63 -இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?FFC- 63 (2/?)

08-03-2015 — ஞாயிறு

கடந்த அறிவிற்கு விருந்தில், பூதவுடலை உதிர்த்தாலும் மகான்கள், சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர் என்பதனை அறிந்தோம். அந்த அருளாளர்களுடன் நம்மை இணைத்துக் கொண்டு அருட்பயனைப் பெறுவதற்கான யுக்திகளை அறிய இருக்கிறோம் இனிவரும் அறிவிற்கு விருந்து பகுதியில். முதலில் தாயுமான சுவாமிகள் எவ்வாறு மகரிஷி அவர்களுக்கு அருட்துணையாக இருந்திருக்கிறார் என்று பார்ப்போம்.
தாயுமானவர் அவதரித்தது கி.பி. 1705 ஆம் ஆண்டு. தாயுமானவரின் பூதவுடல் மறைந்த நிலையிலும், 20 ம் நூற்றாண்டில் அவதரித்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் தாயுமானவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார். இளம் வயதிலேயே, மார்கழி மாத பஜனைப் பாடலில் இடம் பெற்ற தாயுமானவப் பெருமானின் திருவருள்விலாசப் பரசிவ வணக்கப் பாடல், பால வேதாத்திரியின் ஆன்மாவை வருடிக் கொடுத்துள்ளது.

angingenathapadi

இப்பாடலுக்கான தலைப்பு சிந்தனைக்குரியது. பாடலின் தலைப்பை ‘பரசிவ வணக்கம்’ என்று மட்டுமே வைத்திருக்கலாம் தாயுமான சுவாமிகள். ஆனால் ‘பரசிவ வணக்கம்’ என்பதோடு ‘திருவருள்விலாசம்’ என்பதையும் சேர்த்து தலைப்பாக வைத்துள்ளார். இப்பாடலின் தலைப்பில், முதலில் உள்ள ‘திருவருள்விலாசம்’ என்கின்ற சொற்றொடர் என்ன தெரிவிக்கின்றது? திருவருள் என்கின்ற சொல்லின் பொருள் எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் அதனுடன் விலாசம் என்கின்ற சொல்லைச் சேர்த்திருக்கிறார் தாயுமான சுவாமிகள். பாடலின் பொருள் மட்டும் விளங்கிக் கொள்வதோடு மட்டுமல்லாது, பாடலின் தலைப்பிற்கான பொருளை விளங்கிக் கொண்டால்தான் பாடல் அருளியதன் பயன் நிறைவேறும். காரணமில்லாது அந்த தலைப்பினைக் கொடுத்திருக்க மாட்டார் தாயுமான சுவாமிகள். ‘விலாசம்’ என்பதன் பொருள் விளங்கிக் கொள்ள வேண்டும். ‘விலாசம்’ என்கின்ற சொல்லுக்கு, முகவரி மற்றும் லட்சணம் என்று பொருள் உண்டு.

ஆகவே இரண்டு பொருளையும் எடுத்துக் கொண்டாலும் சரியே. ஏனெனில் முகவரி என்று எடுத்துக் கொண்டால், தெய்வத்திற்கான (சிவத்திற்கான) முகவரி என்று பொருளாகின்றது. அதாவது தெய்வம் எது? எங்குள்ளது, எவ்வாறு உள்ளது எனத்தெளிவாகத் தெரியாமல் இருந்ததை, தெய்வம் எது என்றும், அது எங்கிருக்கின்றது, எவ்வாறு உள்ளது எனத் தெளிவாக உறுதியாகத் தெரிவிப்பதை தெய்வத்தின் முகவரி அல்லது என்று சொல்லாமல் வேறு எவ்வாறு சொல்ல முடியும்?
மேலும் தெய்வத்திற்கு உருவங்கள் பல கொடுத்து, பல்வேறு தெய்வங்களாக்கி இருந்ததை, தெய்வம் ஒன்றேதான், அது அரூபமானது(தூயவெளி) என்று கூறி தெய்வத்திற்கான லட்சணம் தெரிவிக்கப்படுவதால், இரண்டாவது பொருளையும் எடுத்துக் கொள்ளலாம். ஆகவே திருவருள்விலாசப் பரசிவ வணக்கம் என்றால் சிவமாகிய தெய்வத்திற்கான லட்சணமும் விலாசமும் என்று பொருள்.

