வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-290
22-04-2020 — புதன்
வாழ்க வளமுடன்!
“இனியொரு விதி செய்வோம். அதை எந்த நாளும் காப்போம்.” என்கிறாரே மகா கவி பாரதியார்!
1. என்ன விதி அது? ‘இனி’ என்பதால் இது வரை அவர் கூறும் விதி இல்லையா?
2. அல்லது இருக்கின்றது; அதனை மேம்படுத்த வேண்டும் என்கிறாரா? சிந்திக்கலாமே!
3. அவர் கூறி, ஒரு நூற்றாண்டு ஆகின்றதல்லவா? அவரது எண்ணம் நிறைவேறிவிட்டதா?
4. ஒரு வேளை அவ்விதி இல்லையெனில் அவரது எண்ணம் எப்போது நிறைவேறும்?
5. விதி ஏற்படுத்துவதோடு அது எந்நாளும் காப்பற்றப்பட வேண்டும் என்கிறாரே மகா கவி. இதற்கு என்ன பொருள்?
6. எந்நாளும் காப்பற்றப்படக்கூடிய விதி எவ்வாறு இருக்க வேண்டும்?
சிந்திப்போம்!
வாழ்க வளமுடன்!
அன்புடையீர்! தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப Click the link below
http://www.prosperspiritually.com/contact-us/
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
குறிப்பு: நாளைய (23-04-2020) சத்சங்க நிகழ்ச்சியில் சிந்திக்க அமுதமொழி பகுதி –287 ல்
“சாகா வரமும் பரிபாக நிலையும்” பற்றி சிந்திப்போம்!