சிந்திக்க அமுத மொழிகள்- 11

வாழ்க மனித அறிவு                                                                            வளர்க மனித அறிவு

22-11-2014

பயனற்ற பொருளற்ற வேதாந்தங்களைத் தூக்கி எறியுங்கள். நம்மைத் தூய்மையாக்கும் பணியை இறைவனிடம் ஒப்படையுங்கள்.

. . . . . அரவிந்தர்

கருத்து: இறை உணர் ஆன்மீகத்தில் தூய்மைதான் வெற்றியைத் தரும். செயலிலே விளைவாக வருபவன் இறைவன் என்பதால், அகம் வரைத் தூய்மையாக்கும் செயல்(upto the core. that is genetic centre- தமிழில் கருமையம்) நம்முடையதாக இருந்தால் விளைவு இறைவனுடையது. அப்போது இறைவன் தரும் விளைவு என்னவாக இருக்கும்? தன்முனைப்பு கரைந்து காணும் தெய்வம் நிகழும்.

*****

வாழ்க அறிவுச் செல்வம்                                                                       வளா்க அறிவுச் செல்வம்