வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
23-01-2016—சனி
பிறரை மேய்ப்பதோ, அடக்கி ஆள்வதோ இன்ப ஊற்றைக் கெடுத்துவிடும். நாம் செய்வதோடு விட்டுவிடு. அதற்குப் பதில் எதிர்பார்ப்பதை மறந்துவிடு.
…… வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பயிற்சி—
1) அடக்கி ஆள்வதில் எவ்வாறு இன்ப ஊற்று கெடுகின்றது என்கிறார்?
2) ஏன் எதிர்பார்ப்பதை மறந்து விடச் சொல்கிறார்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்.
அறிவிப்பு—
வாழ்க வளமுடன்.
23-01-2016 அன்று தைப்பூசத்திருநாள். வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொண்ட திருநாள் என்பதால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்தாக ‘வள்ளலார் அவர்கள் கடை விரித்தது விரித்ததுதான்’ என்கின்ற தலைப்பில் சிந்திக்க இருக்கிறோம்.
மேலும், அடுத்த அறிவிற்கு விருந்தில்(27-01-2016—புதன்) அவரிடம் அருள் வேண்டி வணங்கி மடல் வரைவோம்.
வாழ்க வளமுடன்.