May 2020

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 302(51)

    வாழ்க மனித அறிவு      வளர்க மனித அறிவு

    31-05-2020—ஞாயிறு

     

    • ஒரு பதார்த்தத்தை அனுபவித்தால் அல்லாது, அந்தப் பதார்த்தத்தின் ருசி தெரியாது.
    • ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் ஆசை ஏற்படாது.
    • அதுபோல் தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தால் அல்லாது அதன் மேல் பிரியம் வராது.
    • ஆதலால் தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லட்சியத்தைக் கொண்டிருங்கள்”.

    …அருட்பிரகாச வள்ளலார்.

    பயிற்சி—

    1) வள்ளலார் கூறும் அருட்செய்தி என்ன?
    2) “தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தல்” என்றால் என்ன?
    3) தெய்வத்தை உணரும் பயிற்சிகளை மட்டுமே செய்து வந்தால் போதாதா?
    4) தெய்வத்தின் மேல் பிரியம் வர என்ன செய்ய வேண்டும்?
    5) தெய்வத்தை உள்ளபடி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது?
    6) வள்ளலார் கூறும் இந்த அறிவுரையைச் செயல்படுத்த வேதாத்திரியம் எவ்வாறு பேருதவியாக இருக்கும்?  வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்     வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க அமுதமொழிகள்-301(274)

    வாழ்க மனித அறிவு!                வளர்க மனித அறிவு!!


    சிந்திக்க அமுத மொழிகள்-301(274)

                                                                                                                                                               30-05-2020-சனி

    அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.”

    . . . புத்தர்.

    பயிற்சி:

    1) அறியாமை என்று எதனைக் கூறுகின்றார் புத்தர்?

     2) ‘அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது’ என்கிறாரே புத்தர்! 

    3) அறியாமை ஆயுள் முழுவதும் அப்படியே இருந்துவிட்டு போகலாமா?

    4) அறியாமை நீங்கினால் அதன் விளைவு, திருவள்ளுவர் கூறுவது போன்று அறிவு அறிவுடைமை ஆகுமா?

    5) அறியாமை பற்றி வேதாத்திரிய அறிவியல்(அறிவு+இயல்) அகராதி (Vethathrian Dictionary of Science of Consciousness) என்ன கூறுகின்றது?

    6) என்றோ (சுமார் இருபத்தாறு நூற்றாண்டுகளுக்கு முன்னர்) வாழ்ந்தார் புத்தர். ஆனால் இன்று நாம் அறியாமை பற்றி புத்தர் எண்ணிய எண்ணங்களை அறிந்து கொண்டு, வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘அறியாமை’ பற்றி எண்ணிய எண்ணங்களோடு ஒப்பீடு செய்து, அறிவின் அறிவியல் உருவானது பற்றி நினைந்து மகிழ்ச்சி அடையலாமே!  இவ்வாறு எல்லாம் இயல்பூக்க நியதியினை பயன்படுத்தி பண்பேற்றத்தில் ஏற்றம் பெறலாமே!

    7) அன்பர்களே புத்தரின் இந்த அமுதமொழியைத் தூண்டுகோலாகக் கொண்டு ஒரு சிறு கட்டுரை எழுதிப்பார்க்கலாமே! எழுதும்போது புத்தர் என்னென்ன எண்ணி, இந்த அமுதமொழியினை அருளினாரோ அவையெல்லாம் நமக்கு தெரிய வருமே! புத்தரைப்போன்றே சிந்தனையாளர்களாகலாமே! வேதாத்திரிய அகராதி அதற்கு நமக்குத் துணை செய்யக் காத்திருக்கின்றதே!

    8) ஆழ்ந்த சிந்தனையில், உள்ளே இருக்கும் உத்தமனுடன் ஒருவேளை பேசுகின்ற  ஆனந்த அனுபவ வாய்ப்பைப் பெறலாமே!  சுயசிந்தனையே இறையுடன் பேசுவதுதானே! வாதி பிரதிவாதியாக இருந்து சிந்திக்கலாமே!  வாழ்க வளமுடன்!

    9) இன்னும் ஏதேனும் வினாக்கள் உங்களுக்குள் இருந்தால் அவ்வினாக்களை எழுப்பி விடை காணலாமே!

     வாழ்க வளமுடன். வாழ்க திருவேதாத்திரியம்!

    வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்

    வளர்க அறிவுச் செல்வம்.


  • சிந்திக்க அமுத மொழிகள்- 300(261)

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    lotus

    [rev_slider home-slider-1]

    சிந்திக்க அமுத மொழிகள்- 300(261)

    29-05-2020 — வெள்ளி

    கல்வியால் தன்னம்பிக்கை வருகிறது. தன்னம்பிக்கையின் வலிமையால் உள்ளிருந்து ஆன்மா   விழித்தெழுகின்றது.”

                                                                                                                  . . . சுவாமி விவேகானந்தர்

    பயிற்சி—

    1) தன்னம்பிக்கை என்பது என்ன?
    2) எத்தகைய கல்வியால் தன்னம்பிக்கை வளரும்?
    3) தன்னம்பிக்கையால் ஆன்மா விழித்தெழச்செய்வது என்றால் என்ன?
    4) ஆன்மா விழித்தெழுந்தால் என்ன பயன்?
    5) சுவாமி விவேகானந்தர் கல்வி பற்றி கூறியுள்ளதை இந்த பொன் மொழியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாமே!

     

    வாழ்க அறிவுச் செல்வம்               வளா்க அறிவுச் செல்வம்