வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
13-03-2015— வெள்ளி
அகந்தை இருக்குமிடத்தில் ஆண்டவன் ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டான். ‘நான்’ ‘எனது’ என்று எண்ணிக் கொண்டு செயலாற்றுபவர்கள் எந்தக் காலத்திலும் ஆண்டவனை அடைய முடியாது.
… இரமண மகரிஷி அவர்கள்
பயிற்சி—
1) தெய்வமே எல்லா மனிதர்களாக இருக்கும் போது, இரமண மகரிஷி அவர்கள் ஏன் இவ்வாறு கூறுகிறார்?
2) ‘நான்’ ‘எனது’ என்று சொல்லாமல் எவ்வாறு இருக்க முடியும்? ‘நான்’ ‘எனது’ என்று சொல்வதே தவறா அல்லது எண்ணுவது தவறா?
3) எவ்வாறு இந்த இரண்டும் ஆண்டவனை அடையத் தடையாக உள்ளது? இதிலுள்ள எதார்த்தமும், விஞ்ஞானமும் என்ன?
4) ‘தன்முனைப்பு கரைந்து போம், காணும் தெய்வம்’ என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதும் இதனைத்தானே?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்