வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
25-09-2015—வெள்ளி
“வெளிச்சம் மாத்திரம் தோற்றமாகவும், இதில் நிறைந்திருக்கும் இருள் தோற்றமற்றதாகவும் இருப்பது
போல தெய்வநிலை தோற்றமற்று இருக்கின்றது.”
…..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பயிற்சி—
1) உவமானம் அளித்துள்ளதை ரசித்து மகிழவும். இதே போன்று மகரிஷியின் எல்லா கண்டுபிடிப்புகளையும் அறிந்து கொள்வதோடு, ரசித்தும் மகிழ்ந்தும் வாருங்கள். .“தான் உயராது, மற்றவரது உயர்வை மதிக்கவும் முடியாது, ரசிக்கவும் முடியாது” என்கின்ற இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றம் உங்களிடம் நிரூபணமாகும். வாழ்கவளமுடன்.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்