அயரா விழிப்புணர்வு

வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

(Constant Awareness)

அயரா விழிப்புணர்வு

FFC – 124

04-10-2015—ஞாயிறு

அயரா விழிப்புணர்வு என்கின்ற தலைப்பிலே சிந்தித்து வருகிறோம். அயராவிழிப்புணர்வு இருக்குமானால் ‘தன்குற்றம் உணர்ந்து பிறர் குற்றம் மன்னிப்பதில்’ வெற்றி அடையமுடியும். தன்னைத் திருத்திக் கொள்வது மிகவும் எளிது. யாரையும் யாரும் திருத்த முடியாது. அவரவர்களே திருந்தினால்தான் முடியும். எனவே பிறரைத் திருத்த முயல்வதை விட்டு விட்டு தன்குறையைத் திருத்திக் கொள்வதில் வெற்றி பெற்றால், ஒருவேளை அவர்களும் திருந்தலாம். “தன்குறையைக் காண்பதே ஞானம்” என்கிறார் அண்ணல் காந்தியடிகள்.

இத்தருணத்தில் கவிதை வடிவிலே மகரிஷி அவர்கள் கூறியுள்ளதை அறிந்து மகிழ்வுறுவோம்.

FFC-124-தன் குற்றம் பாடல்

 வாழ்த்தி வாழ்வோம் என்கிறார் வாழ்வியல் உண்மைகளைக்கூறும் வாழ்வியல் விஞ்ஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்கள். “தன்குற்றம் உணர பிறர் குற்றம் மன்னிப்போம்” என்கின்ற வாழ்வியல் சூத்திரத்தை அறிந்து கொள்ளும் போது மகிழ்ச்சியாக இருக்கும்.

ஏனெனில் அறிவு தன்னைத் திருத்திக்கொள்ளத் தயாராக இருப்பதால் அதற்கு மகிழ்ச்சி உண்டாகின்றது. உள்ளம் பூரிக்கின்றது. ஆனால் அந்நல்வழி குணநலனைப் பெற்றிராத, ஏற்கனவே அதனைப் பழகாத மனம் அறிவிற்கு ஒத்துழைக்க வேண்டும். ஆரம்பத்தில் மனம் ஒத்துழைக்காமல் இருக்கலாம். “நான் ஏன் பிறர் குற்றங்களைப் பெரிது படுத்தாது மன்னிக்க வேண்டும்?” போன்ற பல வினாக்களை எழுப்பி, அறிவுடன் ஒத்துழைக்காமல் இருப்பதற்கு நம்மையே பல கேள்விகள் கேட்கும்.

இதே போன்று எப்பொழுதெல்லாம் மனிதன் நல்வழிக்குத் திரும்ப முயற்சி செய்கின்றானோ அப்போதெல்லாம் மனம் ஒத்துழைக்காது. மனதைக் குறைகூறுவதில் பயனில்லை. பழக்கப்பட்ட உடல் செல்கள், பழகிவிட்ட மனம் மீண்டும் பழக்கத்தை மாற்றி, விளக்க வழியே நல்வழிக்கு வருவதற்கு தடைகளாக உள்ளன. அதனால் எந்த ஒரு எண்ணத்திற்கோ, அல்லது எந்த ஒரு பழக்கத்திற்கோ, ஆராய்ச்சி செய்யாது, சிந்திக்காமல் ஆளாகிவிடக்கூடாது. அடிமையாகிவிடக்கூடாது. ஏனெனில் மனம் பழகிவிட்டது. அதனால் சில சமயங்களில் உடல் செல்கள் கூட ஒத்துழைக்காது. மனம் கேட்கும் கேள்விகளுக்கு நாம் அதற்கு உகந்த பதிலைச் சொல்ல வேண்டும். இந்தச் சூழலில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் உலகமாந்தரை நினைத்து மகரிஷி அவா்கள் மொழிந்துள்ளதை இங்கே நினைவு கூர்வது நல்லது.
“பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே பாருலகில் மனிதரெல்லாம் போராடுகின்றார்Man is struggling between habit and wisdom.” மனிதனுக்கு சில வரையறைகள் உள்ளன. Man is a bundle of thoughts. Man is a social animal. மகரிஷி அவர்கள் மனிதனுடைய மற்றொரு வரையறையாக கூறுவது:- “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் ஒரு சீவன் மனிதன்” என்கிறார். வேறு எந்த சீவனுக்கும் இந்த வரையறை பொருந்தாது மனிதனுக்கு மட்டுமே பொருந்துகின்ற வரையறை இது.
ஏனெனில் மற்ற சீவன்களுக்கு விளக்கங்கள் தேவையில்லை. மற்ற சீவன்கள் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகியும் அவை அதற்கென அன்று இயற்கை வைத்துள்ள வழியே வாழ்ந்து வருகின்றன. தங்கள் வாழ்க்கை நெறிகளை மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் மற்ற சீவன்களுக்கு விளக்கங்கள் தேவையில்லை. மேலும் மற்ற சீவன்கள் ஐந்தறிவு அல்லது அதற்கும் கீழ் நிலையில்தான் உள்ளன. ஆனால் மனிதனின் ஆறாம் அறிவு ஐந்தறிவு நிலையிலிருந்து உயர்ந்துள்ளது. ஆதி மனிதன் தோன்றியபோது வாழ்ந்த நிலையிலேயே மனிதன் இன்று வாழவில்லை. நெறிகளை மாற்றிக் கொண்டான். ஆகவே மனிதன் இயற்கை வகுத்துள்ள வழியே வாழவில்லை. அங்கேதான் மனிதனுக்கு இயற்கை வழி வாழ்ந்து வாழ்வில் வெற்றி பெற்றவர்களின் அறிவுரை விளங்கங்கள் தேவைப்படுகின்றன. அந்த விளக்கங்கள் மனிதன் பெற்றாலும் விளக்கங்கள் வழியே வாழமுடியாமல் பழைய தீமையளிக்கக் கூடிய பழக்கங்கள் வழியே வாழ்ந்து வருவதை மகரிஷி அவர்கள் கண்டுபிடித்துள்ளதைக் கீழே உள்ள படங்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