தாயுமான சுவாமிகளின் முதல் பாடலே, மகரிஷி அவா்களின் ஆன்மாவிற்கு ஊக்களிமப்பதாக கூறுகிறார். தாயுமான சுவாமிகள் அவதரித்த காலத்திற்கும் மகரிஷி அவா்கள் அவதரித்த காலத்திற்கும் இடைப்பட்ட காலம் சுமார் 206 ஆண்டுகள். தாயுமான சுவாமிகள் பூதஉடலை உதிர்த்தது 1743 ஆம் ஆண்டு. ஆகவே, மகரிஷி அவர்களின் ஆன்ம உயர்வுக்கு, தாயுமானவர் தன் பூதஉடலில் இருந்த போது உறுதுணையாக இருக்கவில்லை. அல்லது வள்ளலாரைப் போன்றோ தாயுமான சுவாமிகளின் ஆன்மா நேரிடையாகத் தொடர்பு கொண்டதாகவும் தகவல் இல்லை. இருப்பினும் மகரிஷி அவர்கள் தாயுமான சுவாமிகளை மானசீகமாகக் குருவாக ஏற்றுக் கொண்டு பயன் பெற்றது மட்டும் தெளிவாகின்றது. மேலே உள்ள தாயுமான சுவாமிகளின் பாடல்தான், ‘நீக்கமற நிறைந்த தூயவெளிதான் இறைவன்’ என்ற தெளிவினைப் பெறுவதற்கு உதவியவைகளில் ஒன்று என மகரிஷி அவர்களே மொழிந்துள்ளார்கள். “அறிவேதான் தெய்வம் என்றார் தாயுமானார்” என்று தாம் இயற்றிய குருவணக்கப் பாடலின் ஆரம்பத்திலேயே தாயுமானாரை நினைவு கூர்கிறார் மகரிஷி அவர்கள். “அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி” என்று தொடங்கும் தாயுமானவர் பாடலில் ‘அறிவே தெய்வம்’ என்று கூறப்படவில்லை. அப்படியானால் தாயுமான சுவாமிகள் அருளிய 1452 பாடல்களில், எந்தப் பாடல் மகரிஷி அவர்கள் இயற்றியுள்ள குருவணக்கப்பாடலில், ‘அறிவே தெய்வம்’ என்று ஆரம்பத்திலேயே இயம்ப வைத்தது?

FFC-63-தேஜோ மயஇவ்வாறாக 1452 பாடல்களையுமே மகரிஷி அவர்கள் படித்திருக்கலாம். அவற்றில் மேற்கண்ட வரிகள் நம்முடைய தற்போதைய ஆராய்ச்சிக்குக் கிடைக்கின்றன.

