வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க அமுத மொழிகள்- 312
26.06.2020— வெள்ளி
“மலர்களைச் சுற்றி மணம் கமழும். அதுபோல்தான் செயற்கரிய செயல்களை சூழ்ந்து புகழ் திகழும்.”
. . . அறிஞர்சாக்ரடீஸ்
பயிற்சி:
- என்ன கூறுகிறார் அறிஞர் சாக்ரடீஸ்?
- மலர்களை சுற்றி மணம் கமழ்கின்றது எனில் மணம் தனியாக இருக்கின்றதா? மலர் வேறு மணம் வேறா? மணம் எவ்வாறு வருகின்றது?
- ‘செயற்கரிய செயல்களின் விளைவைப் பற்றி கூறுகையில் ‘மலர்களைச் சுற்றி மணம் கமழும்’ நிகழ்வை ஏன் உவமானம் கா்ட்டுகிறார் அறிஞர் சாக்ரடீஸ்? அவ்வாறு காட்டுவதன் நோக்கம்/எண்ணம் என்ன?
- செயல்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என விரும்புகிறார் அறிஞர் சாக்ரடீஸ்?
- புகழுக்காக செயல்களா?
- இல்லையென்றால் எதற்காக செயல்கள்?
- புகழ் – உயர் புகழ் பற்றி கூறுகின்றாரா அறிஞர் சாக்ரடீஸ்?
குறிப்பு:
அன்பர்களே வாழ்க வளமுடன்!
இந்தப் பயிற்சியில் இதுவரை 7 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. இவ்வளவு வினாக்கள் மட்டும் தான் உள்ளனவா இப்பயிற்சியில் சிந்திப்பதற்கு என ஐயம் எழலாம். இதற்கு மேலும் வினாக்கள் இருக்கும்/இருக்கலாம்/இருக்கின்றன! ஒவ்வொரு வினாக்களுக்குள்ளும் பல துணைக்கேள்விகள் மறைந்திருக்கலாம் (hidden questions). இப்பயிற்சியினை செய்யும்போது மேலும் ஏதேனும் மறைந்துள்ள துணை வினாக்கள் தங்களுக்குள் எழுந்தால் அவற்றையும் சேர்த்து சிந்தித்து விடை கண்டு மகிழவும். சிந்தனைத் திறனை மேலும் மேலும் தினந்தோறும் நொடி தோறும் வளர்த்துக் கொள்ள அன்பு வேண்டுகோள். வாழ்க வளமுடன்!
வாழ்க சிந்தனைச் செல்வம்! வளர்க சிந்தனைச் செல்வம்!!
வாழ்க அறிவுச் செல்வம்! வளா்க அறிவுச் செல்வம்!!