வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க வினாக்கள்- 319
03.08-2020 – திங்கள்
பிராயச்சித்தம்
பயிற்சி:
- பிராயச்சித்தம் என்றால் என்ன?
- பழிச்செயல் புரியும் மனிதனால், பிராயச்சித்தம் நடைமுறையில் தவறாமல் செய்யப்படுகின்றதா?
- இல்லையெனில் ஏன்? பிராயச்சித்தம் எளிமையாகத் தானே உள்ளது!
- பிராயச்சித்தம் எந்தெந்த முறைகளில் செய்யலாம்?
- அவற்றில் எந்த முறையில் பிராயச்சித்தம் செய்வதற்கு மனம் ஒத்துழைப்பு தருவதில்லை? ஏன்? பிராயச்சித்தம் செய்யாதபோது அதுவே மற்றொரு பழிச்செயல் புரிவதாகிவிடாதா?
- பிராயச்சித்தம் செய்யவில்லை எனில் அதன் விளைவு என்ன? செய்தால் அதன் பயன் என்ன?
- ஆறாம் அறிவின் சிறப்புகளில் ஒன்று அதன் ‘ Logic – ஏரணம்’ – அறிவு அடிப்படையில் ஏற்கும் உண்மை). அப்படியிருக்கும்போது பிராயச்சித்தம் செய்வதில் என்ன தயக்கம் மனிதனுக்கு?
- தனக்கு பிறரால் பழிச்செயல் ஏற்படும்போது அவரிடமிருந்து பிராயச்சித்தம் எதிர்பார்க்கும் மனிதன், தான் பிறர்க்கு பழிச்செயல் புரிந்தபோது மட்டும் பிராயச்சித்தம் ஏன் செய்வதில்லை/தயங்குகிறான்? Is it logic for the consciousness? Is illogical behaviour of consciousness corrcct? அது மனிதனின் பண்பா?
- கர்மாக்கள் எத்தனை வகைப்படுகின்றன? பிராயச்சித்தத்தால் எந்த கர்மாவின் தீய விளைவைப் போக்க முடியும்? அவ்வளவு துல்லியமாக பிராயச்சித்தங்கள் செய்ய வேண்டுமா?
- முன்னோர்கள் வழியாக வந்த கர்மாவின் தீய விளைவுகளை பிராயச்சித்தத்தால் தவிர்க்க முடியுமா?
- முடியாது என்றால் அதற்கான காரணம் என்ன?
- முடியாதபோது முன்னோர்கள் வழியாக வந்த கர்மாவை எவ்வாறு போக்குவது?
வாழ்க வளமுடன்!
அறிவிப்பு:
வரும் 06.08.2020 அன்று வியாழக்கிழமை, சிந்திக்க வினாக்கள் பகுதியில் ‘பாராட்டு’ குறித்த வினாக்களை சிந்திக்க இருக்கின்றோம்.
வாழ்க வளமுடன்!
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!