February 2015

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 52

    வாழ்க மனித அறிவு    வளர்க மனித அறிவு

    28-02-2015—சனி

    புகழ் கள்ளைவிடக் கொடியதாகும். கள்ளைக் குடித்தால்தான் போதை வரும். ஒருவனைப் புகழ்ந்தவுடனேயே அவன் தலை சுற்ற ஆரம்பித்துவிடும். புகழ் கொடிய சத்துருவாகும்.

    …. ஸ்ரீ சாந்தானந்தர்.

    பயிற்சி—
    1) இதனை ஏற்றுக் கொள்ள முடிகின்றதா?
    2) புகழ் பற்றிய கெடுதலை எல்லா அறிஞர்களும் கூறுகிறார்கள். வேதாத்திரி மகரிஷி அவர்கள் புகழ் பற்றிக் கூறுவதென்ன?
    3) புகழ் பற்றி அறிஞர்கள் கூறுவது அவர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதா? அல்லது மனித குலத்திற்கே பொருந்தக் கூடியதா?
    4) புகழ் பற்றி கூறுவது அறிவு பூர்வமானதுதானா என்று கண்டுபிடிக்க முடியுமா?
    5) புகழுக்கும் பேரின்பத்திற்கும் உள்ள உறவு என்ன? விளக்க முடியுமா? விளக்கவும்.
    6) புகழில் சிக்காமல் இருக்க எவ்வாறு எச்சரிக்கையாக இருப்பது?

    வாழ்க அறிவுச் செல்வம்    வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 51

    வாழ்க மனித அறிவு      வளர்க மனித அறிவு

     

    21-02-2015—வெள்ளி

    ஒரு பதார்த்தத்தை அனுபவித்தால் அல்லாது, அந்தப் பதார்த்தத்தின் ருசி தெரியாது.
    ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் ஆசை ஏற்படாது.
    அதுபோல் தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தால் அல்லாது அதன் மேல் பிரியம் வராது.
    ஆதலால் தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லட்சியத்தைதக் கொண்டிருங்கள்.

    …அருட்பிரகாச வள்ளலார்.

    பயிற்சி— 1) வள்ளலார் கூறும் அருட்செய்தி என்ன?
    2) “தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தல்” என்றால் என்ன?
    3) தெய்வத்தை உணரும் பயிற்சிகளை மட்டுமே செய்து வந்தால் போதாதா?
    4) தெய்வத்தின் மேல் பிரியம் வர என்ன செய்ய வேண்டும்?
    5) தெய்வத்தை உள்ளபடி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது?
    6) வள்ளலார் கூறும் இந்த அறிவுரையைச் செயல்படுத்த வேதாத்திரியம் எவ்வாறு பேருதவியாக இருக்கும்?  வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்     வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள் – 50

    வாழ்க மனித அறிவு                             வளர்க மனித அறிவு

    26-02-2015 – வியாழன்

    வாழ்க வளமுடன்.

                             ஏன் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இணைய வேண்டும்? விரிவாக விளக்கவும்.

     

    வாழ்க அறிச் செல்வம்                                  வளா்க  அறிவுச் செல்வம்