தாயுமான சுவாமிகளின் பரசிவ வணக்கப் பாடல் மட்டுமே அவருக்கு ஊக்கமளித்ததாகக் கொள்ள முடியாது. ஒருபாடலை மட்டும் கேட்டுவிட்டு சும்மா இருந்திருக்க மாட்டார் மகரிஷி அவர்கள். தாயுமான சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை நூல்களின் வாயிலாக படித்தறிந்திருப்பார். மேலும் பல பாடல்களைப் படித்து தாயுமான சுவாமிகளின் கண்டுபிடிப்பை அறிந்து வியந்திருப்பார். தாயுமான சுவாமிகளின் இறை அனுபவங்களை உள்ளம் உருகி ரசித்திருப்பார். போற்றியிருப்பார். அதனை மனதில் கொண்டுவந்து (CONTEMPLATE) ரசித்திருப்பார். அந்த நிலையினைத் தானும் பெற வேண்டும் என அவர் உள்ளஒழுங்கோடு(உள்ளத்தில் ஒழுங்கோடு) விரும்பியிருப்பார்.
அருளாளர்களின் தரத்திற்கு அறிவினில் உயர்வது எளிய முறை இயல்பூக்க நியதிப்படி செயலாகின்றது (ஞானக்களஞ்சியம் – I பாடல் எண். 10) என்று நமக்கெல்லாம் கூறியிருக்கும் வழியை அவரும் பயன்படுத்தியிருப்பார். இயல்பூக்க நியதிப்படி, அருளாளர்களின் தரத்திற்கு தன்னை உயர்த்திக் கொள்ள பாடுபட்டிருப்பார். இந்தப் பாடலை, மகரிஷி அவர்கள், சிறுவயதில் மார்கழி மாத பஜனையில் பங்கு கொள்ளும்போது கேட்டது. அப்போதே அந்த பாடல் மகரிஷி அவர்களின் ஆன்மாவை வருடிக் கொடுத்துள்ளது. அதாவது தாயுமான சுவாமிகளின் அருள், அப்போதே, மகரிஷி அவர்களுக்கு உற்ற துணையாகியது.,
அந்த பஜனைப் பாடலில் பங்கு பெற்ற மற்றவர்களுக்கு எந்தநிலை கிட்டியதோ தெரியாது. ஆனால், நமக்கும் இந்த சமுதாயத்திற்கும், இப்படி ஒரு குருதேவர் கிடைக்க வேண்டும் என்கின்ற இயற்கையின்/இறையின் இச்சையால், அத்தகைய அருள்நிலை மகரிஷி அவர்களுக்குக் கிட்டியது. மகரிஷி அவர்களை இயற்கை/இறை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அருட்பெற்றோர்கள் வரதப்பர் மற்றும் சின்னம்மாள் கொடுத்த அருட்கருமையப்பதிவுகளைத் தாங்கி வந்த பாலவேதாத்திரியின் கருமையம்தான்.
இங்கே தாயுமான சுவாமிகள் பூதவுடலோடோ அல்லது வள்ளலாரைப் போன்று தாயுமானவரின் ஆன்மாவோடோ நேரிடையாகத் தொடர்பு கொண்டதாகத் தெரியவில்லை. அவ்வாறிருந்தால் மகரிஷி அவர்கள் அதனையும், நாம் பயன் பெறுவதற்காகக் கூறியிருப்பார். தாயுமான சுவாமிகளின் அந்தப் பாடலோடு மகரிஷி அவர்கள் நின்று விடவில்லை. தாயுமான சுவாமிகள், மகரிஷி அவா்களின் ஆன்ம தீயைக் கிளறிவிட்டுவிட்டார்(THAYUMANA SWAMIGAL HAS KINDLED THE SPIRITUAL FIRE IN MAHARISHI). ஆன்ம தீயை கிளறி விட்டதை தாயுமான சுவாமிகளின் பூதவுடல் செய்யவில்லை. தாயுமான சுவாமிகளின் ஆன்மவோ நேரிடையாகவும் செய்ததாக தெரியவில்லை.
ஆனால், சக்திகளத்தில் அருளாட்சி செய்து கொண்டிருந்த/கொண்டிருக்கும் தாயுமான சுவாமிகளின் ஆன்ம ஆற்றல் மகரிஷி அவர்களின் ஆன்ம தீயை கிளறிவிட்டிருக்கலாம். அல்லது தாயுமான சுவாமிகளின் பாடல்களில் படா்ந்திருக்கும் தாயுமான சுவாமிகளின் அறிவாற்றல் மகரிஷி அவர்களின் ஆன்ம தீயைக் கிளறிவிட்டிருக்கும் என்பது பொருத்தமாக இருக்கலாம். மகரிஷி அவர்களும், திருக்கூட்ட மரபில் வந்துள்ள அருளாளர்களின் அறிவாற்றலை பிரார்த்தித்திருக்கிறார் அல்லவா?(MAHARISHI ALSO HAS INVOKED THE BLESSINGS OF ALL SAINTS. OR THE SAINTS THEMSELVES, AS LIBERATED SOULS, HAVE VOLUNTARILY COME FORWARD TO HELP THE FELLOW-BEINGS IN THE PROCESS OF LIBERATION. THIS IS THE NOBLER AIM, DUTY AND SERVICE OF THE LIBERATED SOUL WITH WILL. ONLY FOR THAT THEY STAY IN THIS UNIVERSE)
“அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்” என்கின்ற தாயுமான சுவாமிகளின் பாடலில் ‘அறிவே தெய்வம்’ என்று எங்கும் தாயுமான சுவாமிகள் தெரிவிக்கவில்லை. ‘வெளி தான் தெய்வம்’ என்கின்ற அருட்செய்திதான் உள்ளது. இதுதான், மகரிஷி அவர்களை தூயவெளியை தெய்வம் என உறுதிபடுத்த உதவிய. மேலும் பல அறிஞர்களின் வெளியைப் பற்றிய, அருட்கூற்றுக்களும் வெளியைத் தெய்வம் எனத் தீர்மானிக்க உதவியது எனக் கூறுகின்றார் மகரிஷி அவர்கள். அந்த அறிஞர்கள் யார் என்றும், அவர்கள் என்ன கூறினார் என்றும் இப்போது தெரிந்து கொள்வோம்.

