வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க வினாக்கள்-309
29-06-2020 – திங்கள்
கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து இன்புறலாமே!
அறிவொளியைப் பெருக்கிக்கொள்ளலாமே! வாழ்க வளமுடன்!
- இச்சை எழும்போதே _________ கண்டிடு. இச்சை முடிந்திடச் _________ பார்த்திடு.
- இச்சை _________ எழும் _________ யூகி. இச்சை முறையாய் இயங்கிடும் அமைதியில்.
- இச்சை என்பது உயிரினப் _________ . இச்சை இயக்கமே _________ எனப்படும்
வேதாத்திரி மகரிஷி அவர்கள்
அன்பர்களே!
வாழ்க வளமுடன்.
25.06.2020 அன்று சிந்திக்க வினாக்கள் பயிற்சியில் கலந்து கொண்டு கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வேதாத்திரி மகரிஷி அவர்களின் வைரமொழிகளை வாசித்து ஆனந்தம் அடைந்து இருப்பீர்கள். இன்றைய சத்சங்கத்தில் அவ்வினாக்களுக்கு விடைகள் தரப்பட்டுள்ளன. விடைகளை சரிபார்த்து மீண்டும் முழுமையாக மகரிஷி அவர்களின் வைர மொழிகளை வாசித்து, உள்வாங்கி, மீண்டும் ஆனந்தம் அடையலாம். வாழ்க வளமுடன்!
கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து இன்புறலாமே!
அறிவொளியைப் பெருக்கிக்கொள்ளலாமே! வாழ்க வளமுடன்!
- மணியின் ______________ பூவின் ______________ நெருப்பிலே ______________ உயிரின் ஆற்றல்சிறப்பு ______________ விளங்குகிறது.
- கரு வளர வளர கருப்பையும் ______________ தேவைக்கேற்ப ______________ அடைகிறது. இதுபோல அறிவு வளர வளர அது செயல் புரிய ஏற்ற ______________ , ______________ , ______________ க் கொண்டே இருக்கும்.
- ______________ இல்லாத பொருளோ ______________ யோ இல்லை.
விடை:
- மணியின் ஓசை போல பூவின் மணம் போல நெருப்பிலே வெளிச்சம் போல உயிரின் ஆற்றல்சிறப்பு அறிவாக விளங்குகிறது.
- கரு வளர வளர கருப்பையும் அகன்று தேவைக்கேற்ப விரிவு அடைகிறது. இதுபோல அறிவு வளர வளர அது செயல் புரிய ஏற்ற வாய்ப்பும் , வசதிகளும் , பெருகிக் கொண்டே இருக்கும்.
- அறிவு இல்லாத பொருளோ நிகழ்ச்சியோ இல்லை.
வேதாத்திரி மகரிஷி அவர்கள்
அன்புடையீர்! தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப Click the link below
http://www.prosperspiritually.com/contact-us/
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!