FFC – 128-அறிவிற்கு விருந்து

 

வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

அறிவிற்கு விருந்து

                                                             FFC  – 128

                                                           18-10-2015—ஞாயிறு

FFC-128-18-10-2015-kural-430

 

திருவள்ளுவர் அறிவு பற்றி கூற வந்தவர் அதற்கென ஒரு அதிகாரத்தை ஒதுக்கி அறிவுடைமை என பெயர் வைத்துள்ளார். ஏன் அவ்வாறு பெயர் வைத்துள்ளார்.

உடைமை என்றால் செல்வம் என்று பொருள். ஆகவே அறிவுடைமை எனப் பெயர் வைத்துள்ளதால், அறிவை செல்வத்திற்கெல்லாம் மேலான செல்வமாகக் கருதி, அறிவை, அறிவுச்செல்வமாக்கிக் கொள்ள வேண்டுகிறார் நம்மையெல்லாம்.

   அறிவைப்பற்றிக் கூற வேண்டியதையெல்லாம் ஒன்பது குறட்பாக்களில் கூறிவிட்டு நிறைவாக அறிவைப்பற்றி ஒட்டு மொத்தமாக இரத்தினச் சுருக்கமாக (to sum up) கடைசிக் குறட்பாவில் மொழிவதைக் கவனிப்போம்.  

அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர்.” …. குறள் எண் 430

வேறொன்றும் இல்லாது இருந்தாலும் அறிவுடையவர் எல்லாம் உடையவரே ஆகிறார் என அழுத்தமாகக் கூறுகிறார். வேறு என்ன இருப்பினும், அறிவில்லாதவர், ஒன்றும் இல்லாதவர் ஆவார் என ஆதங்கத்தோடு கூறுகிறார்.  வாழ்க்கைக்கு வேண்டிய மற்ற எல்லா வளங்கள் இல்லாவிடினும், அறிவுவளம் இருப்பவர் எல்லாம் உடையவராகிறார் என்கிறார். அறிவு வளமில்லாமல்வாழ்க்கைக்கு வேண்டிய மற்ற வளங்களைப் பெற்றிருப்பவரை ஒன்றும் இல்லாதவர் என்கிறார்.

அறிவுடையவர், அறிவில்லாதவர் என்று பிரித்து, இருதரப்பினராகக் கூறியிருப்பதால் அறிவுடைய மனிதன், அறிவில்லாத மனிதன் என்று பொருளல்ல. உயிரினம் என்றாலே அறிவு உண்டு. மனித உயிரினத்திற்கு பிரத்தியேகமாக ஆறாவது அறிவு உள்ளது என மனிதன் கூறுகிறான். உண்மைதான். ஆறாவது அறிவை சரியாக, முறையாகப் பயன்படுத்தத் தெரியாது அறியாமையில் உள்ளவனுக்கு ஆறாம் அறிவு இருந்து என்ன பயன் என்று கருதிதான், அம்மனிதரை அறிவில்லாதவர் என்கிறார் அறிஞர் திருவள்ளுவர்.

ஒரு மனிதனை “எல்லாம் உடையவர்” என்பது பற்றிய சமுதாயக் கருத்து என்ன?

முதலில் வாழ்க்கைக்கு வேண்டிய செல்வவளத்திலிருந்து எல்லாவளங்களும் பெற்று,

பிறகு, துன்பமிலா இன்பவாழ்வு வாழ்ந்து,

எல்லோராலும் மதிக்கத்தக்க பெருவாழ்வு வாழ்பவரை,

‘எல்லாம் உடையவர்’ என்று சமுதாயம் கூறும். இஃதெல்லாம் மனிதனுக்கு எவ்வாறு, எப்போது கிட்டும்?

FFC-127-அறிவிற்கு விருந்து - தெனிந்த நல்லறிவு வேண்டும்

 

பாரதி கூறும் தெளிந்த நல்லறிவைக் கொண்டு அறவழியில் செல்வம் ஈட்டும் போது.

பாரதி கூறும் தெளிந்த நல்லறிவைக் கொண்டு துன்பமிலா இன்பவாழ்வு வாழ முடியும்,

பாரதி கூறும் தெளிந்த நல்லறிவைக் கொண்டு பெருவாழ்வு வாழமுடியும்.

