வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க அமுத மொழிகள்- 233
25-11-2016—வெள்ளி
“அனுபோகப் பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அளவிற்கேற்றவாறு வாழ்வில் அல்லல் மிகுந்து வரும், அமைதிகெடும், செயலில் அன்புநெறி பிறழும்.”
. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பயிற்சி—
1) இக்கூற்றில் அறிந்து கொள்ள வேண்டியது என்ன?
2) அனுபோகப் பொருட்களின் எண்ணிக்கைப் பெருகும் அளவிற்கேற்றவாறு செயலில் அன்புநெறி பிறழும் என்கிறாரே? இது எவ்வாறு? இதில் அறிவியல் உள்ளதா?
3) இவ்வுண்மையினை எவ்வாறு திருவள்ளுவர் கூறுகிறார்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்