வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க அமுத மொழிகள் – 255
14-10-2017 — சனி
அழுக்கு அடியில் படிந்து நீர் தெளிவு அடைவது போல ஆசைகள் ஒழிந்தால் அறிவு என்னும் தெளிவு இதயத்தில் உண்டாகும். — ராஜாஜி
பயிற்சி—
1) அறிவே தெளிவா?
2) அல்லது அறிவிற்கு தெளிவு அவசியமா? அவசியம் என்றால் ஏன் அவசியம்
3) தெளிவு பெற ஆசைகளை ஒழிக்க வேண்டும் என்பதன் மூலம் என்ன கூறுகிறார் மூதறிஞர் ராஜாஜி?
4) ஆசையை அழுக்குடன் ஒப்பிடுகிறாரே? எந்த ஆசையை அழுக்குடன் ஒப்பிடுகிறார்?
5) ‘ஆசைகள் ஒழிந்தால்’ எந்தப் பொருளில் எடுத்துக் கொள்ள வேண்டும்?
6) இச்சை எனும் தலைப்பில் திருவேதாத்திரியம் அருளியுள்ள கவியினை(கவி எண்.1553 – 80 வரிகள்) நினைவு கூர்ந்து பேரின்பம் பெறவும்.
அறிவிப்பு: நாளை (15-10-2017 ஞாயிறு) ‘அறிவிற்கு விருந்து’ நிகழ்விற்கு மாற்றாக ‘சிந்திக்க அமுத மொழி பயிற்சி’ நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்ளலாகின்றது. வாழ்க வளமுடன்.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்