 வேறு வழியில்லாமல்பேரறிவு, விலங்கினங்களாகத்தன்மாற்றம்அடைந்துவந்து, கடைசியாகத்தான், மனிதஇனமாகவந்துள்ளது. ஆகவேஅறிவுடன்சேர்ந்துவிட்டவிலங்கினப்பண்பானபரிணாமக்கசடை(animal imprint as evolutionary effluent that has come out during the process of transformation of Consciousness from fifth sense living beings to sixth sense living beings)நீக்கினால்தான்திருவள்ளுவர்கூறும்அறிவிற்கானவரையறையை(definition of consciousness)மனிதஅறிவால்எய்தமுடியும்.

விலங்கினங்களின் அறிவு, ஐந்து கோசங்களில், அன்னமய கோசம், மனோ மயகோசத்தைத் தவிர மற்ற கோசங்களில் இயங்கத் தேவையில்லை, அவசியமும் இல்லை.  ஆனால் மனிதன் அன்னமயகோசம், மனோமயகோசம் ஆகிய இரண்டை மட்டுமே முக்கியம் எனக் கருதாமல், மற்ற கோசங்களுக்கும் அதி முக்கியத்துவம் கொடுத்து, பிராணமய கோசம், விஞ்ஞானமன கோசம், ஆனந்தமய கோசத்திற்கு உயர்ந்து வர வேண்டும்.

விஞ்ஞான மய கோசத்தில் அறிவு சிந்திக்கின்றது. சிந்தித்தலின் விளைவாக அடுத்த கட்டமான ஆனந்தமய கோசத்திற்கு வருகின்றது. ஆனந்த மயகோசத்தில்தான் ஒருமனிதர் எல்லாம் உடையவராகிறார். எல்லாம் இருந்தும் ஆனந்தம் இல்லையென்றால் என்ன பயன்? தேங்காயை உடைத்து சாப்பிடத் தெரியாத நாயிடம் தேங்காய் கிடைத்தால் என்ன செய்யும்?   உருட்டிக் கொண்டேதான் இருக்கும் என்று ஆன்மீக நூல்கள் எடுத்து இயம்புகின்றன.

கோசம்’ என்பது ஆன்மாவின் இயக்க நிலையையும் எல்லை விரிவையும் குறிக்கும் சொல்லாகும்.

5_Gosam_spiritual_ladder

   ஆகவே அறிவு பிராணமய கோசத்திற்கு வந்து, விஞ்ஞான மயகோசத்திற்கு வருவதற்கு ஆர்வம் கொள்ள வேண்டும். அதாவது சிந்திக்க வேண்டும். சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு சிந்தனா பள்ளியில் சேர்ந்து (School of Thoughts) பண்பேற்றக் கல்வி பயில வேண்டும். அப்படி ஒரு பள்ளி உள்ளதா? உள்ளது. அவ்வைத்தாய் கூறும் இனியதை அனுபவிக்க அறிவினருடன் சேர்ந்திருத்தலும், மேலும்மேலும் இனியதை அனுபவிக்க, அறிவினரைக் கனவிலும் நினைவிலும் காண்பிக்க வைப்பதும் தான் அந்த சிந்தனா பள்ளி.

மேலும் அறிவினருடன் சேர்ந்து, இனிய பயனை அனுபவிக்க, வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதுபோல், அறிவினரை மதித்து நடந்து இயற்கையின் திறனான இயல்பூக்க நியதிப்படி தரத்தில் உயரவேண்டும். அவ்வை கூறும் நான்கு இனியவைகளில் கடைசி இரண்டையும் பெற்று விட்டால் அறிவு ஆனந்தமயகோசத்திற்கு வந்து விட்டது என்று பொருள். அவ்வையார் கூறும் நான்கு இனியவைகள் என்னென்ன என்று அடுத்த விருந்தில்(21-10-2015)அறிந்து கொள்வோம்.

 

அன்பு வேண்டுகோள்

வாழ்க வளமுடன்

உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில்(click here)பதிவு செய்யவும்.

நன்றி,

வாழ்க வளமுடன்