FFC-63-வெட்ட வெளி

 

FFC-63-நன்றாய் ஞானம்

 

தாயுமான சுவாமிகள், சித்தர், மற்றும் வைணவப் பெரியார்கள் ஆகியவர்களின் பாடல்களைப் படித்து உணர்ந்தபோதுதான் தூயவெளியாக நிறைந்தும், சூழ்ந்து கொண்டும், பேரியக்க மண்டலம் முழுவதையும் தன்னகத்தே தாங்கிக் கொண்டிருப்பதுதான் இறைநிலை என்கின்ற உணர்வு பிறந்ததாகக் கூறுகிறார் மகரிஷி அவா்கள்.

அதாவது இங்கே விளங்கிக் கொள்ள வேண்டியது யாதெனில்,

மகரிஷி அவர்கள்தூய வெளியைதெய்வம் என்று உறுதிப்படுத்தியதற்கு, தாயுமானசுவாமிகள், சித்தா்பெருமகனார்கள், வைணவப்பெரியார்கள்ஆகியஅருளாளர்கள், அவர்கள்பூதஉடல்களில்இருந்தபோது, உறுதுணையாகஇருக்கவில்லை.

அந்தஅருளாளர்களின்ஆன்மாக்கள், வள்ளலாரைப்போன்றுநேரிடையாகவும்வந்துஉதவிசெய்யவில்லை.

அல்லதுஒருவேளைஅந்தஅருளாளர்கள் ‘கேளாஒலி’ போல், மகரிஷி அவர்களின் காதுகளில் வந்து சொன்னதாகவும் தெரியவில்லை.

”தூயவெளியேதெய்வம்” என்றுமானுடத்தால், உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வு மகரிஷி அவர்களால் மட்டுமேமுதன் முதலில்நடந்ததன்று.

பேரறிவின்தன்மாற்றசரித்திரத்தில்‘தூயவெளிதான்தெய்வம்’என்று ஏற்கனவே அருளாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   இருந்தாலும் அதனைத் தெரிவிக்க முட்டி மோதி நின்றனர். அந்தகண்டுபிடிப்புகள் எல்லாம்,மகரிஷிஅவர்கள்தூயவெளிதான்தெய்வம்என்றுகண்டுபிடித்ததை உறுதிபடுத்துவதற்குஉதவியாகஇருந்து, வெட்டவெளி தத்துவத்தை எளிமையாக்கி  ஆன்மீகத்தில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டார் மகரிஷி அவர்கள்.

ஆன்மீக வரலாற்றில், ஆன்மீக உண்மைகளை வெளிப்படுத்தும், முடிவில்லாத, ‘ஆன்மீகத்தொடர் ஓட்டம்’, என்பது இயற்கையின்/இறையின் புனித ஏற்பாடு. அந்த முடிவில்லா ஆன்மீகத் தொடர் ஒட்டத்தில்(NEVER ENDING SPIRITUAL RELAY RACE) ஒவ்வொரு ஞானியுமே, ‘தொடர் ஓட்ட விளையாட்டுப் பந்தயத்தில்(SPORTS)‘ பங்கு பெரும் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களைப் போன்றவர்களே. அவர்களை ஞானவீரர்கள் என்றேகூட அழைக்கலாம். எப்படி? ஏன் அவ்வாறு அழைக்க வேண்டும்? வீரர் என்றால் என்ன அா்த்தம்? விளையாட்டு வீரர் என்கிறோமே அதற்கு என்ன அர்த்தம்?     தொடரும்.