அயரா விழிப்புணர்வு – 3 / ?

 

வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

அயரா விழிப்புணர்வு – 3 / ?

FFC – 36

                                                                                             10-12-2014–புதன்

(Constant Awareness)

குறிப்பு: சென்ற விருந்தில்(FFC-35, 07-12-2014) சில தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனையும் படித்துப் பயன் பெறவும். புதிதாக சேர்க்கப்பட்டவை ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும். வாழ்க வளமுடன். இப்போது இன்றைய விருந்திற்குச் செல்வோம்.
நான் யார் என்கின்ற வினாவிற்கு பதிலைக் கருத்தியலாகவும், அதற்கான பயிற்சியினை செய்முறையாகவும் கொடுத்து வருகின்றது மனவளக்கலை. அறிவிற்கு வேண்டிய மூன்று வளர் நிலைகளை ஏற்படுத்தும்படியாக மனவளக்கலையை வடிவமைத்திருக்கிறார் வாழ்வியல் விஞ்ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள். அவையாவன:

1) மனம் விரிவு பெறுதல்.

மனம் விரிவு பெற வேண்டும். அப்படியென்றால் என்ன? மனம் என்பது விரிவடையக்கூடிய Elastic பொருளா? தற்போது மனம் குறுகியுள்ளது. தான் தன் குடும்பம் என்கின்ற அளவிலேதான் உள்ளது மனதின் நிலை. ஆனால் வாழவைத்துக் கொண்டிருக்கின்ற சமுதாயத்தின் மீது அக்கறை கொள்ளும் அளவிற்கு மனம் இன்னும் விரியவில்லை இது வரை. ஆனால் மனவளக்கலையின் வாயிலாக, மனதை, அதனுடைய மூலம் (origin) வரை விரியச் செய்து அந்த மூலத்திற்குள் இருக்கும் சமுதாயத்தின் மீதும் அக்கறை கொள்ளும் அளவிற்கு இயற்கை இப்போது வழிவகை செய்து வருகின்றது.

மனம் குறுகியுள்ளது என்றால், தன்முனைப்பால், “தான்”. “தனது” என்கின்ற இரு எண்ண கோடுகளைக் உருவாக்கிக் கொண்டது என்கிறார் மகரிஷி அவர்கள். “தான்” “தனது” என்பது வெறும் எண்ணக் கோடுகள் தானே தவிர, உண்மையில்  –இயற்கையில் அவ்வாறு இல்லை. மனிதனைத்தவிர மற்றவைகள் பிறர்க்காகத்தான் வாழ்கின்றன.

மரம் தனக்கென கனிகளை வைத்துக் கொள்வதில்லை.  வைத்துக்கொண்டால் பழம் அழுகிவிடும்.  பசுவை எடுத்துக்கொள்வோம். பசு தனக்காக பாலை உற்பத்தி செய்துகொள்வதில்லை.தன் கன்றிற்கு கொடுப்பதுடன் மனிதனுக்கும் கொடுக்கிறது.  பசுவின் மடியிலுள்ள பாலை அளவுக்கு அதிகமாக கன்று மட்டுமே பருகினாலும்   கன்றிற்கு பேதியாகும்.  பசு மடியில் பாலை கரக்காமல் விட்டு விட்டாலும் பசுவிற்குத் துன்ப உணர்வு ஏற்படும்.

இயற்கையில் மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களுக்கும் “தான்”, “தனது” என்கின்ற எண்ணக்கோடுகள் இல்லாமையால் துன்பங்கள் இல்லை. இப்படி இயற்கை அமைப்பு இருக்கும் போது, மனிதன் மட்டும் இயற்கையைப் பற்றி  அறியாத நிலையில்  தன்முனைப்புடன், “தான்” “தனது” என்கின்ற இரு எண்ணக் கோடுகளுடன் இருப்பதால் அந்த இரண்டு தம்பதிகளுக்குப் பிறக்கும் ஆறு அவலக்குழந்தைகள் தான் பேராசை, சினம். கடும்பற்று, உயர்வுதாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகியவையாகும் என்கிறார் இயற்கையியல் மற்றும் வாழ்வியல் விஞ்ஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

வேதாத்திரியம் ௬றும் ”தான்“ “தனது“ என்கின்ற தன்முனைப்பு விஞ்ஞானத்தில் (Science of Ego) இயற்கையைப் பற்றியும் உள்ளது. மனித வாழ்க்கையைப் பற்றியும் உள்ளது. இயற்கையின் ஆதிநிலையாகிய பேரறிவின் தன்மாற்ற நிகழ்ச்சியைப்பற்றிய விஞ்ஞான உண்மையும் உள்ளது.

