என்றால் வருங்காலம் உணர்தல் என்பது ஒரு சாதாரண நிகழ்ச்சிதான் அல்லவா? ESP(Extra Sensory Perception) இல்லைதானே!?

    2) சாதாரண நிகழ்ச்சி என்றால் எல்லோருக்கும் இது சாத்தியம்தானே!?

    3) எல்லோருக்கும் சாத்தியமில்லை எனில் யார் யாருக்கு  வருங்கால உணர்தல் சாத்தியம்?

    4) வருங்கால உணர்தல் நிகழ்வதற்கு  ஏதாவது நிபந்தனைகள் உண்டா?

    5) எப்படி அவர்களுக்கு மட்டும் சாத்தியமாகின்றது?

    6) அவர்கள்  தனிப்பிறவிகளா?

    7) வருங்காலம் உணர்தல் ஒரு சாதாரண நிகழ்ச்சி என்று  எந்த அடிப்படையில் மகரிஷி அவர்களால் மட்டுமே கூறுமுடிகின்றது?  பால பருவத்திலேயே இயற்கை/இறை நான்கு மகோன்னத கேள்விகளை*   அவருள் எழுப்பியதல்லவா?

    (* மகானாக்கிய  மகோன்னத கேள்விகள்:  1. இன்பம், துன்பம் என்பது என்ன? அவைகள் எவ்வாறு வருகின்றன? 2. உயிர் என்பது என்ன? 3. கடவுள் என்பவர் யார்? அவர் ஏன் இந்த பிரபஞ்சத்தைப்(universe) படைத்தார்? 4.வறுமை ஏன் வருகின்றது?)

    8) மனவளக்கலைஞர்களுக்கு வருங்காலம் உணர்தல் என்பது சாத்தியமா? எப்படி? எவ்வாறு?

    9) மகரிஷி அவர்கள் தான் அனுபவித்ததைத்தான் சமுதாயத்திற்குத்  தெரிவிப்பார் என்பதால் வருங்கால உணர்தலாக  மகரிஷி அவர்கள்  கூறியுள்ளது என்னென்ன?

    10)  இதுவரை அவர் கூறியது என்னென்ன நடந்துள்ளன?

    11) என்னென்ன நடக்க வரிசையில் காத்திருக்கின்றன?

    12) “ஓருலக ஆட்சி வரும் என்று நான் நினைத்துவிட்டேன். ஓர் உலக ஆட்சி வந்தே தீரும்”   என்று மகரிஷி அவர்கள் கூறியுள்ளது வருங்கால உணர்தல் தானே?!

    13) ‘வருங்காலம் உணர்தல்’பற்றி ஒருவருக்கு மட்டுமேவா பொறுப்பு?  மற்றவர்களின் பொறுப்பு என்ன அதில் உள்ளது?

    14) வருங்கால உணர்தல் யாரால் நிகழ்கின்றது? இயற்கையால்/இறையால் நிகழ்கின்றதா அல்லது மனிதனால் நிகழ்கின்றதா?

    15) வருங்கால உணர்தல் எப்போது, எவ்வாறாக நிகழ்கின்றது?

    16)வருங்கால உணர்தல் என்பது என்ன? இன்றைய சூழலில் வருங்காலம் உணர்தல் பற்றிய சிந்தனை எந்த வகையில் மனிதகுலத்திற்கு  அவசியமாகின்றது? 

    17) வருங்கால உணர்தல் ஓர் அறிவியல் அடிப்படையில் தானே உள்ளது?

    18)’எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’  என்கின்ற பரிணாம அறிவியலுக்கும், வருங்காலம் உணர்தல் என்கின்ற அறிவியலுக்கும் தொடர்புள்ளதா? என்ன தொடர்பு அது?

    19) ஒருவர் வருங்காலம் பற்றி அறிவித்ததில் மற்றவர்கள் பங்கு என்ன?

    20) குறிப்பாக  மனவளக்கலைஞர்களின் பொறுப்புகளும், கடமைகளும் என்னென்ன?

     

    வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச் செல்வம்!                   வளர்க அறிவுச்   செல்வம்!!