சிந்திக்க வினாக்கள்-313(57)

வாழ்க மனித அறிவு!                                                  வளர்க மனித அறிவு!!

lotus

சிந்திக்க வினாக்கள்-313(57)

 

13-07-2020 – திங்கள்

வாழ்க வளமுடன்.

                                              

குருவருள்

1) ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்கின்ற ஆன்றோர் மொழி என்ன தெரிவிக்கின்றது?  

2)  மேற்கண்ட ஆன்றோர் மொழியின்படி, அதில் கூறப்பட்டுள்ள நிகழ்வு சமுதாயத்தில்  இப்போது நிகழ்கின்றதா? நிகழவில்லை என்றால் ஏன் நிகழ்வதில்லை?  எந்நிகழ்வு அது? எப்போது இந்நிகழ்வு நிகழ்ந்திருக்கும்? இந்நிகழ்வு நிகழாமையின் விளைவு என்ன?

3) இந்த நூற்றாண்டிலாவது அந்நிகழ்வு புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளதா இயற்கையால்/இறையால்? அதாவது மீண்டும் அந்நிகழ்வு நிலைநிறுத்தப்பட்டுள்ளதா(revive, redeem)? 

4) ஆம் என்றால், எவ்வகையில்  புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது?

5)  அதனால் நீங்கள் அடைந்த பயன் என்ன? 

6) இப்போது குருவருள் பற்றிய சிந்தனைக்குள்  செல்வோம்.  குருவருள் என்றால் என்ன?

7)   ‘குருவருள் இன்றேல் திருவருள் இல்லை’ என்பதன் பொருள் என்ன?

8)    குரு சீடர் உறவின் அவசியத்தைப் பற்றிக்  கூறும் கவியினை நினைவு படுத்திக் கொள்ளவும்.  (ஞா.க. பாகம்-2—க.எண் 1586 அல்லது ஞா. வாழ்வும்- கவி.  148)

9)   அக்கவியில்  ‘இருளே மிஞ்சும் என்று கடைசி வரியில் கூறும் எச்சரிக்கை என்ன?

10) உறவுகள் பல உள்ளன.  அவற்றில் குரு-சீடர் உறவு என்றால் என்ன?  அந்த உறவு எவ்விதத்தில் அவசியமாக உள்ளது?  அதன் பயன் என்ன?

11) குரு-சீடர் உறவின் பயனை எவ்வாறு அடைவது?  குரு-சீடர் உறவின் பயன் எந்த விதியின் கீழ் நடைபெறுகின்றது?  அவ்விதி என்ன கூறுகின்றது?  

12)   எப்படி பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் சடுதிமாற்றத்தில் மனிதஇனம் தோன்றலாயிற்றோ, அதுபோன்றே இருபதாம் நூற்றாண்டில், ஆன்மீக உலகில் இயற்கை/இறை ஏற்படுத்திய சடுதிமாற்ற  திருப்புமுனை வரிசையில், உலகை உய்விக்க முதலாம் கருவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  நம் குருதேவர் ஜகத்குரு  வேதாத்திரி மகரிஷி அவர்கள்  குரு-சீடர் உறவின் பயனை ஏற்படுத்தும் விதி பற்றி அருளியுள்ள கவியினை நினைவு கூர்ந்து சொல்லொணா ஆனந்தமடைந்து  பிறவிப்பயனை அடைவோம். 

13) பயிற்சி என்பதால்,  மேற்கண்ட வினாக்களுக்கான விடைகளை முறைப்படுத்தி ‘குருவருள்’ என்கின்ற தலைப்பில் எழுதி பயன் பெறலாமே! 

வாழ்க வளமுடன்!

  வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க வளர்கவே திருவேதாத்திரியம்!!

குறிப்பு:

இந்தப் பயிற்சியில் இதுவரை 13 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளனஇவ்வளவு வினாக்கள் மட்டும் தான் உள்ளனவா இப்பயிற்சியில் சிந்திப்பதற்கு என ஐயம் எழலாம். இதற்கு மேலும் வினாக்கள் இருக்கும்/இருக்கலாம்/இருக்கின்றன! ஒவ்வொரு வினாக்களுக்குள்ளும் பல துணைக்கேள்விகள் மறைந்திருக்கலாம் (hidden questions). இப்பயிற்சியினை செய்யும்போது மேலும் ஏதேனும் மறைந்துள்ள துணை வினாக்கள் தங்களுக்குள் எழுந்தால் அவற்றையும் சேர்த்து சிந்தித்து விடை கண்டு மகிழவும். சிந்தனைத் திறனை மேலும் மேலும் தினந்தோறும், நொடிதோறும் வளர்த்துக் கொள்ள அன்பு வேண்டுகோள்வாழ்க வளமுடன்!

வாழ்க மனித அறிவு!                                                            வளா்க மனித அறிவு!!

 

 

வாழ்க அறிவுச் செல்வம்!                                           வளர்க அறிவுச் செல்வம்!!