அதே நேரத்தில் மனிதனின் வாழ்க்கைச் சிக்கலுக்குக்கான அறிவு பூர்வமானக் காரணத்தையும் குறிப்பிடுகிறார். ஆகவே மகரிஷி அவர்களை இயற்கையியல் மற்றும் வாழ்வியல் விஞ்ஞானி என அழைத்து மகிழ்வதோடு மட்டமல்லாது, அதே நேரத்தில், அந்த மகிழ்ச்சி இந்த வாழ்வியல் கல்வி, உலக மக்களிடையே பரவிட ஊக்கத்தையும் அக்கறையையும் நமக்கு அளிக்குமாக. உலக மக்கள் அனைவரும் தனது பூர்வீக சொத்தான அமைதியை அனுபவித்து வளமுடன் வாழட்டும்.

சிந்திக்கவும் கீதாசாரம் கூறுவதை.

”எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றவருடையதாகின்றது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்” இதுவே உலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமாகும்” என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.)

விளக்கம்:- தந்தைக் கட்டிய வீடு தந்தைக்குப் பிறகு மகனுக்கு சென்று விடுகின்றது. மகனுக்குப்பிறகு பேரனுக்குச் சென்று விடுகின்றது. தந்தைக் கட்டிய வீட்டினை, இப்பூவுலகத்தைவிட்டுப் போகும் போது தந்தை எடுத்துச் செல்ல முடியவில்லை. ஆனால் தந்தை முயற்சி செய்தால் வீட்டிற்கெல்லாம் வீடாகிய வீடு பேற்றினை மனவளக்கலையால் அறம். பொருள். இன்பம் ஆகிய மூன்றினையும் அனுபவித்து பெறுதற்கெல்லாம் அரிய பேறான வீடு பேற்றினை அடையாலாம். வாழ்க மனவளக்கலை. வளா்க மனவளக்கலை. வாழ்க மனவளக் கலைஞர்கள். வளர்க மனவளக் கலைஞர்கள்.

இந்த உண்மையை அறிவு அறியாததால் மனம் குறுகி நிற்கின்றது. பாவம் அறிவு என்ன செய்யும்? பரிணாமக் கசட்டினை அகற்றுவதற்கே அதற்குப் பல பிறவிகள் தேவையிருக்கின்றது. பரிணாமக் கசடு அகன்றால்தான் புலன்மயக்கம் தீரும். அந்த நிலையில்தான் கீதாசாரம் விளங்க ஆரம்பிக்கின்றது. தின்றுத் திரிந்து உறங்கிக் கொண்டிருந்த நிலையில் அறிவை விழித்தெழச் செய்திருக்கின்றது வேதாத்திரி மகரிஷியின் வாயிலாக இயற்கை. பரிணாமக் கசடாலும், புலன்மயக்கத்தால் மனதிற்கு, அறவே வேண்டா குணங்களானப் பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய அறுகுணங்கள் ஏற்பட்டுவிட்டன.

இதன் விளைவு செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு என்கின்ற இயற்கை நீதிப்படி விளைவு தனக்கேத் துன்பங்கள் வரும். பிறர்க்கும் துன்பம் வரும். ஆகவே மனதை விரிவு பெறச் செய்ய வேண்டும். இதற்கான பயிற்சியாக உயிர் மீது தவம் இயற்றும் தவமுறை வகுத்துக் கொடுத்து, உடலளவிலே குறுகியிருக்கும் மனதை இப்பிரபஞ்சம் வரையும், அதற்கும் மேலாக எங்கிருந்து மனம் உருவாகியதோ அந்த எல்லையில்லாப் பெருவெளி வரை மனதை விரித்து பழுகுவதற்கானப் பயிற்சியினைத் அளித்துள்ளார். மகரிஷி அவர்கள்.

2) இயற்கை விதி அறிதல்.

மேலும் மனிதன் பெரும்பாலும் தவறுகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறான். அவன் செய்யும் தவறுகள் சொல் மற்றும் செயல் வடிவில் இல்லையாயினும் அது எண்ண வடிவில் இருந்து கொண்டுதான் உள்ளது. தவறுகள் எண்ண வடிவில் இருந்தாலும் அதற்கும் விளைவுகள் உண்டு. அதனால்தான் மனதை சரி செய்யக்கூடிய, செம்மைப்படுத்தக் கூடிய கலையை உருவாக்கி அதற்கு மன+வளக்கலை எனப் பெயரிட்டுள்ளார். இத்துடன் இல்லாமல் அதனை ஒரு அளவு கோலால் சரிபார்த்துக் கொள்ளச் செய்துள்ளார். அதுதான் அறிவிற்கான மூன்றாவது வளர் நிலை. அதனை சத்சங்க நிகழ்வுப்படி ஞாயிறன்று சத்சங்கத்தில் சிந்திப்போம். வாழ்க வளமுடன்.

                          வாழ்க மனித அறிவு                                                             வளர்க மனித அறிவு