FFC – 134-யோகவாழ்வு வாழ்வோம் – 3/3

வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

 யோகவாழ்வு வாழ்வோம் – 3/3

                                     FFC – 134                            

                                                             08-11-2015-ஞாயிறு

 -படம்

     பக்தனுக்கும், ஞானிக்கும் கடவுளை அறிந்ததில் உள்ள வித்தியாசத்தை ஒர் கவியில் மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவு கூர்ந்து இன்றைய சிந்தனையை துவங்குவோம்.

நான் யார் என கருத்தியலாக அறிந்ததோடு மட்டமல்லாது, தொழிற் கல்வியில் கருத்தியல் பாடத்துடன் செய்முறையும் உள்ளது போல், இறை உணர் ஆன்மீகத்திலேயும் உள்ள செய்முறைப் பயிற்சியில் (அகத்தவம்) வெற்றி பெற வேண்டும். அதாவது கருத்தியலாக அறிந்ததை  உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் முழுப்பயன்களை அடைய முடியும். அப்பயன்கள், துன்பமில்லா யோகவாழ்க்கை வாழ்வதற்கு அவசியமானவைகளாகும்.

    செய்முறைப் பயிற்சியில் உறுதியுடன் அறிவதற்கு சில காலம் தேவையிருக்கின்றது.

    அந்தக் காலத்தின் அளவு

       அவரவா்களின் ஆர்வம்,

       கைமேல் பலனை எதிர்பார்க்காத தளரா விடாமுயற்சியினைப் பொருத்திருக்கும்.

       புலன்வழி வினைப்பதிவுகளின் அழுத்தம் ஆகியவைகளைப் பொருத்திருக்கும்.

இருப்பினும் ‘நான் யார்’ என்பதனை கருத்தியலாகச் சந்தேகமின்றித் தெளிவுடன் அறிவதால், செய்முறை பயிற்சியில் ஆர்வமும், முயற்சியில் அயரா விடாமுயற்சியும் கைக்கூடும். அதன் விளைவாக புலன் வழி வினைப்பதிவுகளின் வேகமும், அழுத்தமும் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வர, செய்முறைப் பயிற்சியில் நான் யார் என உறுதியுடன் அறிவதற்கு தேவைப்படும் காலம் சுருங்கி வரும். அதாவது அகத்தவத்தின் முடிவு விரைவில் கைகூடிவிடும்.

   ஒரு மனிதன் வாழ்க்கையை நான் யார் என அறிவதற்காக பயன்படுத்தாத போது, இயற்கையின் நோக்கத்தை அறியாது, அறியாமையில் வாழும்போது இயற்கைக்கு முரணான வாழ்க்கைதான் வாழமுடியும். இயற்கைக்கு முரணாக வாழும் போது இயற்கையின் இனிமை கெடும். இயற்கையின் இனிமையைக் கெடச்செய்தால் விளைவுகளும் துன்பங்களாகத்தானே (miserable life)வரும்.   பிறவிப்பிணிக்கு ஆளாகி மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து இதே miserable life-ஐத்தான் வாழ வேண்டி வரும். அல்லது வம்சாவளியின் வழியாக துன்பம் தரக்கூடிய விளைவுகள் வரநேரிடும்.

   எந்த ஒரு பயனையும் அனுபவிக்க வேண்டுமென்றாலும் அதற்கான செயல் புரிந்தேயாக வேண்டும். நான் யார் என அறிந்து அதன் பயனை அடைவதற்கு மனவளக்கலையாகிய அகத்தவமும், தற்சோதனைப் பயிற்சியும் அவசியம். நான் யார் என அறிதலின் பயனை விரிவாகத் தெரிந்து கொள்வதால், பயிற்சி செய்வதற்கான ஊக்கமும், ஆக்கமும் வரும். ஏனெனில் மனித மனம் ஆதாயமில்லாமல் எதனையும் விரும்பாது (human mind is so calculative) என்பதால், நான் யார் அறிதலின் பயனை அறிந்து கொள்வது பயனளிக்கும். ஆகவே நான் யார் என அறிதலின் பயன்களையும், அறியாதலால் வரும் துன்பங்களையும் அறிய வேண்டும். இப்பயன்கள் பற்றி, இணைய தள ஆசிரியரால் எழுதப்பட்டு 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘நான் யார்?’ என்கின்ற நூலில் எளிமையாகவும் விரிவாகவும் எழுதப்பட்டுள்ளது. அந்நூல்பன்னிரண்டு அத்தியாயங்களைக் கொண்ட அந்நூலில், ‘அறிந்தது என்ன’ என்கின்ற இறுதி அத்தியாயத்தில், “லாபமும், நஷ்டமும்” என்கின்ற தலைப்பில்  அட்டவணைப்படுத்திக்   கொடுக்கப்பட்டுள்ளது. அது உங்கள் பார்வைக்காக நகல் எடுத்துத் தரப்பட்டுள்ளது. வாசித்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

naan yaar-page-146-2naan yaar-page-147-சிவி-5-1-15நாகு-3

naan yaar-page-148-4

   எனவே ‘நான் யார்?’ என்கின்ற கேள்விக்கு விடை கண்டு அந்த அடிப்படை வெளிச்சத்திலே தூய்மை செய்து கொண்டு பிறருக்கு வழிகாட்டும் அளவுக்குத் தன்னை உயர்த்திக் கொண்டு யோகவாழ்க்கை வாழும் பாக்கியம் மனவளக்கலைஞர்களுக்கு கிடைத்துள்ளது. வாழ்க மனவளக்கலை. வளர்க மனவளக்கலை.  அடுத்த விருந்திற்கு 11-11-2015 புதனன்று சத்சங்கத்தில் கூடுவோம்.

வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்