சிந்திக்க அமுத மொழிகள்- 51

வாழ்க மனித அறிவு      வளர்க மனித அறிவு

 

21-02-2015—வெள்ளி

ஒரு பதார்த்தத்தை அனுபவித்தால் அல்லாது, அந்தப் பதார்த்தத்தின் ருசி தெரியாது.
ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் ஆசை ஏற்படாது.
அதுபோல் தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தால் அல்லாது அதன் மேல் பிரியம் வராது.
ஆதலால் தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லட்சியத்தைதக் கொண்டிருங்கள்.

…அருட்பிரகாச வள்ளலார்.

பயிற்சி— 1) வள்ளலார் கூறும் அருட்செய்தி என்ன?
2) “தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தல்” என்றால் என்ன?
3) தெய்வத்தை உணரும் பயிற்சிகளை மட்டுமே செய்து வந்தால் போதாதா?
4) தெய்வத்தின் மேல் பிரியம் வர என்ன செய்ய வேண்டும்?
5) தெய்வத்தை உள்ளபடி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது?
6) வள்ளலார் கூறும் இந்த அறிவுரையைச் செயல்படுத்த வேதாத்திரியம் எவ்வாறு பேருதவியாக இருக்கும்?  வாழ்க வளமுடன்.

வாழ்க அறிவுச் செல்வம்     வளா்க அறிவுச் செல்வம்