சிந்திக்க கவிகள்-8

   வாழ்க மனித அறிவு!                                  வளர்க மனித அறிவு!!

பழக்கமும் விளக்கமும்

சிந்திக்க கவிகள்-8

07-05-2020-வியாழன்

     நற்பழக்கம் (22.12.1959)

பழக்கத்திற்கும் கூர்ந்த விளக்கத்திற்கும் இடையே

பாருலகில் மனிதரெல்லாம் போராடு கின்றார்:

பழக்கத்தை வளர்ந்தமக்கள் மாற்றுவது கடினம்.

பாலர்களின் நற்பழக்கம்  பலன்விளைக்கும் எளிது.   ஞா.க.க.எண். 634

                                                         . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  

           

 பயிற்சி:

  1. என்ன கூறுகின்றார் மகரிஷி அவர்கள்?
  2. நற்பழக்கம் ஏற்படவேண்டும் என்று கருதியே அருளப்படுகின்ற அறநெறிநூல்கள்   இனி  அவசியம் இல்லை என்றவர் நற்பழக்கம் எவ்வாறு மனிதர்களிடம் ஏற்படும் என்கிறார்?
  3. பழக்கம் என்பது என்ன? வழக்கம் என்பது என்ன? 
  4. பழக்கம் எவ்வாறு ஏற்படுகின்றது?
  5. விளக்கம் என்றால் என்ன? அதிலும் கூர்ந்த விளக்கம் என்பது என்ன?
  6. நற்பழக்கத்திற்கு மனிதரெல்லாம் உலகில் ஏன் போராடுகின்றனர்?  ஏற்கனவே 01-05-2016 அன்று நமது இணையதள சத்சங்கத்தில் ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன் என்று சிந்தித்தை இப்போது மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள  Click here
  7. ஏன் வளர்ந்த மக்களுக்கு பழக்கத்தை மாற்றுவது கடினமாக உள்ளது?

 

 

படம் -1.2. எண்ணிலடங்கா பிறவிகளில் பெற்ற பழக்கப்பதிவுகள் இப்பிறவியில் மட்டுமே பெற்ற விளக்கப்பதிவை வெற்றிகொள்கின்றது. பழக்கப்பதிவுகள் விளக்கப்பதிவைத் தன்பக்கம் சாய்த்து விடுகின்றது.

பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராட்டம்

  1. இது தொடர்பாக மகரிஷி அவர்கள் அருளியுள்ள மனிதனுக்கான வரையறைகளில் ஒன்றாகவும் அமைந்த வைர மொழி என்ன?
  2. பாலர்களிடம் நற்பழக்கம் எளிதில் பயன் கிட்டும் என்கிறார்?  எப்படி?
  3. மார்கழி மாதத்தில் அவரது துணைவியார் மாக்கோலம் இடும் போது அதைச்சுற்றிலும் அருளுரை எழுதுவது வழக்கம். அவ்வாறே 22.12.1959 அன்று எழுதிய அருளுரையில் இடம் பெற்றது இப்பாடல்.  60 ஆண்டுகள் கடந்துவிட்டன.  அவரது புனித எண்ணம் எவ்வாறு நிறைவேறிவருகின்றது?

வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!