FFC-124-படம் 1-1-பழக்கத்திற்கும் வினக்கத்திற்கும்

FFC-124-படம் 1-2 பழக்கப்பதிவு விளக்கப்பதிவு

படம். 1 கருவில் திரு இல்லாதவர்களின் ஒழுக்கத்தைக் கடைபிடிப்பதில் உள்ள போராட்ட நிலையை சுருக்கமாக விளக்கும் படங்கள்(Schematic Diagram showing the struggle between Habit and wisdom for those without Spiritual Prudence at the time of birth).

FFC-124-படம்-2 பழக்கதிற்கும் விளக்கத்திற்கும்

 

இது வரை எவ்வளவோ அறநூல்களை இயற்கை அளித்திருந்தாலும், மனிதகுலத்தால் இன்னும் அவலநிலையிலிருந்து மீண்டு வரமுடியாதற்கு, பல்லாயிரம் பிறவிகளாக பழகிய பழக்கப் பதிவுகள் காரணமாக உள்ளது. விளக்கத்தையும் மனிதன் விட முடியவில்லை. காரணம் அவன் ஆறாம் அறிவுடையவனாயிற்றே! விளக்கம் பெறுவதற்கும் அவனுக்கு பெரும் ஆசையுள்ளது. ஆனால் பல்லாயிரம் பிறவிகளாக அவனது கருமையம்(ஆன்மா) சுமந்து வந்த விளக்கமில்லாதப் பதிவுகளை இறக்கி வைக்கவோ அல்லது துடைக்கவோ முடியவில்லை. வேதாத்திரியம், கல்வி, எழுத்தறிவு, தொழிலறிவு, ஒழுக்கப்பழக்கறிவு, இயற்கைத் தத்துவ அறிவு ஆகிய நான்கு அங்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று ஐம்பது வருடங்களுக்கு முன்னர் கூறியது, இப்போது பள்ளியிலிருந்து பல்கலைக்கழகங்கள் வரை ஒழுக்கப் பழக்கறிவு, இயற்கைத் தத்துவ அறிவும் மனித மாண்புக்கல்வியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது,

எனவே விளக்கங்களும், சத்சங்கமும் தான் மனதிற்கு விழிப்பு நிலையில் பழகுவதற்கு பெரும் துணையாக இருக்கும். தன்குற்றம் உணர்வதிலும், பிறர் குற்றம் மன்னிப்பதிலும் அயராத விழிப்பு தேவை. அப்படி விழிப்புடன் இருந்து இருந்துப் பழகி, சில நேரங்களில் தவறினாலும், தொய்வு ஏற்படாது முயற்சி செய்து, செய்து பழகப்பழக, பின்னர் அந்நல்வழிக் குணநலன் கைவல்யாமாகும். சித்திரமும் கைப்பழக்கம் என அவ்வைத் தாய் கூறியுள்ளது போல் எந்த தீய பழக்கத்தையும் நற்பழக்கமாக மாற்றி அமைத்திட பழகவேண்டும். அதோடு அவ்வைத்தாய் கூறுவது போன்று அறிவினரைச் (அறிவை அறிந்த குருவைச்) சேர வேண்டும். அடுத்த புதனன்று (07-10-2015) சந்திப்போம். வாழ்க வளமுடன்.