வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க அமுத மொழிகள் – 248
20-01-2017 — வெள்ளி
‘நம்மை அறிமுகப்படுத்துபவை நம் சொற்கள் அல்ல.
நம் வாழ்க்கையே நம்மை அறிமுகப்படுத்துகின்றது.’. . . மகாத்மா காந்தி
பயிற்சி—
1) என்ன கூறுகின்றார் மகாத்மா காந்தி?
2) மனிதகுலத்திற்கு தேவையானதைத்தானே அறிஞர்கள் பொன்மொழிகளாக வெளிப்படுத்துகின்றனர். ஆகவே இங்கே ‘அறிமுகப்படுத்துவது பற்றி கூறப்படுவதால் அறிமுகப்படுத்துவது மனிதனுக்குத் தேவையாகின்றதல்லவா?
3) அப்படியானால் ‘அறிமுகப்படுத்துவது’ என்றால் என்ன?
4) இப்பொன்மொழியின் உட்கருத்து என்ன?
5) உட்கருத்தை நேரிடையாகவே சொல்லியிருக்கலாம் அல்லவா?! ஏன் இவ்வாறு அறிஞர்கள் மறைமுகமாகக் கூறுகின்றனர்?
6) இப்பொன்மொழிக்கும் புகழ், உயர்புகழ் ஆகியவற்றிற்கும் தொடர்பு
உள்ளதா?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்