சிந்திக்க அமுத மொழிகள்- 52

வாழ்க மனித அறிவு    வளர்க மனித அறிவு

28-02-2015—சனி

புகழ் கள்ளைவிடக் கொடியதாகும். கள்ளைக் குடித்தால்தான் போதை வரும். ஒருவனைப் புகழ்ந்தவுடனேயே அவன் தலை சுற்ற ஆரம்பித்துவிடும். புகழ் கொடிய சத்துருவாகும்.

…. ஸ்ரீ சாந்தானந்தர்.

பயிற்சி—
1) இதனை ஏற்றுக் கொள்ள முடிகின்றதா?
2) புகழ் பற்றிய கெடுதலை எல்லா அறிஞர்களும் கூறுகிறார்கள். வேதாத்திரி மகரிஷி அவர்கள் புகழ் பற்றிக் கூறுவதென்ன?
3) புகழ் பற்றி அறிஞர்கள் கூறுவது அவர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதா? அல்லது மனித குலத்திற்கே பொருந்தக் கூடியதா?
4) புகழ் பற்றி கூறுவது அறிவு பூர்வமானதுதானா என்று கண்டுபிடிக்க முடியுமா?
5) புகழுக்கும் பேரின்பத்திற்கும் உள்ள உறவு என்ன? விளக்க முடியுமா? விளக்கவும்.
6) புகழில் சிக்காமல் இருக்க எவ்வாறு எச்சரிக்கையாக இருப்பது?

வாழ்க அறிவுச் செல்வம்    வளா்க அறிவுச் செல்வம்