வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க அமுத மொழிகள்- 316(45)
08.07.2020— புதன்
பாவப் பதிவுகளைப் போக்கி அறிவில் மேலோங்க வேண்டியதே பிறவியின் நோக்கம்.”
– வேதாத்திரி மகரிஷி அவர்கள்
பயிற்சி:
1) இந்த அமுத மொழி எந்த வகையில் பிடித்திருக்கின்றது?
2) இந்த அமுத மொழி ஆத்ம உணர்ச்சியை எவ்வாறு தூண்டுகின்றது?
3) பாவப்பதிவை போக்குவதன் அவசியம் தெரியும். அதே வேளையில், ‘அறிவில் மேலோங்க’ என்று கூறுவதன் பொருள் என்ன?
4) எவ்வாறெல்லாம் அறிவில் மேலோங்க வேண்டும்?
5) எட்டு வார்த்தைகளை கொண்ட இந்த அமுத மொழியினை மகரிஷி அவர்கள் கூறிய நிலையிலிருந்து விளங்கிக் கொள்ளவதற்கு, ஐந்து வினாக்கள் எழுப்பிவிட்ட நிலையில் வேறு ஏதேனும் வினாக்கள் எழுப்ப வேண்டியுள்ளதா? இதற்கு மேலும் வினாக்கள் இருக்கும்/இருக்கலாம்/இருக்கின்றன! ஒவ்வொரு வினாக்களுக்குள்ளும் பல துணைக்கேள்விகள் மறைந்திருக்கலாம் (hidden questions). இப்பயிற்சியினை செய்யும்போது மேலும் ஏதேனும் மறைந்துள்ள துணை வினாக்கள் தங்களுக்குள் எழுந்தால் அவற்றையும் சேர்த்து சிந்தித்து விடை கண்டு மகிழவும். சிந்தனைத் திறனை மேலும் மேலும் தினந்தோறும் நொடி தோறும் வளர்த்துக் கொள்ள அன்பு வேண்டுகோள். வாழ்க வளமுடன்!
வாழ்க சிந்தனைச் செல்வம்! வளர்க சிந்தனைச் செல்வம்!!
வாழ்க அறிவுச் செல்வம்! வளா்க அறிவுச் செல்வம்!!