வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க அமுத மொழிகள்- 229
11-11-2016 — வெள்ளி
பகுத்தறிவால் திட்டமிட்டுவதைக் காட்டிலும் தெய்வீகப் பார்வையால் திட்டங்களை வகுத்துக்கொள்வது சிறப்பாகும். ஏனென்றால் மனித முயற்சியைக் காட்டிலும் தெய்வீக சக்தி நம்மை விரைவில் கரை சேர்க்க வல்லாதாகும்.
. . . அரவிந்தர்
பயிற்சி—
1) ‘தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்று திருவள்ளுவர் கூறுவதற்கும் அரவிந்தர் கூறுவதற்கும் ஏதேனும் முரண்பாடுகள் உள்ளதுபோல் தெரிகின்றதா?
2) அப்படியானால் இக்கூற்றிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியது என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்