சிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி

சி.அ.சு.ப.எண்- 05-01

இப்பயிற்சியின் நோக்கம் அவரவர்களே தங்களை சோதித்துக் கொள்ளுதலாகும். இதற்காக ஒரு நாட்குறிப்பை (diary) வைத்துக் கொள்ளுங்கள். அதில் தினந் தோறும், காலையிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் வரை நீங்கள் அறிஞர்களின் வாயிலாகத் தெரிந்து கொண்டது, மற்றும் நீங்களாக சிந்தித்தது ஆகியவைகளைக் குறித்து வாருங்கள். உலாவச்செல்லும்போது கூட நாட்குறிப்பை எடுத்துச் செல்லுங்கள். சில நேரங்களில் அரிய கருத்துக்கள் உதிக்கும். அவற்றைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் அக்கருத்துக்கள் மறந்து போகலாம். மீண்டும் நினைவிற்கு வராமல் போகும்.
*****