சிந்திக்க அமுத மொழிகள் – 297(221)

வாழ்க மனித அறிவு!                      வளர்க மனித அறிவு!!

சிந்திக்க அமுத மொழிகள் – 297(221)

23-05-2020 — சனி

நல்ல ஆலோசனைகளை விரும்பிக்கேட்டால் திறமைகள் அதிகரிக்கும்.”

. . . கபீர்.

பயிற்சி—
1) நல்ல ஆலோசனைகளை விரும்பிக் கேட்டால் திறமைகள் எவ்வாறு அதிகமாகின்றது?

2) விரும்பிக் கேட்டால்தான் திறமைகள் அதிகமாகுமா?

3) திறமைகள் என்றால் என்ன?  என்னென்ன திறமைகள் அதிகமாகும்?

4) எந்த நியதியின் கீழ் இது நடைபெறுகின்றது?

5) அவ்வைத்தாய் அருளியுள்ள ‘அறம் செய விரும்பு’ , ‘சான்றோர் இனத்திரு’, ‘ பெரியாரைத் துணைகொள்’ மற்றும் ‘மேன்மக்கள் சொல்கேள்’ என்கின்ற அமுத மொழிகளை இதனுடன் தொடர்பு படுத்தி சிந்திக்கலாமன்றோ!

6) பொய்யாமொழிப் புலவர்   ‘பொியாரைத் துணைக்கோடல்’  பற்றி பத்து கோணங்களில் இயற்றியுள்ள பத்து குறட்பாக்களையும் இன்றைய சிந்திக்க அமுதமொழியுடன் தொடர்பு படுத்தியும் விரிவாக சிந்திக்கலாம்.

7) நம் குருநாதர் குருவணக்கம் பாடல்கள்  வரிசையில் ‘குருவின் சேர்க்கையில்’என்கின்ற தலைப்பில் “எப்பொருளை எச்செயலை” என ஆரம்பி்க்கும் பாடலில் அருளியுள்ள வேதவாக்கினை   இன்றைய அமுதமொழியுடன் தொடர்பு படுத்தி மேலும் விரிவாக சிந்தித்து, சிந்திக்கும் ஆற்றலை மேலும், மேலும் வளர்த்துக்கொண்டு  பயன்பெறலாம்.   

வாழ்க வளமுடன்!

வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!