July 2020

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 323

    வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்- 323

     

    31-07-2020  — வெள்ளி

    பழக்கமும் விளக்கமும்

    பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் ஜீவன் மனிதன்.

    — வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராட்டம்

    எண்ணிலடங்கா பிறவிகளில் பெற்ற பழக்கப்பதிவுகள் இப்பிறவியில் மட்டுமே பெற்ற விளக்கப்பதிவை வெற்றிகொள்கின்றது. பழக்கப்பதிவுகள் விளக்கப்பதிவைத் தன்பக்கம் சாய்த்து விடுகின்றது.

     

    பயிற்சி:

    1. பதிதல், பதிவு என்றால் என்ன?
    2. (i) பழக்கம் என்பது என்ன?   (ii) பழக்கப்பதிவு என்றால் என்ன? (iii) அது எப்படி நடைபெறுகின்றது?
    3. விளக்கம் என்பது என்ன?
    4. (i) விளக்கப்பதிவு என்றால் என்ன? (ii) அது எவ்வாறு நடைபெறுகின்றது?
    5. போராட்டம் என்கிறாரே மகரிஷி அவர்கள்! அப்படியென்றால் என்ன பொருள்?
    6. ஏன் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராட்டம் நடக்கின்றது?
    7. பழக்கப்பதிவை விளக்கப்பதிவு வெற்றிகொள்ள ஆன்மசாதகன் என்ன செய்ய வேண்டும்?
    8. விளக்கப்பதிவை வலிமையாக்க ஆன்மசாதகன் என்னென்ன செய்ய வேண்டும்?
    9. (i) ஊக்கமுடைமை என்றால் என்ன? (ii) ஊக்கமுடைமை விளக்கப்பதிவை வலிமையாக்குமா?
    10. முயற்சி…?
    11. (i) சத்சங்கம் என்றால் என்ன? (ii) சத்சங்கத்தை எத்தனை வகையாக கொள்ளலாம்? (iii) சத்சங்கத்தால் விளக்கப்பதிவின் வலிமையை அதிகரிக்க முடியுமா?
    12. விளக்கப்பதிவின் வலிமையை அதிகரித்துக் கொண்டு   பழக்கப்பதிவை  வெற்றிகொள்ள  ஐயன் திருவள்ளுவரும், அவ்வைத்தாயும் எவ்வாறு உறுதணையாக இருக்கின்றனர்? Avvaiyar & Thiruvalluvar - Prosper Spiritually
    13. (i) இயல்பூக்க நியதி  எவ்வாறு  பழக்கப்பதிவை விளக்கப் பதிவு வெற்றிக்கொள்ள  உதவியாக இருக்கும்? (ii) இயல்பூக்க நியதி தானாகவே உதவி செய்யுமா? (iii) அல்லது ஆன்மசாதகன் இயல்பூக்க நியதியை யுக்தியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா?  வாழ்க வளமுடன்!

    வாழ்க வேதாத்திரியம்!  வளர்க வேதாத்திரியம்!!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


  • சிந்திக்க வினாக்கள்- 318

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

     

    சிந்திக்க வினாக்கள்- 318

    30-07-2020 – வியாழன்

    மனிதனின் அடையாளம்

    1. மனிதவாழ்வில் துன்பங்கள் ஏன்?
    2. மனிதன் தன்னை தவறாக அடையாளம் காண்பதாலா துன்பங்களை அனுபவிக்கிறான்? 
    3. மனிதனுக்குத் தன்னுடைய அடையாளம் தெரியாதா?
    4. வாழ்க்கையில் என்ன வேண்டும்?
    5. எதில் வெற்றி பெற வேண்டும்?
    6. பிறவியின் நோக்கமே தன்னை(self realization)அறிய வேண்டும். அதற்கான வினாதான் “நான் யார்?” என்பது. அதாவது நான் யார் என அறிய வேண்டும் என்கின்றபோதே தான் யார் எனச் சரியாக அடையாளம் காணப்படவில்லை என்றாகின்றது அல்லவா?
    7. தன்னை அறிவதுதான் வாழ்வின் நோக்கம் எனில், தன்னைத் தவறாக அடையாளம் காண்பது என்பது பிறவியின் நோக்கத்திற்கு எதிரானது தானே?
    8. இயற்கை/இறைதான் மனிதாக வந்துள்ளது. தன்னுடைய சரியான, உண்மை நிலையை அறியாமல் தவறாகத் தன்னை அடையாளம் காண்பதென்பது இயற்கைக்கு முரணானதுதானே?
    9. ஆகவே, இயற்கை எதற்காக மனிதனாக வந்ததோ, அதற்கு எதிர் மறையாக வாழ்ந்து இயற்கையின் இனிமையைக் கெடுத்தால் விளைவு துன்பம் தானே?
    10. மனிதன் கொண்டிருக்கின்ற தவறான அடையாளம் எது?
    11. மனிதன் தன்னை சரியாக அடையாளம் காணின் என்னென்ன நன்மைகளை அடைகிறான்? அதனால் சமுதாயம் அடையும் நன்மைகள் என்னென்ன?
    12. தன்னை இறையுடன் அடையாளம் காட்டிக் கொள்வது சிறப்பா? அல்லது அழிகின்ற உடலுடன் அடையாளம் காட்டிக் கொள்வது சிறப்பா? எது சிறப்பு? நீங்களே சிந்தித்துப் பாருங்களேன்!

    வாழ்க வளமுடன்!

     

    வாழ்க வேதாத்திரியம்! வளர்க வேதாத்திரியம்!!

  • FFC-301 துறவறம்

     வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

    lotus

    FFC-301

    29.07.2020-புதன்

    துறவறம்

    Analysis_of_Thought

    -வேதாத்திரி மகரிஷி அவர்கள்

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளிய பாடலுக்கு அவரே அருளிய விளக்கம்


    (உலக சமாதானம் – மூன்றாம் பாகம்: தத்துவ விளக்கம், 1957ம் ஆண்டு பதிப்பு)

     

    வாழ்க திருவேதாத்திரியம்!                  வளர்க திருவேதாத்திரியம்!!