வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க அமுத மொழிகள்- 241
24-12-2016 — சனி
“தோணியில் ஏறிக்கொள்; வாழ்வாகிய கடல் ஆழமானது; கடக்கக் கஷ்டமானது; சான்றோருடன் உறைவதே அதனின்று கரையேற்றும் தோணியாகும்.”
. . . குருநானக்
பயிற்சி—
1) அவ்வையார் இதேபோன்று கூறும் வரிகள் என்ன?
2) திருவள்ளுவர் எந்தக் குறளில் இதுபோன்று கூறுகிறார்?
3) இதனை வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகிறார்?
4) இதுபோன்று அறவோர்களின் அறிவுரை இருந்தும் அதனை அலட்சியம் செய்த சமுதாயத்திற்கு இருபதாம் நூற்றாண்டிற்கு பிறகாவது செயல்படுத்தக் கூடிய அறிவுரைகள் கிடைத்துள்ளது அல்லவா? மகரிஷி அவர்களின் அறிவுநிலைக்கு உயர்ந்து நெஞ்சார வேதாத்திரியத்தைப் போற்றி வாழ்த்துவோம்.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்